Friday, June 21, 2013

வெள்ளிக்கிழமையை இல்லாத நாடு




வியாழக்கிழமைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை தானே வரும், வரவேண்டும். ஆனால் இரண்டு பசிஃபிக் தீவு நாடுகளில் மட்டும் வியாழக்கிழமைக்குப் பின்னர் சனிக்கிழமை வந்திருக்கிறது. ஆச்சரியப்படாமல் தொடர்ந்து படியுங்கள்.

சமோவா, டொகிலாவ் ஆகிய இரண்டு பசிஃபிக் தீவு நாடுகளில் சுமார் 182,000 மக்கள் வசிக்கிறார்கள். இந்த இரு நாடுகளும் கடந்த வியாழக்கிழமையன்று தங்கள் கால மண்டலத்தை (Time Zone) மாற்றி அமைத்துக்கொண்டன. இதனால் ஏற்பட்ட பாரிய விளைவாக, வியாழன் முடிவடைந்த பின்னர் அவர்களுக்கு சனிக்கிழமை வந்துவிட்டது. இதன்மூலம் இத்தீவு வாசிகள் அருகிலுள்ள நியூசிலாந்து நாட்டின் நேரத்துடன் ஒத்துப்போவதுடன், ஒரே நேரத்தில் இத்தீவு வாசிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னெடுக்க முடியுமாம். இத்தகவலை சமோவா பிரதமர் டுய்லாயிப்பா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு நூறாண்டாக, இந்த இரு தீவுகளும், அருகிலிருக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒருநாள் பிந்தங்கியிருந்தன. இதற்குக்காரணம் 1892லிருந்து இருதீவுகளும் இதுவரை, அமெரிக்கத் தேதிக்கோட்டை பின்பற்றிவந்ததுதான். (தேதிக்கோடு பசிஃபிக் பெருங்கடலை இரண்டாகப் பிரிக்கிறது). அருகிலிருக்கும் வளர்ந்த நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றுடனான வியாபாரத் தொடர்புகளுக்கு இந்த மாற்றம் பெரிதும் துணைபுரியும் என்று சொல்லப்படுகிறது. சமோவாவின் தலைநகரான ஏபியாவிலேயே தனது பிரதான அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளதால் டொகிலாவ் தீவும் சமோவாவைப் பின்பற்றி, கடந்த 'வெள்ளிக்கிழமையை' இழந்துள்ளது.


*****************
இந்நேரம்

பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்..



திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.

அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடது என்பது தான் அந்த போட்டி.

போட்டி துவங்கிய சில மணி நேரத்திலே கணவரின் பெற்றோர்கள் கதவை தட்டினர். கணவர் கதவை திறக்கலாம் என்று நினைக்கும் போது, போட்டி நியாபத்துக்கு வரவே கதவை திறக்காமலே இருந்தார். அவரின் பெற்றோரும் சிறிது நேரம் கதவு அருகிலேயே நின்றிருந்து, கதவு திறக்காததால் சென்று விட்டனர்.

சில மணி நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் கதவை தட்டினர். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். மனைவியால் தன் பெற்றோர் வெளியே நிற்பதை பார்க்க முடியாமல் கண் கலங்கி கொண்டே "என்னால் இனி மேலும் சும்மா இருக்க முடியாது" என்று கூறியவாரே கதவை திறந்து விட்டாள்.

கணவரும் ஒன்றும் சொல்லவில்லை .

நாட்கள் உருண்டோடின. அவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் பிறந்தனர்.

அவள் கணவர் தனக்கு மகள் பிறந்ததை கொண்டாட பெரிய விருந்து ஏற்பாடு பண்ணினார். மகிழ்சியுடன் விருந்து நடந்து முடிந்தது.

அன்று இரவு அவர் மனைவி,

"நமக்கு மகன்கள் பிறந்த போது இந்த அளவு நீங்கள் கொண்டாடவில்லையே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த‌ கணவர் சொன்னார்,

"என் மகள் தான் நாளை எனக்காக கதவை திறப்பாள்"

**********


பெண்கள் எப்போதுமே விலை மதிப்பில்லாதவர்கள்,பாசத்துக்குறியவர்கள்.
பெண்மையை போற்றுவோம்

**********
நன்றி முகநூல்