Saturday, June 22, 2013

பக்கத்து வீடுகள்.....!!!!




நம்மிலும் அதிகமாய் 
நம்மைத்தெரிந்தவர்களாய் 
பக்கத்துவீட்டுக்காரர்களே 
இருக்கிறார்கள்....!!! 

திருமணங்களின் போது 
மணமக்கள் மீதான நம்பிக்கைகளை 
பக்கத்து வீடுகள்தான் தருகின்றன....! 

ஊருக்குள் எது நடந்தாலும்... 
சுவாரசியம் பிசகாமல்; 
சுடச் சுடச்சேதி சொல்வதில்....; 
நாலு சுவருக்குள் முடிந்த 
நம் வீட்டுச் சண்டைகளை.... 
தெருவெல்லாம் நாறடிப்பதில்.... 
பக்கத்துவீடுகள்தான்; 
காலம் காலமாய்... 
முதலிடத்திலிருக்கின்றன...!!! 

''அவன் என்னமா கொழுத்திருக்கான்....'' 
நீயும் இருக்கியே ; ஒல்லிக்குச்சி.....!!'' 
''அவள் என்னமா படிக்கிறாள் '' 
'நீ.......??? கழுத...கழுத....!!!' - என 
வாழ்க்கை நெடிகிலுமான ஒப்பீடுகள் 
பக்கத்துவீட்டோடுதான் 
எப்போதும் நடக்கின்றன....!!! 

கடையைப்புரட்டி... 
காசைக்கொட்டி... 
வாங்கிய சேலை; 
வடிவாய்த்தானிருந்தது....! 
பக்கத்து வீட்டுக்காரியின் 
சேலையைப் பார்க்கும்வரை....!!! 

செத்துப்போனவன்... 
பிணவாடை அடிக்கிறவரை... 
பக்கத்துவீட்டுச் சங்கதிகள்.... 
யாருக்கும் தெரிவதில்லை- மேலை நாடுகளில் !!! 
நம் சின்ன அழுகுரலில் 
ஊரே திரளும்.... 
உதவிக்கு ஓடும் - நமது வீடுகளில்...!!! 

என்ன நடக்குது.... 
யார் வருகிறார்கள்....???? 
ம்ம்...இன்றைக்கு மீன் கறி - என 
பலரின் அகழ்வாராய்ச்சி.. 
பக்கத்து வீடுகளுக்குள்தான.! 

வீட்டோடு உடம்பு ....... 
காதும் கண்களும்; 
அடுத்தவன் வீட்டுக்குள் மேய்ந்தபடி.....! 

எது எப்படியோ; 
எவருக்கும் தெரிவதில்லை...! 
வேடிக்கை எனும் பெயரில் 
இவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது 
பக்கத்து வீட்டானின் வாழ்க்கை என....!!!! 
வாழாமலும் ,வளராமலும் 
பாழ்பட்டுக் கிடக்கிறது......... 
இவர்களுக்கான வாழ்க்கை....!!!!


Raheema Faizal

இந்த படங்கள்.. சொல்வது என்ன?

உலகை உலுக்கிய பல படங்கள் வெளிவந்திருக்கிறது, அவையனைத்தும் உலக சரித்திரத்தை
மாற்றியும் உள்ளது.
இங்கு ஒருவர் தான் எடுத்த புகைப்படத்தை எண்ணி தற்கொலையே செய்துகொண்டுள்ளார்
அவர் எதற்காக தற்கொலை
 செய்து கொண்டார் என்பது பற்றிய மர்மம் இது.
கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர்.
உலகப் புகழ்பெற்ற
புகைபபடக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும்
நல்ல புகைப் படங்களை எடுக்க
வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன.
இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது.
 அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.
குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருக நீரின்றி பசி,
தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.
பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின்
தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.
இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க
விட்டுக் கொண்டு உள்ளத்தை
உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது
 அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது
நற்பேறு என்றுதான் கூற வேண்டும்....

இந்த படங்கள்.. சொல்வது என்ன:




பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில்
இ எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து
செல்வதைக் கண்டார்.



அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும்
முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக்
கூடியதாக இருந்தது.




தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு
பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.



எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி
. இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில்
அடக்கிக் கொண்டு ‘க்ளிக்' செய்தார்.



இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.
இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக்
கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை
‘நியூயார்க் டைம்ஸ்' பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.




இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது.
இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி
மூலம் தொடர்புக் கொண்டனர்.




1994இமே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப்
பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப்
பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.




விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும்
ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த
சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்.
அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும்
அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக்
கழுகையாவது விரட்டி இருக்கலாம்.



புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப்
பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.
கெவின் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது.
அதில் சில வரிகளே இருந்தன. முதல் முதல் வரி
I am Really, Really Sorry.

மனிதனுக்கு மனிதத்தன்மை என்பது நிச்சயம் வேண்டும் என்பதை கெவின் மரணம் நிருபித்துவிட்டது.

ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த
பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.
****************
நன்றி : தமிழ் கிஸ்பொத்