Monday, December 31, 2012

வங்கி பணவைப்பு புத்தகம்



மோனிக்காவும் நிக்கும் திருமணம் முடித்தனர், திருமண நாள் நிறைவில்
மோனிக்காவின் தாயார் மோனிக்காவிடம் 1000 ரூபா பணம் வைப்புச்செய்து ஓர் புதிய வங்கி கணக்கு புத்தகத்தை கொடுத்து, உனது வாழ்க்கையில் சந்தோசமான நிகழ்வுகள் நடக்கும் போது கொஞ்சம் பணத்தை இதில் வைப்புச் செய்து அதற்கான காரணத்தையும் எழுதி வைக்குமாறு சொல்லி அவர்களின் திருமணத்தின் ஞாபகார்த்தமாக அந்த பணம் வைப்புச் செய்த புத்தகத்தை கொடுத்தார். சிலகாலங்களுக்கு பின்னர் இப்புத்தகத்தை பார்க்கும் போது நீர் உன் வாழ்க்கையில் அடைந்த ஆனந்தம் உனக்கு புரியும் என்று சொன்னார்.

மோனிக்கா இதை நிக்கிடம் பகிர்ந்து இது ஓர் நல்ல ஆலோசனை எனவும்
அடுத்த பணவைப்புக்கான நிகழ்வை மிக ஆவலோடு எதிர்பார்திருந்தனர்

அவர்களின் பணவைப்பு விபரம்.....

* 7 Feb: Rs.100, first birthday celebration for Nick after marriage
* 1 Mar: Rs.300, salary raise for Monica
* 20 Mar: Rs.200, vacation trip to Bali
* 15 Apr: Rs.2000, Monica got pregnant
* 1 Jun: Rs.1000, Nick got promoted
* ..... And so on... 

நாட்கள் செல்ல செல்ல மோனிக்காவிற்கும் நிக்கிற்கும் கருத்து முரன்பாடுகள் ஏற்பட்டு அவர்களிடம் சந்தோசமில்லாமல், கடைசியில் இருவரும் பிரிவது என முடிவெடுத்தனர்.

மோனிக்கா தன் தாயாரிடம் சென்று, நடந்தவற்றை சொல்லி, தனக்கு
நிக்கை திருமணம் செய்வதிற்கு எடுத்த முடிவை கற்பனை செய்யக்கூட முடியவில்லை என்று சொன்னார்.


 

தாயார் மோனிக்காவிடம் சொன்னார், உனக்கு திருமணவாழ்க்கை கசப்பாக இருந்தால் உனது விருப்பப்படி செய் என சொன்னார், அதற்கு முன்னர் தான் கொடுத்த பண வைப்பு புத்தகத்தை ஞாபகப்படுத்தி அதிலுள்ள பணம் முழுவதையும் செலவு செய்யுமாறு சொன்னார், ஏனெனில், அந்த கசப்பான வாழ்க்கை எதுவும் பதிவாக இருக்கக்கூடாது

மோனிக்காவும் அதுதான் சரி என சிந்தித்து, மறு நாள் வங்கிக்கு பணம்
எடுப்பதற்காக சென்று வரிசையில் காத்திருந்த வேளையில், அந்த பணம்
வைப்புச் செய்ததிற்கான காரணங்களை பார்த்து பார்த்து இருந்தவேளையில் பழைய ஆனந்தமான நினைவுகள் ஞாபகத்திற்கு வந்த போது, மோனிக்காவின் கண்கள் கலங்கியது, உடனே பணத்தை எடுக்காது வீட்டிற்கு திரும்பி சென்றார் மோனிக்கா

வங்கி கணக்கு புத்தகத்தை, நிக்கிடம் கொடுத்து பிரிவதற்கு முன்னர் அப்பணம் முழுவதையும் செலவு செய்யுமாறு கூறினாள்

அடுத்த நாள் நிக் அந்த புத்தகத்தை மோனிக்காவிடம் திரும்பவும் கொடுத்தார், அதை மோனிக்கா பார்த்த போது அதில் 5000 ரூபாய் மேலதிகமாய் வைப்பு செய்யப்பட்டிருந்தது அத்துடன் அதற்கான காரணம் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது
'This is the day I notice how much I've loved you all these years. How much happiness you've brought me.'

அவர்கள் கட்டியணைத்து ஆனந்தகண்ணீர் மல்கி அந்த பணவைப்பு புத்தகத்தை பாதுகாப்பாக வைத்தனர்.

"When you fall in any way, don't see the place where you fell instead see the place from where you slipped. Life is about correcting mistakes."

----------------------------------------------------------------------------------------
ஈகரை தமிழ் களஞ்சியம்

No comments:

Post a Comment