Thursday, October 31, 2013

மிஸ் யூ …..


                                 


சின்ன வெங்காயம் பற்றிய ஒரு தமிழ் நாட்டு பதிவரின்  அருமையான எண்ணங்கள் ...!

நம்ம வாழ்க்கையில், ஒருத்தர் நம்ம கூடவே இருக்கிர வரையில்,

அவர்களுடைய அருமை நமக்கு

தெரியாது! அவர்கள் தூர விலகி சென்ற பின்னர் தான், அவர்களுடைய

நியாபகங்கள் நம்மை துரத்தி துரத்தி வரும். இந்த பதிவு கூட, நான் ரொம்பவே

மிஸ் செய்யர ஒருத்தர பத்தி தான்! சின்ன வயசில், எனக்கு அவர அவ்வளவா

பிடித்ததில்லை! அவரை நேரில் கண்டாலே, ஒட்டம் பிடித்து விட்டு தான் மறு

வேலை, இல்லையேல் அழ அழ வைத்து விடுவார்! ஆனால் இவர் இல்லாம

நான் இல்லை என்ற நிலைமை ஒரு கால கட்டத்தில் வரும் என்று கனவில்

கூட நினைத்ததில்லை!

அவர் இப்போ எங்க கண்ணில் பட்டாலும், முதல் ஆளாய் அழைத்து வருவது

நான் தான்! இவ்ளோ ஸ்பெசலானவர், வேற யாரும் இல்ல.. நம்ம

Mr.சின்னவெங்காயம் அவர்கள் தான்!!

இவர் நம் தமிழ் நாட்டின் செல்ல பிள்ளை! தமிழ் நாட்டை

தாண்டி, எந்த ஊர் சென்றாலும், முதலில் தேடுவது இவரை தான்! தமிழர்,

மலையாளீ, இவர்களை தவிர, வேறு மாநிலத்தவர் எவருக்கும், இதன்

அருமை தெரியவில்லை! பெரிய வெங்காயமே, அவர்களுடைய விருப்பம்!

இதை எப்போ உரிச்சி, எப்போ வேலையை முடிக்க, என்று எரிச்சலை

வெளிப்படுத்துவார்கள்!

உண்மைதான், அதை தோலை உரித்து, வெட்டுவது,

என்பது அவர்கள் சொல்வது போல பெரிய வேலை தான், ஆனால், அவற்றின்

நற்குணங்களை அறிந்தோர் குறை சொல்ல மாட்டார்கள்!

இப்போ வெங்காயம் வெட்டுவதற்கு என்று நிறைய கருவிகள் வந்து விட்டன,

இதே மாதிரி, வெங்காய தோலை உரிப்பதற்க்கும், ஏதாவது கண்டுபிடித்தால்

நன்றாக இருக்குமே, என்று நானே பல முறை யோசித்ததுண்டு! நான்

சமையல் செய்ய படித்த புதிதில் இருந்து இன்று வரை, அழாமல் வெட்டியதே

இல்லை! நமக்கு ரொம்ப பிடிச்சவங்க, சில நேரம் காரணமே இல்லாமல் அழ

வைப்பர்கள், அது மாதிரி தான் இதுவும் என்று மனதை தேத்தி கொள்வேன்!

எனக்கு கல்யாணம் முடிந்து, புகுந்த வீடு சென்ற புதிதில், என்

அத்தைஎன்னை, வெங்காயம் வெட்டவே விட மாட்டார்… அவருக்கு பயம்,

நான் அழுது, அழுது வெட்டுவதை பார்த்து, என்ன புது பெண், வந்து கொஞ்ச

நாள் கூட ஆக வில்லை, இப்படி அழுதே என்று யாரும் சொல்லி

விடுவார்களோ என்று!! எவ்வளவு அழுகை வந்தால் என்ன, எனக்கு எந்த

குழம்பு, எந்த கூட்டு வைத்தாலும், கை நிறைய வெட்டி போட்டால் தான்

திருப்தியாக இருக்கும்!




என் பசங்க இருவரும், நான் சிறு வயதில் செய்தது போலவே,

வெங்காயத்தை, தனியாக எடுத்து தட்டின் ஒரமாக வைத்து விடுவர்!

அதனால் நான், வெங்காயம் போட்டதே தெரியாமல், குழம்பு

வைத்து, அவர்களை சாப்பிட வைத்து விடுவேன்! சும்மாவா, சின்ன

வெங்காயம், உடம்புக்கு குளிர்ச்சியை தரும், நம் ரத்தத்தை சுத்திகரிக்கும்

ஆற்றல் கொண்டது! மெட்ராஸ் ஐ, போன்ற கண் நோய், வரும் சமயங்களில்

எல்லாம், இந்த வெங்காயத்தை, வீட்டினுள், ஆங்காங்கே உரித்து

வைத்து விட்டால், ஒருத்தரிடம் இருந்து, இன்னொருவருக்கு பரவாது.. மிக

சிறந்த கிருமி நாசினி! காலில் முள் குத்தி வலி எடுப்பவர் கூட, இந்த சின்ன

வெங்காயத்தை நன்கு வதக்கி, ஒரு துணியில் வைத்து கட்டி விட்டால், முள்

தானாக சிறிது நேரத்தில் வெளியில் வந்து விடும்.. இப்படி நிறைய

பாட்டி வைத்தியங்கள் சொல்லிட்டே போகலாம்!

சரி, சரி நம்ம விஷயத்துக்கு வருவோம், இப்போ நாங்க இருக்கிர

குண்டூரில் சின்ன வெங்காயம் இல்லை! கல்யாண சீசன் சமயங்களில்

மட்டுமே விற்பனை செய்ய படுமாம்! விசேஷங்களின் போது, சாம்பாரில் இந்த

சின்னவெங்காயத்தை போடுவார்களாம்! இப்பெல்லாம், எவ்வளவு

கவனமாக சமையல் செய்தாலும், ஏதோ ஒன்றின் சுவை குறைந்தது

போலவே இருக்கிரது! நிஜமாவே, ரொம்ப மிஸ் செய்யரேன், Mr.சின்ன

வெங்காயம், மிளகாய் குழம்பு, வெந்தய குழம்பு, மீன் குழம்பு எதுவுமே, நீங்க

இல்லாமல் ருசிக்கவே இல்ல! அய்யோ, நம்ம ஊரு சின்னவெங்காய

பக்கோடா, எல்லாம் கண்ணுக்குள்ளேயே இருக்குது, போதும் இதுக்கு மேல

யோசிச்சா அழுகை வந்து விடும்! சின்ன வெங்காயம், உரிக்க, உரிக்க உள்

ள ஒன்னுமே இல்ல தான், ஆனால் என் உள்மனசுல, அதுக்கு நிறையவே

இடம் இருக்கு!!!!!!!


~~~~~~~~~~~

நன்றி 
mahalakshmivijayan

எண்ணங்கள் பலவிதம்

கிஃப்டுக்கு அடிமையாக்காதீர்கள் !

         

இரண்டு குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி அந்த வீட்டின் காலை பொழுது மிகவும் பரப்பரப்பாக இருக்கும். குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்புவதற்கு போதும், போதும் என்றாகிவிடும். காலையில் பல் துலக்குவது ஆரம்பித்து, இவினிங் ஹோம் வொர்க் செய்வது அத்தனைக்கும் தொல்லைப்படுத்திவிடுவார்கள். நான் பால் குடிக்க வேண்டும் என்றால் நீ என்னை கடைக்கு கூட்டிட்டு போகவேண்டும் என் நிபந்தனையுடன் தான் அவர்களின் அன்றாட வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள்.

இப்படி குழந்தைகள் தங்கள் செய்யும் அத்தனை வேலைக்கும் பதிலாக கொசுராக ஏதாவது வேண்டாதா பொருளையே அல்லது தேவையற்ற காரியங்களை செய்வதற்கும் லஞ்சமாக எதையாவது கேட்கிறார்கள். குழந்தைகளின் இந்த பழக்கத்தை பெற்றோர்கள் எப்படி சமாளிப்பது? இந்த பழக்கம் வருவதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விளக்குகிறார் கேலிபர் அக்டாமி பள்ளியில் குழந்தைகள் மனநல ஆலோசகாராக பணிபுரிந்துவரும் வந்தனா மனோஜ்.

குழந்தைகள் இப்படி தங்களுடைய வேலை செய்வதற்கு ஏதாவது தர வேண்டும் என சொல்லும் பழக்கம் பெற்றோரிடம் இருந்துதான் வந்தது. அவர்கள்தான் ஆரம்பத்தில் குழந்தை எதையாவது செய்ய மறுத்தால் உடனே குழந்தைக்கு பிடித்த பொருளை கொடுத்து அந்த காரியத்தை செய்யுமாறு சொல்வோம். நீ பல் தேய்ச்சினா நான் உனக்கு சாக்லேட் தருவேன் அப்படின்னு ஆரம்பத்தில் பெற்றோர்கள்தான் குழந்தைகளிடம் கேட்பார்கள். பிறகு குழந்தைகள் அதையே பழக்கமாக வைத்துக் கொள்கிறார். இப்படி அவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைக்கு நீங்கள் ஏதாவது என்பது மிக மேசமான பழக்கம். 

இது நீண்ட கால தீர்வும் கிடையாது. இதன் விளைவாக குழந்தையும் எப்போதும் உங்களிடமிருந்து எதையாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். அதோடு உங்களையும் கிப்ட் வாங்கி தரும் ஒரு மெஷினாகதான் பார்க்கும். அவர்கள் அன்றாட வேலைகளை ஏன் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை குழந்தைக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகதான் இருக்கும். குழந்தைக்கு புரியும் வரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு எந்த சமயத்திலும் நீ இதை செய்தால் நான் உனக்கு இதை வாங்கி தருகிறேன் என வாக்கு தரக்கூடாது. அப்படி வாக்கு தந்தால் அதை வாங்கி கொடுத்தே தீர வேண்டும். ஏனெனில் வாங்கி தரவில்லை எனில் உங்களைப் பற்றி குழந்தைகள் தன்னுடைய நண்பர்களிடம் தவறாக பேசுவார்கள். பாராட்டுகள் அனைத்து வாய்மொழியாகதான் இருக்க வேண்டும். குழந்தைகள் ஏதாவது சாதித்தால், உங்களுக்கு தோன்றினால் மட்டும் குழந்தைகளுக்கு தேவைப்படுவதை வாங்கி தரலாம். அதையும் முன்கூட்டி சொல்ல கூடாது. அப்படி சொன்னால் எனக்கு தேவையானப் பொருள் கிடைக்கிறது. அதற்காக இதை நான் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணம்தான் வளருமே தவிர வேறு எந்தவிதமான வளர்ச்சியும் இருக்காது. 

அடிக்கடி கிப்ட் வாங்கி தருவதால் குழந்தைகள் கிப்டுகளின் அடிமையாகிவிடுவார்கள். அது இல்லாமல் எதுவும் நடக்காது என்றாகிவிடும். நம்மிடம் எதிர்பார்ப்பதைப்போலவே மாற்றவர்களிடத்திலும் குழந்தைகள் எதிர்பர்ப்பார்கள். அதோடு அப்படி மற்றவர்களிடமிருந்து எதுவும் கிடைக்கவில்லை என்றால் அதுவே அவர்களை மனசோர்வு அடைய செய்யும். இந்த மனசோர்வு பல பின்விளைவுகளை ஏற்படுத்த கூடியது என்பதை பெற்றோர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். 

சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட குழந்தைகள் கிப்டை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த சமயத்தில் குழந்தையை சமதனம் செய்ய நான் வாங்கி தருகிறேன் என்றுச் சொல்லிவிட்டு வங்கிதரமால் இருந்தால் அது தவறு. நாம் தான் குழந்தைகளின் முதல் ரோல்மாடல். நாளை குழந்தையும் நம்மைப்போலவே வாக்கு கொடுக்கும். ஆனால் செய்யாது. மேலும் வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தை திறமையாக எதாவது செய்தால் அதற்கு நீங்கள் பரிசு வாங்கி தருகிறீர்கள் என்றால் மற்றொரு குழந்தையிடம் இருக்கும் நல்ல விஷயத்தை கண்டுபிடித்து அதற்கு பரிசு வாங்கி தரவேண்டும். இந்த சமயத்தில் நீங்கள் மேலும் ஒன்றை செய்ய வேண்டும். திறமையை வெளிப்படுத்திய குழந்தையிடம் அவளுக்கு வாங்கி தரவில்லை என்றால் அவள் வருத்தப்படுவாள் என்பதை தெளிவாக சொல்லி புரியவைக்க வேண்டும். 

நன்றி : நம் தோழி