Monday, September 24, 2012

மறதியை தடுக்கணுமா? இதயத்தை ஆரோக்கியமா வைச்சுக்கணும்!

                                          A Healthy Heart May Protect Against



நினைவுத்திறன் குறைபாடு என்பது இன்றைக்கு பெரும்பாலான முதியவர்களை பாதிக்கிறது. அல்சீமர் எனப்படும் இந்தநோயை தடுக்க இதயத்தை பத்திரமாக பாதுகாக்கவேண்டும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மறதி நோய் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர் அர்ச்சனா சிங் தலைமையில் இது குறித்த ஆய்வு மேற்கொண்டன.
மறதி நோயால் அவதிப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
உடலில் நல்ல கொழுப்புகள் அதிகம் இருந்தால் இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. அதேசமயம் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி அவை ரத்தநாளங்களில் படிந்து இதயநோய்களை ஏற்படுத்துகின்றன. இதனால் நோய் குறித்த எண்ணமே மூளையை பாதிக்கிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதயத்தை பாதுகாப்பதோடு மூளையையும் ஆரோக்கியமாக வைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
பொதுவாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது இதயம்தான். இதே நினைப்பு மூளைச்செயல்பாட்டையும் பாதிக்கும். இதயம், மூளை இரண்டும் ஆரோக்கியமாக இருந்தால் அனைத்து பாதிப்புகளுக்கும் எளிதில் நிவாரணம் உறுதி என்கின்றனர் நிபுணர்கள்.

Why is the sky blue?


why is the sky blue?

Blue sky over blue lake.
It is easy to see that the sky is blue. Have you ever wondered why? A lot of other smart people have, too. And it took a long time to figure it out!
The light from the Sun looks white. But it is really made up of all the colors of the rainbow.
A prism separates white light into the colors of the rainbow.
A prism is a specially shaped crystal. When white light shines through a prism, the light is separated into all its colors.
The light from the Sun looks white. But it is really made up of all the colors of the rainbow.
If you visited The Land of the Magic Windows, you learned that the light you see is just one tiny bit of all the kinds of light energy beaming around the Universe--and around you!
Like energy passing through the ocean, light energy travels in waves, too. Some light travels in short, "choppy" waves. Other light travels in long, lazy waves. Bluelight waves are shorter than red light waves.
Different colors of light have different wavelengths.
All light travels in a straight line unless something gets in the way to—
  • reflect it (like a mirror)
  • bend it (like a prism)
  • or scatter it (like molecules of the gases in the atmosphere)
Sunlight reaches Earth's atmosphere and is scattered in all directions by all the gases and particles in the air. Blue light is scattered in all directions by the tiny molecules of air in Earth's atmosphere. Blue is scattered more than other colors because it travels as shorter, smaller waves. This is why we see a blue sky most of the time.
Atmosphere scatters blue light more than other colors.
Closer to the horizon, the sky fades to a lighter blue or white. The sunlight reaching us from low in the sky has passed through even more air than the sunlight reaching us from overhead. As the sunlight has passed through all this air, the air molecules have scattered and rescattered the blue light many times in many directions. Also, the surface of Earth has reflected and scattered the light. All this scattering mixes the colors together again so we see more white and less blue.

What Makes a Red Sunset?

As the Sun gets lower in the sky, its light is passing through more of the atmosphere to reach you. Even more of the blue light is scattered, allowing the reds and yellows to pass straight through to your eyes.
Red sky at sunset
Red sun at sunset.
Sometimes the whole western sky seems to glow. The sky appears red because larger particles of dust, pollution, and water vapor in the atmosphere reflect and scatter more of the reds and yellows.


வானம் ஏன் நீல நிறம்..????





வானத்தில் கானும் நீல நிறம் கடலின் பிரதிபலிப்பல்ல. மாறாக கடல் தான் வானத்தை பிரதிபலிப்பதால் நீல நிறம் பெறுகிறது.
வின்வெளியில் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தால் சூரிய வெளிச்சம் படும் பொருட்கள் தவிர சுற்றிலும் கருப்பாகவே இருக்கிறது. பூமியிலிருந்து பார்க்கும் போது மட்டும் நீல நிறமாகத் தெரிவதேன்? பூமியின் மேலுள்ள காற்று மண்டலம் தான் காரணம்.
சூரிய ஒளி அனைத்து வண்ணங்களையும் உள்ளடக்கியது. வானவில்லில் அது தன் தோகையை விரித்து ஏழு வர்ணங்களைக் காட்டுகிறதே, அதனுள் மற்ற வர்ணங்களும் அடக்கம். அவை அனைத்தும் ஒளியே, ஆயினும் வர்ண வேறுபாடுகளுக்கு காரணம் அந்த ஒளியின் அலைநீளம் மற்றும் துடிப்பு (frequency). வானவில்லின் வண்ணங்களில் நீல நிறம் மிக அதிகத் துடிப்புடனும், சிவப்பு மிகக் குறைந்த துடிப்புடனும் இருப்பவை.
ஒளி காற்று மண்டலத்தில் இடையூறில்லாமல் பயணம் செய்தாலும், காற்றிலுள்ள அணு மூலக் கூறுகள், நீர்த்துளிகள், பனிமூட்டம் போன்றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது. (சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது.)
நாம் 'பார்ப்பது' என்பது ஒளி நமது கண்ணில் வந்து படும்போது மட்டுமே. நாம் பார்க்கும் பொருட்கள் எல்லாமே அதில் பட்டு திரும்பும் ஒளி நமது கண்ணை வந்தடைவதால் தான். அதனால் தான் 'பார்ப்பதற்கு யாருமே இல்லாவிட்டால் வானம் எப்படி நீல நிறமாக இருக்கும்' என்று ஆதி சங்கரர் கேட்டார். இதைப்பற்றி சற்று தெளிவாகப் 'பார்க்கலாம்'!
உதாரணமாக: நாம் பார்க்கும் பருத்தி உடை பச்சை நிறம் என்றால், அந்த உடையில் படும் ஒளியில் பச்சை நிறத்திற்கான துடிப்பு மட்டும் திரும்பி வருகிறது, அது நம் கண்களில் படும் போது பச்சைச் சட்டை என உணருகிறோம். இருட்டில் எதுவும் கண்ணுக்கு தெரியாததன் காரணமும், பொருட்களில் இருந்து எந்த ஒளியும் நம் கண்ணுக்கு வந்து சேராதது தான். இதனால் தான் பனிமூட்டத்தில் அருகில் இருக்கும் நபர் கூட தெரிவதில்லை, மேகமில்லாத இரவில் நெடுந்தொலைவிலிருக்கும் நட்சத்திரத்தைக்கூட நம்மால் 'பார்க்க' முடிகிறது.
காற்று மண்டலத்தில் பலமாக சிதறடிக்கப்படும் நீல நிறமே மற்ற நிறங்களை விட பெருமளவில் நமது கண்ணில் வந்து விழுகிறது. ஆகவே தான் வானம் நீல நிறம். இரவில் நிலவின் ஒளி, நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

அண்டார்டிக்கா பனிப்படலங்கள் வேகமாக உருகுகிறது!


கடல் நீர்மட்ட அபாயம்!
அண்டார்டிக்காவின் அதிவிரைவு பனி உருகுதலால் கடல் நீர்மட்டம் 16 அடி உயரும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை.
 அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்படலங்கள் மிக வேகமாக உருகிவருகின்றன. காரணம் பனிக்கு அடியில் உள்ள சுடுநீரினால் உருகுதல் செயல்பாடு முன்பை விட அதிகமாகவும் விரைவாகவும் நடைபெறுவதாக அண்டார்டிகா கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியில் மிதக்கும் பனிப்படர்வுகள் ஆண்டொன்றுக்கு 23 அடி உருகி வருகிறது. இன்று வரை இதற்கான காரணம் மானுட தொழிற்புரட்சிக்குப் பிந்தைய நடவடிக்கைகளால் அதிகரிக்கும் வெப்ப வாயு வெளியேற்றத்தின் விளைவான புவி வெப்பமடைதலால் பனி உருகுதல் விரைவாக நிகழ்கிறது என்று கருதப்பட்டு வந்தது.

புவிவெப்பமடைதலால் ஏற்படும் பனி உருகுதல் இருந்தாலும், கடல் நீர் உஷ்ணமடைவதால் பனி உருகுதல் படு வேகமாக நடைபெறுவதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் "நேச்சர்' இதழில் வெளியாகியுள்ளது.

சுமார் 20 மிகப்பெரிய பனிப்படர்வுகள் அடியில் உள்ள உஷ்ண நீரினால் உருகுகிறது என்று பிரிட்டன் அண்டார்டிகா ஆராய்ச்சியாளர் ஹாமிஷ் பிரிட்சர்ட் தெரிவித்துள்ளார்.

கடலின் மேற்பரப்பில் காற்றின் தன்மையினால் பனிக்கு கீழ் உள்ள கடல் நீர் உஷ்ணமடைகிறது. காற்றின் தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் ஓசோன் ஓட்டை, கரியமில வாயு வெளியேற்றத்தினால் ஏற்படும் குளோபல் வார்மிங் ஆகியவற்றால் ஏற்படுகிறது.

இதனால் கடல் நீர்மட்டம் உயர்கிறது. கடலில் அடர்த்தியாஅன் பனிப்படலங்கள் இருக்கும்போது நிலத்தில் உள்ள பனி உருகி விழும்போது கடலுக்குள் அது செல்லாமல் தடுக்கிறது. ஆனால் தற்போது அது போன்று தடுக்கப்பெறுவதில்லை.

மேற்கு அண்டார்டிக்கா பனிப்படர்வுகள் உருகி வருவதால் அது முழுதும் உருகி விட நூறாண்டுகள் ஆகாது சில பத்தாண்டுகளே ஆகும். அவ்வாறு உருகினால் கடல் நீர் மட்டம் 16 அடி உயரும் அபாயம் உள்ளதாக இந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானது, கடல் நீர்மட்ட உயர்வில் அண்டார்டிகாவின் பங்கு என்ன என்பது குறித்த மிக முக்கியமான தகவல்களை இந்த ஆய்வு கண்டுபிடித்திருப்பதாக மற்ற விஞ்ஞானிகளும் இதனை ஆமோதித்துள்ளனர்.

திபெத், இமாலயப் பனிமலைகள் அதிவேகமாக உருகி வருகின்றன





திபெத் பீடபூமியில் உள்ள பெரும்பாலான பனிமலைகளில் பனி அதிவேகமாக உருகி வருவதாக கடந்த 30 ஆண்டுகால ஆய்வுகளை மேற்கொண்ட சீன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு ஆய்வு தெரிவித்தது போல் திபெத் பனிமலைகள் வளர்ந்து வருகின்றன என்பது முற்றிலும் தவறு என்று தற்போது தெரியவந்துள்ளதாக சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீன பனி மலை ஆய்வாளர்களின் இந்த ஆய்வு பற்றிய விவரங்கள் விஞ்ஞான இதழான நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்பதில் விரிவாக வெளியாகியுள்ளது.

திபெத் பீடபூமி என்பதிலிருந்து உருவாகும் மலைத்தொடர்கள்தான் இமாலயம், காரகோரம், பாமீர், மற்றும் கிலியன் ஆகியவையாகும். இவை அனைத்தும் சேர்ந்து ஒரு லட்சம் சதுர கில்மோமீட்டர் பரப்புடையது. இந்தப் பனிமலைகளின் மூலம் ஆசியாவில் உள்ள 1.4 பில்லியன் மக்கள் தொகைக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.

இங்கிருந்துதான் கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதி, மேகாங், யாங்சீ போன்ற மிகப்பெரிய நதிகள் பூமியை நனைக்கின்றன. மிகப்பெரிய அளவில் புதிதான நீரை வழங்கி வரும் இதனை 'பூமியின் 3வது துருவம்' என்றே விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

தற்போது உலகவெப்பமயமாதலினால் இந்த பனிப்பிரதேசங்களுக்கு ஆபத்து விளைந்துள்ளது.

சீன ஆய்வாளர்கள் சுமார் 7,100 பனிச்சிகரங்களை ஆய்வு செய்தனர். குறிப்பாக முக்கியமான 15 பனிமலைகளை நேரடியாக ஆய்வு செய்தனர். இதில் கண்ட உண்மை என்னவெனில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த பனிச்சிகரங்களில் பனி வற்றி வருகிறது.

பனி உருகுகிறது ஆனால் புதிய பனிப்படலங்கள் உருவாவதில்லை. இதனால் பனி வற்றிய மலைகளாக இவை ஆகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக இந்த பனிமலைத் தொடர்களில் காரகோரம் உள்ளிட்ட மற்ற சிகரங்களை விட இமயமலைப் பனிப்பாறைகள் விரைவில் பனியற்றதாகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏன் இமாலயத்தில் மட்டும் அதிவேகமாக பனி வற்றிப்போகிறது என்றால் காற்றுதான் காரணம் என்று கூறுகின்றனர்.

இந்திய பருவநிலைகள் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக மாறிவருவதால் அதனை நம்பியிருக்கும் இமாலயப் பனிமலைகள் உருகுவதும் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆவ்ய்கள் மேலும் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிடவுள்ளன.

மூளையில் ஓபியம் போல் செயல்படும் சாக்லேட்கள்!





நீங்கள் சாக்லேட்டுகளுக்கு அடிமையா? ஆம் என்றால் ஓபியம் எவ்வாறு போதை அடிமையாக்குகிறதோ அதற்கு சமம் ஆன போதைப்பொருள் விளைவையே மூளையில் சாக்லேட்டுகளும் ஏற்படுத்துகின்றன என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலை ஆய்வு இந்த ஒப்பு நோக்கு ஆய்வை நிகழ்த்தியுள்ளது. மேலும் உடல் பருமனுக்கும் போதை மருந்து அடிமைத்தனத்திற்கும் கூட தொடர்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

எலிகளை வைத்து சாக்கலேட்டுகளைக் கொடுத்து பரிசோதனை நடத்தியதில் ஓபியத்திற்கு இணையாக மூளையில் சுரக்கும் 'என்கெபாலின்' என்ற ரசாயனம் அதிக அளவில் சுரப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மூளையில் சுரக்கும் என்கெபாலின் என்ற ரசாயனம் மூலக்கூறு ரிசெப்டார்களுடன் பிணைந்து ஓபியம் செய்யும் வேலைகளான வலியைக் குறைப்பது, மற்றும் இன்பமான உணர்வுகளை ஏற்படுத்துவது போன்றவற்றைச் செய்கிறது.

மேலும் இந்த ரசாயனத்தை வெளிப்படுத்தும் மூளையின் அந்தப் பகுதி மருந்துகள் மூலம் உணர்வடையச்செய்யும்போது சாக்கலேட்டுகளுக்கான தேவை இரட்டை மடங்காகிறது என்பதும் இந்த எலிப்பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடற்பருமன் நோய் உள்ளவர்களுக்கு உணவைப்பார்த்தாலே மூளையின் என்கெபாலின் அதிகம் சுரக்கத் தொடங்குகிறது. அதேபோல்தான் போதை மருந்துக்கு அடிமையாபவர்களும் போதை மருந்தின் தன்மை இருக்கும் பொருட்களைப் பார்த்தாலே இந்த மூளை திரவம் அதிகம் சுரக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

சாக்லேட்டுகளுக்கு அடிமையாகியிருப்பவர்களுக்கும் இதே போன்ற பிரச்சனை உள்ளது என்பதே இந்த ஆய்வின் ஒப்பு நோக்குத் தன்மை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கண்டுபிடிப்புகள் அமெரிக்க இதழான 'கரண்ட் பயலாஜி' -யில் வெளியிடப்பட்டுள்ளது.

புற்று நோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: வைட்டமின் "ஏ" குணப்படுத்துகிறது!






புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் "ஏ" சிறந்த முறையில் செயலாற்றுவதாக இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பை புற்றுநோய் சிகிச்சையில் "புதிய உதயம்" என்றே இவர்கள் வர்ணிக்கின்றனர்.

கேன்சர் உருவக்காக் கூறுகளுக்கும், வைட்டமின் ஏ பற்றாக்குறைக்கும் தொடர்பிருப்பதாக இவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் புற்றுநோய் நீக சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப்பொருட்களில் வைட்டமின் ஏ நிரம்பிய சத்துக்களை சேர்க்குமாறு இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புரோஸ்டேட் கேன்சர் செல்கள் மீது நடத்திய ஆய்வில் இவர்கள் இந்த வைட்டமின் ஏ தொடர்பை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் யார்க் பல்கலை. பேராசிரியர், நார்மன் மெய்ட்லேன்ட் இதனை மற்ற கேன்சர்களுக்கும் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.

உடனே மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று வைட்டமின் ஏ மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்ளவேன்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏனெனில் மாத்திரை வடிவங்களில் ஓவர் டோஸ் ஆனால் அதுவே நச்சாகவும் கேன்சர் உருவாக்க காரணைகளாகவும் மாறிவிடும் என்று இவர் எச்சரித்துள்ளார்.

மாறாக தின்சரை உணவில் வைட்டமின் ஏ உள்ள எண்ணெய்ச் சத்துள்ள மீன், கேரட்கள், லிவர், சிகப்பு மிளகு, மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும் என்கிறார் இவர்.

புற்று நோய் உருவாகி விட்டாலும் சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தினால் அது பரவுவதை திறம்பட தடுக்க முடியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஏற்கனவே கேன்சர் சிகிச்சையில் 'ரெடினாய்க் ஆசிட்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கேன்சர் நோய் வருவதால் ஏற்படும் இறப்பை 80% தடுக்க முடிகிறது என்று கூறியுள்ளது இந்த ஆய்வு.

பொதுவாக 'புரோஸ்டேட் கேன்சர்' காரணிகளை ஆராயும் போது ரத்தத்தில் வைட்டமின் ஏ அளவு குறைவாக இருப்பதை ரத்த மாதிரிகளில் கண்டிருக்கின்றனர். ஆனால் இதன் செயல்பாட்டை யாரும் தெரிவிக்கவில்லை. இப்போது உயிரியல் தொடர்பை இந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முழு விவரம் 'நியூக்ளீக் ஆசிட்" என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. 

எலும்பை பலப்படுத்தும் அகத்தி!



அகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதுல வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செஞ்சி இந்த கீரையை சாப்பிட்டு வந்தீங்கனா எலும்பு நல்லாவே வளரும். வயசான காலத்துல சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாம முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே கஷ்டப்படுவாங்க.

இந்தமாதிரி பிரச்சினைகளை தவிர்க்கவும்னா அடிக்கடிஅகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெ‌ள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு விஷயம் இருக்கு.

அரைக்கீரையை தினமும் சாதத்தோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா உடம்புல நல்ல பலம் ஏறும். கல்யாணமான ஆண்க‌ள் அரைக்கீரையோட வெங்காயம் சேர்த்து நெ‌ய்யில பொரிச்சி சாப்பிட்டு வந்தா புது ரத்தம் ஊறி தாது அவுக்க‌ள் உற்பத்தியாகி இல்லற வாழ்க்கைக்கு தேவையான சக்தி கிடைக்கும். இத விட்டுப்போட்டு இன்னைக்கி என்னென்னவோ மருந்தையெல்லாம் தேடிப்போயிட்டிருக்காங்க.

குழந்தை பெத்த பொண்வுங்களுக்கு ஒடம்புல போதுமான சக்தி இருக்காது. அவங்க‌ள்லாம் அரைக்கீரையை கடைஞ்சி சாப்பிட்டு வந்தா நல்ல பலம் கிடைக்குறதோட குழந்தைக்கு தேவையான பாலும் சுரக்கும். முருங்கைக்கீரை உங்க வீட்டுலயோ, வீட்டுக்கு பக்கத்திலயோ இருக்கும். ஆனா நாம அதை சீண்டுறதில்ல. அதில இருக்குற மகத்துவம் நமக்கு தெரியாததுதான் காரணம். நிறைய தா‌ய்மார் குழந்தைக்கு பால் கிடைக்குறதில்லனு மனசு சங்கடப்பட்டு ஏதேதோ வைத்தியம் செ‌ய்வாங்க. அவங்கல்லாம் ஏனோ முருங்கைக்கீரையை மறந்திட்டாங்க. முருங்கைக்கீரையை பருப்போடவோ தனியாவோ சமைச்சு சாப்பிட்டு வந்தாலே தேவையான தா‌ய்ப்பால் சுரக்கும். குழந்தைங்களுக்கு சிலநேரம் வயிற்று உப்பிசம் வந்து வீல்வீல்னு கத்தும்.

இந்த மாதிரி பிரச்சினைக்கு முருங்கைக்கீரையை சுத்தம் பண்ணி உ‌ள்ளங்கையில வச்சி நல்லா கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதோட அரை பட்டாணி அளவு கல் உப்பை கரைக்கவும். அப்புறமா அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீர் சேர்த்து கலந்து உ‌ள்ளுக்கு கொடுத்தா வீல் வீல் சத்தம் அடங்கிப்போயிரும். முருங்கைக்கீரையை சுத்தம் பார்த்து நல்லா வேக வச்சி அதோட கோழி முட்டையை உடைச்சிப்போட்டு நல்ல கிளறவும்.

பிறகு சூடு ஆறுறதுக்கு‌ள்ள அதை சாப்பாட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா ஒடம்புல பலம் ஏறும். 40 நா‌ள் விடாம செஞ்சிட்டு வந்தீங்கனா முழு பலனையும் அடையலாம். கொத்தமல்லிக்கீரையை சாம்பார், ரசத்துல ஏதோ வாசனைக்காக சேர்ப்போம். ஆனா தனியா செஞ்சி சாப்பிடுறதில்ல. துவையலாவோ, சாதத்தோட கலந்தோ சாப்பிட்டு வந்தீங்கனா புது ரத்தம் உற்பத்தியாகுறதோட எல்லா சக்தியும் கிடைக்கும்.

வயித்துப்புண்ணால கஷ்டப்படுறவங்க கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும். மூக்கடைப்பு, மூக்குல சதை வளர்ந்து அவதிப்படுறவங்க கொத்தமல்லி துவையலை ஒரு கொட்டைப்பாக்கு அளவு தினமும் சாப்பாட்டுல சேர்த்து வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். தூதுவேளைக்கீரையை நெ‌ய்யில வதக்கி துவையலாவோ மசியலாவோ சாப்பிட்டு வந்தீங்கனா கபக்கட்டு விலகி உடம்புல வலு ஏறும். அறிவு வளரும்.

தூதுவேளை கீரையை கஷாயமா செஞ்சி கஸ்தூரி, கோரோஜனை மாத்திரை சேர்த்து சின்ன குழந்தைகளுக்கு கொடுத்திட்டு வந்தா சளியினால வர்ற கா‌ய்ச்சல் குணமாகும். டைபா‌ய்டு, நிமோனியா மாதிரி கா‌ய்ச்சல் நேரத்துல கபம் உண்டாகி நெஞ்சுல சளி அடைச்சிக்கிட்டா தூதுவேளைக்கீரையை கொடுத்திட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும் 


இறால் மசாலா


கடல் உணவுகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் இறால் மிகவும் நல்லது. அத்தகைய இறாலை லீவு நாட்களில் வீட்டில் பொறுமையாக சமைத்து, ருசித்து சாப்பிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்போது அந்த இறால் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
delicious prawn masala

தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்ச பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கசகசா - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த இறாலை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்பு மிக்ஸியில் வெங்காயத்தில் பாதியைப் போட்டு, சோம்பு, சீரகம், கசகசா, மிளகு போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய மீதமுள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, லேசாக கொதிக்க விடவும்.
பின் அதில் ஊற வைத்துள்ள இறாலைப் போட்டு, வேண்டுமென்றால் உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, இறால் வேகும் வரை அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, மசாலா சற்று கெட்டியானதும் இறக்கவும்.
இப்போது சுவையான இறால் மசாலா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

பாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனைகள் வந்துடும்!!!

Common Foot Skin Problems


அனைத்து பெண்களுக்கும் பாதங்கள் நன்கு மென்மையாக பட்டுப் போன்று இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அத்தகைய ஆசை இருந்தால் மட்டும் போதாது, முறையாக பாதங்களை கவனிக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் வீட்டில் நிறைய வேலைகளை செய்வதன் காரணமாக அவர்களால் வீட்டில் எப்போதும் காலணிகளை அணிந்து கொண்டே இருக்க முடியவில்லை. மேலும் சிலர் அழகான நடை வேண்டும் என்பதனால், உயரமான ஹீல்ஸ் போடுவது என்று இருக்கின்றனர்.
ஆனால் ஆண்களின் பாதங்கள் எப்போதும் பெண்களை விட மென்மையாக தான் இருக்கும், ஏனெனில் அவர்களின் பாதங்கள் எப்போதும் ஷூ மற்றும் சாக்ஸ்களால் மூடியிருக்கும். ஆகவே அவர்கள் பாதங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் பெண்கள் நிறைய பாத பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். அத்தகைய பொதுவாக பெண்கள் அனுபவிக்கும் பாத பிரச்சனைகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதற்கேற்ப இனிமேல் நடந்து கொள்ளுங்களேன்...
* குதிகால் வெடிப்பு: ஆண்களுக்கும், பெண்களுக்கும் வரும் பாத பிரச்சனைகளில் ஒன்று தான் குதிகால் வெடிப்பு. இருப்பினும் பெண்கள் தான் முக்கியம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் பாதங்களில் அழுக்குகள் அதிகம் இருப்பதாலும், மென்மையிழந்து விடுவிதாலும், வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் பாதங்களில் இயற்கையான எண்ணெய் சுரப்பிகள் இல்லை. ஆகவே நாம் தான் தினமும் கால்களுக்கு எண்ணெய்கள் அல்லது ஏதேனும் மாஸ்சுரைசரை அவ்வப்போது தடவ வேண்டும். மேலும் குதிகால் வெடிப்பு இருந்தால், அது போகும் வரை, கால்களை ஷூ மற்றும் சாக்ஸ்களால் மூடியிருக்க வேண்டும்.
* பாதத்தில் படை: இந்த நோய் கால்களின் விரல்களுக்கிடையே புண் அல்லது அரிப்பு என்று ஏற்படும். இந்த படை பாதங்களில் நாளடைவில் வெடிப்புகளோடு, பாதத் தோல்களை செதில் செதிலாக ஏற்படுத்தும். ஆகவே தினமும் பாதகளை குளிக்கும் போது நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.
* வறண்ட சருமம்: எண்ணெய் சுரப்பிகள் பாதங்களில் இல்லாததால் பாதங்களைச் சுற்றி ஒருவித வறட்சி காணப்படும். அதிலும் இத்தகைய வறட்சி குதிகால்களில் தான் அதிகம் காணப்படும். இந்த பிரச்சனைக்கும் அனைவரும் தினமும் பாதிக்கப்படுவர். ஆகவே தினமும் இரண்டு முறை பாதங்களுக்கு மாஸ்சுரைசரை தடவ வேண்டும். அதிலும் காலையில் குளித்ததும், இரவில் படுக்கும் முன்னும் தடவினால் நல்லது. முக்கியமாக அவ்வாறு இரவில் படுக்கும் முன் தடவும் போது, பின்னர் எங்கும் நடக்காமல் இருக்க வேண்டும். இதனால் கால்களில் உள்ள செல்கள் அந்த எண்ணெயை உறிஞ்சிவிடும், பின் பாருங்கள் நாளடைவில் பாதங்கள் நன்கு மென்மையாக இருக்கும். வேண்டுமென்றால் தினமும் குளிக்கும் போது, அந்த நீரில் சிறிது எண்ணெய் விட்டு குளித்தால், உடல் முழுவதும் ஏற்படும் வறட்சியை தடுக்கலாம்.
* செருப்பு கடிப்பது: ஏதேனும் புதிதான காலணிகளை அணிந்தால், அப்போது சருமத்தில் சிவப்பு நிறத்தை அறியலாம். சிலசமயங்களில் புண் ஏற்பட கூட வாய்ப்புள்ளது. ஆகவே எப்போது காலணிகளை வாங்கும் போது பாதங்களை இறுக்குமாறு வாங்க வேண்டாம். மேலும் சில நாட்களுக்கு 2-3 மணிநேரம் தொடர்ச்சியாக போடாமல் இருப்பது நல்லது. இதனால் சருமத்தில் புண் அல்லது சிவப்பு நிறம் ஏற்படுவதை தடுக்கலாம்.
* பூஞ்சை தொற்று நோய்: பாதங்களில் அதிகமான வியர்வை ஏற்படும் போது பாதங்களில் ஒரு வித துர்நாற்றம் ஏற்படும். அப்போது பாதங்களுக்கு எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் இருந்தால், பூஞ்சைகளால் தொற்றுநோய் ஏற்படும். மேலும் பெண்கள் பாதங்கள் அழகாக இருக்க நீளமான கால் நகங்களை வைத்துக் கொள்வார்கள். இதனால் விரல்களின் இடுக்குகளில் எளிதாக பூஞ்சைகள் புகுந்து, நோயை ஏற்படுத்திவிடும். மேலும் அவ்வாறு இடுக்குகளில் உள்ள அழுக்குகளை நீக்கும் போது, விரல்களில் கடுமையாக வலிகள், சிவப்பு நிறமாதல் போன்றவை ஏற்படும். ஆகவே எந்த ஒரு நோயும் கால் விரல்களின் நகங்களில் ஏற்படாமல் இருக்க, ஸ்பா சென்று அல்லது வீட்டிலேயே சரியாக சுத்தம் செய்தால் தவிர்க்கலாம்.
வேண்டுமென்றால் வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு முறை ஸ்பா சென்று பாதங்களுக்கு சரியான பராமரிப்பு கொடுத்தால், பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

English summary
Having a clean and soft feet is a dream of every women. However, women find it very difficult to care for their feet as they have to wear sandals, slippers and heels that expose the foot skin all the time. Men do not have rough feet like women simply because their feet are always covered by shoes and socks.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கின்னஸ் சாதனை

Microsoft Appfest Bangalore Sets Guinness Record




பெங்களூர் : மைக்ரோசாப்ட் நிறுவனம் 18 மணி நேரம் இடைவிடாமல் மென்பொருளை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது.
பெங்களூரில் நேற்று இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 2567 பொறியாளர்கள் கலந்து கொண்டனர். விண்டோஸ்க்கான மென்பொருட்களை உருவாக்கும் பொறியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் இந்த கின்னஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மென்பொருள் தயாரிப்பு பொறியாளர்கள் கூடி மென்பொருள் உருவாக்கியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இந்த நிகழ்ச்சி இடம்பெறுவதாக கின்னஸ் நிர்வாகி பால் ஓ நெயில் தெரிவித்தார். கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை மைக்ரோசாப்ட் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.

English summary
Microsoft Windows 8 Appfest made history by setting a new Guinness world record for most participants in a software development marathon at one location here on Sep 22. The Appfest saw participation of 2,567 developers coding non-stop for 18 hours.