Friday, August 2, 2013

அன்புள்ள அப்பா................




தந்தையர்  பற்றிய சில பொன்மொழிகள் ............

அப்பா வீட்டின் கூரை. ஏனோ யாரும் அண்ணாந்து பார்ப்பதில்லை, கூரையில்லாமல் வீடில்லை.

ஒருவருக்கு உபகாரம் செய்யவேண்டுமென்றால் முதலில் உன் தாய்க்கு செய், ஒருவருக்கு மரியாதை செய்யவேண்டுமென்றால் முதலில் உன் தந்தைக்கு செய்.

தந்தை மகனுக்கு எதையேனும் அன்போடு தரும்பொழுது இருவரும் சிரிக்கிறார்கள்.
மகன் திருப்பி செலுத்தும்போழுது இருவரும் அழுகிறார்கள்..........ஷேக்ஸ்பியர்.
 
தெய்வத்திற்கு தகப்பன் என்பதைவிய  புனிதமான பெயர் இருக்க முடியாது......வேர்ட்ஸ்வொர்த்.

யார் வேண்டுமென்றாலும் தந்தையாக இருக்கலாம். ஆனால் அன்பிற்குரிய அப்பாவாகத் திகழ்வது தனிக்கலை.............ஆனி காடஸ்.

தன் தந்தை சொன்னது சரிதான் என்று ஒரு மகன் உணரும்போது அவன் சொல்வது தவறு என்று உணரும் வயதுப் பிள்ளை அவனுக்கு இருக்கிறான் -சார்லஸ் வார்ட்ஸ்வோர்த்.

நல்ல அப்பாக்கள்... பாடப்படாத, போற்றப்படாத, கவனம் பெறாத சமூகத்தின் விலை மதிப்பில்லா சொத்துகள்............பில்லி க்ரஹாம்.

தந்தைகளை மரணம் நம்மிடம் இருந்து பிரிக்கலாம். நம் நினைவுகளில் நிரம்பி அழியாத நாயகர்கள் ஆகிறார்கள் அவர்கள்.........கொன்ராட் ஹால்.

 நூறு பள்ளி ஆசிரியர்களைவிட உயர்ந்தவர் ஒரு தந்தை...........ஜார்ஜ்ஹெர்பர்ட்.

வரலாற்று விநாடி வினாவில் நான் மூன்றாம் இடம் பெற்றபோது இரண்டாவது, முதலாவது இடமும் உன்னால் அடையமுடியும் என்றார் என் அப்பா. முதலிடம் வென்றதும் மாறாத புன்னகையுடன் இடங்கள் என்பது ஒரு பொருட்டே இல்லை; முனைதலே முக்கியம் என்றார். -  தாலியா சால்ட்ஸ்.

இயற்கையின் உன்னத படைப்பு தந்தையின் ஈடில்லா இதயம்...பிரான்கோயிஸ் ப்ரிவோஸ்ட்.

தன் அன்புக்குழந்தையை பால்யத்தில் பெரிய பெண் போல உணரச்செய்யும் தந்தைகள், வளர்ந்ததும் அவர்களை சிறுமி போல மிகைத்த அன்பால் உணரச்செய்கிறார்கள்.

என்னோடும் என் தம்பியோடும் புல் நிறைந்த தோட்டத்தில் தந்தை விளையாடுவார். அன்னை, ''புற்களை மிதித்து விடாதீர்கள்!' என்பார். தந்தை எங்கள் தலை கோதியபடி, ''நாம் புற்களை வளர்க்கவில்லை; பிள்ளைகளை வளர்க்கிறோம்!'என்பார்.............ஹார்மன் கில்ப்ரேவ்.

தந்தைகளிடம் கனிவோடு இருங்கள்; நீங்கள் பால்யத்தில் இருந்தபோது உங்களை அளவில்லாமல் அன்பு செய்தவர் அவர். உங்களின் நாவில் இருந்து உருண்டோடிய முதல் மழலை மொழியை முனைந்து புரிந்துகொண்ட நம்மின் அறியா உலகின் வெளிச்சத்தில் நிறைத்தவர் இல்லையா அவர்?...மார்கரெட் கோர்டினி.

தந்தைகள் எளியவர்கள். குறையா அன்பால் அவர்கள் நாயகர்களாக, சாகசக்காரர்களாக, கதை சொல்லிகளாக, கீதம் இசைக்கும் பாடகர்களாக மாற்றப்படுகிறார்கள்....பாம் பிரவுன்.

வெறும் உதிரம் உடலால் ஆனதில்லை தந்தை - பிள்ளை உறவு. அது இதயங்களால் பிணைந்த உன்னத உறவு......ஜோஹாத் ஷில்லர்.

அதீதக் கனிவுடன் என்னிடம் நடந்துகொண்டதால் சந்தேகமே இல்லாமல் என் அப்பாவே உலகின் மிகப்பெரிய வீரர்....ஆன் எலிசபெத்.

வெற்றிகரமான தந்தையாக இருக்க எளிய விதி ஒன்றுதான். பிள்ளை வளரும் முதல் இரண்டு வருடங்கள் பிள்ளையை கண்டுகொள்ளாதீர்கள்..........ஹெமிங்வே.

 (நன்றி விகடன்)

ஹலோ மை சடை ராங் நம்பர்


ஏன்டா வீட்டுல தண்டசோறு கொட்டிண்டு எங்க உயிரே வாங்குறே. ஒழுங்கா உன்னால் ஒரு வேலை தேட முடியுதா?


வீட்டில் நுழைந்தவுடன் பெரிசு குரலை உயர்த்தி கத்தினார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதை வேடிக்கை பார்க்க நான் தலையை குனிந்து கொண்டேன்.

போதாத குறைக்கு அம்மா வேறு உங்க அண்ணணை பாரு ஒரு வம்பு தும்புக்கு போறானா? ஒரு பொன்னை ஏறெடுத்து பார்ப்பானா? நீயும் வந்து பொறந்தியே என் வயத்தில் என்று அப்பாவுடன் சேர்ந்து கொண்டாள்.

எதற்காக கத்துகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை, வரும் ஆத்திரத்தில் மவனே ரெண்டு வாயிலையும் துணியை வைத்து அடைக்கலாமா என்று தோன்றியது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த அண்ணனண் மேல் ஒரு கல்லை போட்டால் என்ன என்று தோன்றியது. இப்பொழுது பதில் பேசினால் இன்னும் கத்தல் அதிகமாகி ரஸாபாசம் ஆகிவிடும் என்று வாசலுக்கு வந்தேன். 

மவனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு வேறு வேலையில்லை போலும், என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

அடச்சீ என்று கக்கூசில் போய் ஒரு அரைமணி அடைந்து கிடந்தேன்.

அப்பா காபி சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட கடைப் பக்கம் போனவுடன் மெதுவாக ஏன் ரூமுக்குப் போனேன்.

அம்மா அங்கேயும் வந்து திரும்ப ஆரம்பித்தாள். ஏன்டா ஒரு வேலைக்குப் போய் உங்க அண்ணன் மாதிரி சம்பாரிச்சு வந்தா நாங்க ஏன்டா சத்தம் போடப் போறோம்.

ஏம்மா நானும் எத்தனை வேலைக்கு மனுப் போட்டு தேடி அலைகிறேன் எவனும் தர மாட்டேங்கிரானே நான் என்ன செய்வது, அது சரி எதுக்கும்மா இந்த ருத்ர தாண்டவம் நான் என்னம்மா செய்தேன் என்று அழாத குறையாக கேட்டேன்.

இந்த நாலாவது வீட்டில் ஒரு மோட்டார் கம்பெனி மேனஜெர் இருக்கிறாரே அவர் மகள்கிட்டே நீ எதாவது வம்பு பண்ணியா? அவர் வந்து உங்க அப்பாவை நாக்கை பிடுங்கிக்கற மாதிரி கேட்டுட்டு போறார்? என்றாள்.

இல்லைம்மா நான் ஒன்னும் வம்பு பண்ணவில்லை என்றேன். 

என்னவோ போடா உன் சகவாசமே சரியில்லை என்றாள்.

அப்பாவுடன் போய் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வா என்றாள்.

அப்பா வந்தவுடன் அவர்கள் வீட்டுக்கு சென்று நான் செய்யாத தப்புக்கு மன்னிப்புக் கேட்டேன். அவர்கள் வீட்டில் வேறு எனக்கு இலவச அட்வைஸ். அந்த பெண்ணின் அப்பா அதான் மோட்டார் கம்பெனி டேமேஜர் அவர் பெண் மிகவும் நல்லப் பெண் என்றும் அவள் யாரையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டாள் என்று ஏதேதோ சொன்னார். இந்த மாதிரி கிண்டல் கேலி, காதல் கத்திரிக்காய் எல்லாம் என் பெண்ணுக்கு பிடிக்காது என்று சொல்லிக் கொண்டிருந்தார். 

இப்பொழுது தான் எனக்கு புரிய ஆரம்பித்தது.

இரண்டு நாள் முன்பு கோயில் எதிரில் உள்ள நாயர் கடையில் நண்பர்களுடன் தம் அடித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது அந்த பெண் குதிரை மாதிரி மாரை நிமிர்த்திக் கொண்டு எங்களை ஒரு திமிர் பார்வை பார்த்து கடையினுள் நுழைந்து போன் பண்ண நம்பரை சுழற்றியது.

அதற்குள் கூட இருந்த நண்பன் ஜேம்ஸ் ....த்தா யாருட இது மவளே இவளே ஒரு நாள்.........என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான். 

அதற்குள் நான் சும்மா இரு, எங்க வீட்டாண்ட இருக்குது, கம்முனு இரு என்றேன்.

ஒரு ஐந்து நிமிடம் அது போனை சுழற்றி விட்டு வெளியே வந்தது.

ஜேம்ஸ் சும்மா தெருவை பார்த்துக் கொண்டு “ஒரு ராங் நம்பர் கூடவா கிடைக்கவில்லை” என்றான்.

வெளியே வந்த அவள் ஒரு நிமிடம் நின்று என்னை ஒரு முறைப்பு பார்வை பார்த்து விட்டு விடு விடு என்று சென்று விட்டாள்.

இதை தான் அவள் கண், காது, மூக்கு வைத்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து விட்டாள். 

நான் அப்பொழுதே ஜேம்ஸை கடிந்து கொண்டேன். ஏன்டா என்னை வம்புல மாட்டுற, அந்தப் பொண்ணு எங்க வீட்டாண்ட இருக்குது வம்பாகிப் போய்விடும் என்றேன்.

“உடுரா அவா இன்னா செய்வா? பெரிய மயிரு இவோ சும்மா பயந்து சாகாதே” என்றான்.

“இல்லைடா நல்ல பெண் அவளை எதற்கு கிண்டல் பண்றே” என்றேன்.

பிறகு நான் ஒரு இரண்டு வாரத்திற்கு நாயர் கடை பக்கம் போவதை நிறுத்திக் கொண்டேன். 

ஒரு நாள் மதியம் வீட்டில் வழக்கம் போல் தண்ட சோறு தின்று விட்டு வெட்டியாக இருந்தேன். ஜேம்ஸ் இன்னும் நான்கு நண்பர்களுடன் வந்து வெளியிலே வாடா இன்னிக்கு நந்துவிற்கு வேலை கிடைத்திருக்கிறது, இன்னிக்கு பார்ட்டி என்று கூட்டி சென்றான்.

எல்லோரும் நன்றாக பீர் குடித்து மப்பாகி பீச் பக்கம் சென்று மணலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

நல்ல மூன்று மணி வெயில், சிறிது நேரம் கழித்து நானும் ஜேம்சும் படகின் அருகில் சென்றோம்.

படகின் பின்னால் ஏதோ சத்தம் கேட்கவே ஜேம்ஸ் எட்டிப் பார்த்து, என்னிடம் மெதுவாக “ஏய் அங்கே பாரு உங்க வீட்டாண்ட இருக்குமே ஒரு பிகரு அது ஏன்னா செய்யுது பாரு” என்றான்.

நான் எட்டிப் பார்த்தேன், கண்ணகியின் பேத்தி தான், அவனுடைய மடியில் படுத்திருக்க, அந்த சண்டாளன் குனிந்து அவள் சட்டையின் பட்டனை அவிழ்த்து எதையோ தேடிக் கொண்டிருந்தான்.

நாங்கள் விறுவிறுவென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டோம். 

ஜேம்ஸ் “அவ கூட இருப்பது யார் தெரியுமா? என்றான், 

“சரியா பார்க்க வில்லை அவன் குனிந்து கொண்டிருந்தான் தெரிய வில்லை யாரு?” என்றேன்?

“சரி விடு பரவாயில்லை” என்றான்.

கடற்கரையை விட்டு வெளியே வரும்பொழுது என் அண்ணனின் பைக்கை பார்த்தேன். அண்ணன் வேலைக்கு போகாமல் இங்கு என்ன செய்கிறான்?.
.....................................
நன்றி: கும்மாச்சி