Thursday, September 26, 2013

சுமையாகிப்போன அமெரிக்கக் கனவு!




உலகில் இப்போது ஒரே வல்லரசு நாடு அமெரிக்காதான். அப்படிப்பட்ட அமெரிக்காவில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் திருப்தியோடும் இருக்க வேண்டும் அல்லவா, அப்படி இல்லையே, ஏன்?

அமெரிக்கப் பொருளாதாரச் சூழல் யாரையும் நிம்மதியாக இருக்க விடவில்லை. நிம்மதி போவது இருக்கட்டும், எதிர்காலத்தைக் குறித்தும் அமெரிக்கர்கள் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது, இப்போதைய தலைமுறையைச் சேர்ந்தவர்களே தங்களுடைய முதுமை நாள்களை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்று கவலைப்படுகிறார்கள். அதைவிடக் கவலை, தங்கள் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள், என்ன படிப்பார்கள், எப்படி வேலை கிடைக்கும் என்பதைப் பற்றித்தான்.

அமெரிக்கர்கள் தேசப்பற்று மிக்கவர்கள். தங்களுடைய நாட்டின் அழைப்புக்கேற்பச் செயல்படுகிறவர்கள். அதேபோல, தன்னுடைய நாட்டு மக்களுக்கு எந்த ஆபத்து என்றாலும், அந்த இடம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஓடோடிச் சென்று உதவும் பண்பு அமெரிக்காவுக்கு உண்டு. அமெரிக்காவுக்கு ஆபத்து வரக் கூடிய இடம் அயல்நாடாக இருந்தாலும், பகையைத் தேடிச் சென்று அழிப்பதும் அமெரிக்காவின் வழக்கமாக இருந்துவருகிறது. ஆனால், பொருளாதார ரீதியாக மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

1977 முதலே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாமல் இருந்தாலும் எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும் என்றே அமெரிக்கர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள். அந்த நம்பிக்கை நிறைவேறவில்லை என்றாலும், அவர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆனால், அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா இரண்டாவது முறையாகப் போட்டியிட்டபோது, நாட்டு மக்களிடையே நம்பிக்கை வற்றிவருவதை ‘கேலப்’என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் கவனித்தது.

“அமெரிக்காவுக்கு என்று கனவொன்று இருக்கிறது என்று ஒபாமா தேர்தல் பிரசாரத்தில் கூறியபோது, மக்களிடையே முதல் முறை இருந்த உற்சாகம், ஆர்வம் ஏதும் இல்லை” என்று ஜோயல் பெனன்சன் என்ற ஒபாமா ஆதரவாளரே நினைவுகூர்கிறார்.

இவ்வளவு பணத்துக்கு வீட்டை வாங்கிவிட்டோமே, கடனை எப்படி அடைக்கப்போகிறோம், இரண்டு கார்களை வைத்திருக்கிறோமே, நிறைய செலவு வைக்கிறதே , மகன் அல்லது மகளைக் கல்லூரியில் சேர்க்க நிறைய பணம் தேவைப்படுமே என்றெல்லாம் கவலைப்படுகின்றனர்.

நிறைய செலவுசெய்து கல்லூரியில் படிக்கவைத்தாலும் நல்ல சம்பளம் கிடைக்கப்போவதில்லை, ஏன் படிக்கவைக்க வேண்டும் என்றுகூட மத்திய தரக் குடும்பத்துப் பெற்றோர் நினைக்கின்றனர்.

தொழில்துறை மந்தத்தினாலோ பொருளாதாரச் சரிவினாலோ இந்தச் சிந்தனை வரவில்லை. விலைவாசி உயர்வும் ஊதியம் அந்த அளவுக்கு உயராமையும் மக்களுக்குத் தெரிகிறது. கல்வி, சுகாதாரத்துக்கு அதிகப் பணம் செலவிட வேண்டியிருப்பதும் புரிகிறது. அமெரிக்க அரசின் நிதி நிர்வாகம் சரியாக இல்லாததால் தங்களுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகி வருவதைப் பலர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் தீர்க்கும் ஆற்றல் அமெரிக்க அரசுக்கு இல்லை என்றே பலரும் நினைக்கின்றனர்.




பொருளாதார வளர்ச்சியில் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது இல்லாமல் ஏழை, பணக்காரர் வித்தியாசம் அதிகரித்துக்கொண்டே வருவதை அவர்கள் பார்க்கிறார்கள். 2007 முதல் 2010 வரையில் தங்களுக்கு ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளால் தங்களுடைய அந்தஸ்து, 1992-ல் இருந்த நிலைக்குச் சென்றுவிட்டது என்றே பெரும்பாலானோர் கருதுகிறார்கள்.

அமெரிக்கத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் கணிசமாகக் கூடியிருக்கிறது, அமெரிக்கத் தொழிலதிபர்களின் லாபமும் கணிசமாகக் கூடியிருக்கிறது. ஆனால், இந்தக் கூடுதல் வருவாய் (மிகை ஊதியம்) தொழிலாளர்களுக்குக் கிடைக்காமல் முதலாளிகளின் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடுகிறது. தொழிலாளர்கள், ஊழியர்களின் ஊதியம் உயராமல் அப்படியே தேங்கி நிற்கிறது. அதேசமயம், விலைவாசி உயர்ந்து செலவுகள் அதிகரித்துவிட்டன. தேசிய வருமானம் உயர்ந்தாலும் அது மிகச் சிலரின் கைகளுக்கே போய்ச் சேர்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீட்டுக்கான செலவு 90 சதவீதம் அதிகரித்துவிட்டது.பல்கலைக்கழகங்களில் கல்விக்கட்டணம் 27 சதவீதம் அதிகரித்துவிட்டது. தனியார் கல்லூரிகளில் கட்டணம் 13 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், அமெரிக்காவிலிருந்து மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் போன்ற பெரிய நிறுவனங்கள் வேறு நாடுகளுக்குத் தங்களுடைய தொழிற்சாலைகளைக் கொண்டுசென்றதுதான். அந்த நாடுகளில் சலுகை விலையில் கிடைக்கும் நிலம், நீர், மின்சாரம்,வரிச் சலுகை, குறைந்த ஊதியத்தில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் ஆகியவை அவர்களுக்குப் பெரும் ஊக்குவிப்பாக இருக்கின்றன. இதனால், பல அமெரிக்க நிறுவனங்கள் ஏழை நாடுகளில் தங்களுடைய தொழிற்சாலைகளைத் திறந்து உற்பத்தியில் ஈடுபட்டு லாபம் ஈட்டுகின்றன. இதனால், அமெரிக்க நாட்டில் மக்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் செய்த முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபம், முதலாளிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுவிடுகிறது.

வேலையின்மையால் அமெரிக்காவில் ஏழைகளும் நடுத்தர மக்களும் வாழ்க்கைத் தரம் குறைந்து அல்லல்படுகின்றனர்.

இந்த நிலை அமெரிக்காவில் மட்டுமல்ல; பல ஐரோப்பிய நாடுகளிலும் பிரிட்டனிலும் நீடிக்கிறது. ஆனால், அந்த நாடுகளில் எல்லாம், “தங்களுடைய நாடுதான் முதலாவது நாடு, தங்களுக்குப் பிரச்சினைகளே வராது” என்கிற லட்சியக் கனவெல்லாம் கிடையாது. எனவே, அவர்கள் வாழ்க்கையை யதார்த்தமாக எதிர்கொள்கிறார்கள். அமெரிக்கர்கள் வெளியில் சொல்லத் தெரியாமல் மனம் புழுங்குகிறார்கள்!


~~~~~~~~~~~
 © தி கார்டியன்,
 தமிழில்: சாரி - நன்றி-திஹிந்து

Wednesday, September 25, 2013

தலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவனிங்க!!!


              பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும்,  பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு. 
பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:
மூளை:
            மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.  
குடல்:
            குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.  
மார்பகம்:
            பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.  
சிறுநீர்ப்பை:
             இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.   
நுரையீரல்:
             20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு , உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான். 
குரல்:
            தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும்.  65 வயதுக்கு பலவீனமாகி, குரல்  ‘கரகர’ தான்.  
கண்:
             பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.  

இருதயம்:
             ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால்,  மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும்  குறைகிறது.  
கல்லீரல்:
           இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது.  குவாட்டரை நினைக்காதவரை  இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.  
சிறுநீரகம்:
            ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.  

எலும்புகள்:
            25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.  
பற்கள்:
            எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான்  சிலரிடம் கப்ஸ்.  

தசைகள்:
            முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.  

தோல்:
            தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.  

தலைமுடி:
           முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்;  வெள்ளை முடி தோன்றும்.

~~~~~~~~~~
தமிழ்வாசி பிரகாஷ்

குறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா?




         ஏதாவது ஒரு கடவுளின் பெயரைப் போட்டு, அந்தக் கடவுளுக்கான மந்திரங்களையும் குறிப்பிட்டு வரும் குறுஞ்செய்தியை 10 பேருக்கு அனுப்பி வைத்தால் 24 மணி நேரத்தில்  நல்ல காரியம் கிட்டும். "அசட்டையாக இருந்து அழித்துவிட்டாலோ, அனுப்பாமல் விட்டாலோ அவ்வளவுதான். சோதனை தொடங்கிவிடும்'.  ஒரு காலத்தில் துண்டுப்பிரசுரமாக வந்த இந்தச் செய்தி, இப்போது நவீன அறிவியல் வளர்ச்சிக்கேற்ப "நன்கு வளர்ந்து' செல்போன்களில் குறுஞ்செய்திகளாக வரத் தொடங்கியிருக்கின்றன.       

               ஏதாவதொரு சாமியாரின் பெயரைப் போட்டு, "இத்தோடு உங்களின் கஷ்டகாலம் நீங்கியது, இவர் உங்களை ரட்சிப்பார். இந்தச் செய்தியை 20 பேருக்கு அனுப்பி வையுங்கள். அடுத்த 30 நிமிஷங்களில் நல்லது நடக்கும், நம்புங்கள்' இதுவும் ஒரு வகை.    பள்ளி, கல்லூரித் தேர்வுக் காலங்களில் "சீசன்ஸ் கிரீட்டிங்ஸ்' போலவே ஒரு குறுஞ்செய்தி உண்டு. ஏதாவதொரு கடவுளின் பெயருடன் "ஐ லவ் யு' சேர்த்து, "இந்தக் குறுஞ்செய்தியை 10 பேருக்கு அனுப்பிவைத்தால் பரீட்சையில் தேர்வாகிவிடலாம்'.  பயந்து போய் தன்னிடமுள்ள அத்தனை எண்களுக்கும் இவற்றை அனுப்பிவைக்கும் பரிதாபமான மாணவ, மாணவிகள் ஏராளம். படிக்கிற நேரத்தில் குறுஞ்செய்தி அனுப்பி அவர்களிடமிருந்து பதில், வசவு எல்லாவற்றையும் வாங்கிக் கட்டிக் கொண்டு தேர்வு எழுதும் அறைக்குச் சென்றால்...?  

             அடுத்து அறிவியல்பூர்வமான அச்சுறுத்தல் (!) "சில செல்போன் எண்களைக் குறிப்பிட்டு அவற்றிலிருந்து வரும் அழைப்புகளை சட்டை செய்யாதீர்கள். அவற்றை எடுத்துப் பேசினால், வைரஸ் உங்களின் செல்போன்களுக்குள் புகுந்து, செயலிழக்கச் செய்துவிடும்' என்ற குறுஞ்செய்தி பலரையும் அச்சுறுத்தியது.  அந்தக் குறுஞ்செய்தியில், பலருக்கும் இதை அனுப்பி வையுங்கள். யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற "அக்கறை' வேறு. அந்தச் செய்தியிலிருந்த எந்தவொரு எண்ணும் செயல்படாத எண் என்பது தொடர்பு கொண்டு பார்த்தால்தான் தெரியும். வைரஸ் பயம் காரணமாக எவரும் இந்தப் பரிசோதனையில் ஈடுபடுவதில்லை.  "அறிவியல்' என்றவுடன் சுலபமாக நம்பி விடுகின்றனர். ஏனென்றால், நம்மில் கணினி வைத்திருப்பவர்களுக்கு "சாஃப்ட்வேர் வைரஸ்', "ஹார்டுவேர் வைரஸ்' ஏற்கெனவே அறிமுகம். 

             இன்னும் சில குறுஞ்செய்திகள், "இரவு 11 மணி முதல் 12 மணி வரை விண்ணிலிருந்து செல்போன்களைத் தாக்கும் கதிர்கள் இறங்குகின்றன. அந்த நேரத்தில் செல்போன்களை அணைத்து வையுங்கள். மறக்காமல் (யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்) நண்பர்களுக்கு இந்தச் செய்தியை அனுப்பிவையுங்கள்' என்கிறது.  இதுபோன்ற குறுஞ்செய்திகள் இன்னும் வலுவைச் சேர்த்துக் கொள்வதற்காக ஏதாவது ஒரு பிரபல ஆங்கில நாளிதழையும் துணைக்கு அழைத்துக் கொள்கின்றன. "மேலும் விவரங்களுக்கு நேற்றைய நாளிதழைப் பாருங்கள்- நாசா அறிவித்திருக்கிறது'. சம்பந்தப்பட்ட நாளிதழில் பணியாற்றுவோருக்கே இந்த குறுஞ்செய்திகள் செல்லும்போது அவர்களுக்கும் பேரதிர்ச்சி.

                இன்னொன்று, ஏதாவதொரு வலைப்பூவின் முகவரியைப் போட்டு வரும் குறுஞ்செய்திகள். "அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அந்த வலைப்பூவின் உரிமையாளர் உங்களின் செல்போனுக்கு ரூ. 72.81 பைசா "டாப் அப்' செய்வார். அடுத்த இரு நிமிஷங்கள் கழித்து கணக்கிலுள்ள மீதித் தொகையைச் சரிபாருங்கள்'. சரிபார்த்தால் என்ன இருக்கும்? எதுவும் இருக்காது. இதுவரை இருந்த தொகையும் குறுஞ்செய்தி அனுப்பிய வகையில் கழிந்து காலியாகியிருக்கும். 

              எங்கிருந்து இவை வருகின்றன என்பதை அத்தனை சுலபமாகக் கண்டறிந்து நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ஏனென்றால், நமக்கு வரும் செய்தி கட்டாயம் நமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்களாலேயே அனுப்பி வைக்கப்படுகிறது. அதிகபட்சம் அவர்களைக் கடிந்து கொள்ளத்தான் முடியும். அவர்களுக்கும் கிட்டத்தட்ட நண்பர்கள்தான் அனுப்பிவைக்கின்றனர். இப்படியே விசாரித்து, விசாரித்துச் சென்றாலும் அனுமார் வாலைப் போல நீள்கிறது விசாரணை.  ஒரு கட்டத்தில் விசாரணை துண்டித்துப் போய்விடும். ஏனென்றால், பெரும்பாலானவர்கள் வந்த குறுஞ்செய்தியை சேமித்து வைத்திருப்பதில்லை. ஏதாவதொரு செல்போனில் அது வந்த வழி அழிந்து போயிருக்கும்.  வியாபார நோக்கில் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களே இதுபோன்ற குறுஞ்செய்திகளைப் பரப்புகின்றன என்ற குற்றச்சாட்டையும் உறுதி செய்ய முடியவில்லை. 

               மக்களின் நம்பிக்கை, மூடநம்பிக்கை, அவநம்பிக்கை எல்லாவற்றையும் பயன்படுத்தி செய்யப்படும் இதுவும் ஒருவகையில் மோசடிதான்.   ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். நமக்கு வரும் செய்திகளை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு அனுப்பிவைப்பது அபத்தம் மட்டுமல்ல, அநாகரிகமும்கூட. பெரும்பாலான இளைஞர்கள் பொழுதுபோக்காகவே இதைச் செய்கின்றனர்.  அடுத்து பரிதாபப்படுபவர்களுக்காக. குறுஞ்செய்தியின் தொடக்கமே, "அசட்டையாக இருந்து அழித்துவிடாதீர்கள்' என்பதுதான். 

        "இருதய அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 வயதுக் குழந்தைக்கு மருத்துவச் செலவுக்காக நிதி தேவைப்படுகிறது. இந்தக் குறுஞ்செய்தியை நண்பர்களுக்கு அனுப்பிவைத்தால் போதும். அதன்மூலம் தலா பத்து பைசா பாதிக்கப்பட்டுள்ள குழந்தைக்குச் சென்றடையும்'.÷இப்படி எத்தனை பத்து பைசாக்கள் சேரும்? திட்டமிட்டு செய்யப்படும் இந்த வியாபார உத்தியை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்.  

             அடுத்து பாசத்துக்காக... "ஐ லவ் மை மம்மி'. இதை நண்பர்களுக்கு அனுப்பிவைத்தால் அம்மா - மகள் உறவு, அம்மா - மகன் உறவு செழிக்குமாம். குறுஞ்செய்தி அனுப்பினால் இந்த உறவுகள் செழிக்குமா என்ன? 

~~~~~~~~~~~~
தமிழ்வாசி பிரகாஷ்

காதல் - அது எப்படிப்பட்டது...





காதல் மிகவும் மென்மையானது இரு மனங்கள் மட்டுமே புரிந்துக் கொள்ளக்கூடிய ரகசிய வார்த்தைகளின் தொகுப்பு, அன்பு தீபங்களின் ஒளி வெள்ளத்தில் மூழ்கும் இரு உள்ளங்களின் துடிப்பை விவரிக்க எத்தனை கவிஞர்கள் வந்தாலும் ஈடாகாது.


விழி பேச, இதயம் கேட்க அப்பப்பா.... அந்ந ஓசையின் தாக்கம் அந்தக் 
காதலர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு மனித்துளியும் ஆனந்த ரீங்காரமிட்டுக் 
கொண்டேயிருக்கும்.

மனதில் காதல் அரும்பிய அந்த நாட்களில் உலகமே பூப்பூக்கிறது. ஒவ்வொரு நாள் 
விடியலிலும் அவளின் முகம் நூறு சூரியன்களை ஒத்திருப்பதை போலதொர உணர்வு. 
அவளின் கடைக்கன் பார்வையில், இவன் உள்ளம் வானத்தை முட்டி, அதையும் தாண்டி 
மேலே பறக்கத் தொடங்கியிருக்கும்.

முதன்முதலாக அருகருகே நடக்கத் தொடங்கும்போது சிறு அச்ச உணர்வுடன் 
தொடர்வது இனிமையிலும் இனிமை. வர்ணனையைத் தாண்டிய மெல்லிய உணர்வு அது.


இனி வரும் இரவுகளிலெல்லாம் அவள் மட்டும்தான் துணை. தூக்கத்தை மறந்து, அவள் 
நினைவுகளில் மூழ்கிய இரவுகள் தீயிலிட்டதைப்போன்று மிகவும் வெப்பமானது.




தனக்கெனவே துடிக்கும் இதயம் ;தன் வெளிக்காற்றை உள்காற்றாக ஏற்கும் நுரையீரல்.
இப்படி உலகமே அவளாக அவள் மட்டுமாக காட்சியளிக்கத் தொடங்குகிறது. உயிர்த்துடிப்பின் ஜீவ ஆதாரமான அவளுடனான வாழ்க்கையை காதல் அவனுக்குள் அவனையறியாமலேயே புகுத்தி விடுகின்றது. இனி அவளைப் பிரிப்பதும் அவனைக் கொல்வதும் ஒன்றாகி விடுகின்றது.
மெல்லத்தொடரும் இந்த நாட்கள் மகிழ்ச்சி ஆரவாரமிக்க நாட்களாகி விடுகின்றது.
முதல் ஸ்பரிசம் பேரானந்தத்திற்கு வழி கோலுகிறது. அவளைப்பற்றியதான எண்ணங்கள் மேலும் தீவிரமடைகின்றன. இருவருக்குமிடையேயான உறவு வலுப்பெறத் தொடங்குகிறது. 



தலைவனும், தலைவியும் உலகைப் புதிதாக காணத் தொடங்குகிறார்கள். எங்கும் ஆனந்த பூக்கோலம், மகிழ்ச்சி வெள்ளம், சுற்றியும ஆயிரம் பேர் இருந்தாலும் இவர்கள் இருவர் மட்டும் தனித்தே இருப்பதாக ஒரு உணர்வு கற்பனையில் கண்ட காட்சிகளை நிஜத்திலும் கண்டிட துடிக்கும் இரு இதயங்களின் ஓசை, அவர்கள் மட்டுமே அறிக்கூடியது. வார்த்தைகளால் விவரிக்க இயலாதது ஆதலின் வாழ்க்கையை ஆனந்தப் பூங்காவாக்கீட அனைவரும் காதல் செய்வீர்!


~~~~~~~~~~~~~~~~~~

ரூபன்

Friday, September 13, 2013

மெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்!!!



                  

இன்று நமது அழியாத நினைவுகளை பதிய வைக்க நாம் பயன்படுத்தும் முக்கியமான பொருள் தான் மெமரி கார்டு ஆகும். இது மொபைல் போன், டிஜிட்டல் கேமரா, ஜி.பி.எஸ். நேவிகேஷன் சாதனங்கள் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களில் இவற்றை ஒரு முக்கிய பகுதியாகவே நாம் இயக்குகிறோம். இதனை நாம் எல்லாரும் பயன்படுத்தினாலும், அதன் தன்மை, வகைகள் குறித்து அவ்வளவாக யாரும் தெரிந்து வைத்திருப்பதில்லை. சில தகவல்களை இங்கு காணலாம். செக்யூர் டிஜிட்டல் கார்டின் வரையறைகள் 1999ல் முடிவு செய்யப்பட்டன. மல்ட்டி மீடியா கார்டுக்கு மேலான வகையில் இதனை அமைத்தனர். இந்த கார்டின் அடிப்படைத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்பதனை எஸ்.டி. கார்ட் அசோசியேஷன் என்னும் அமைப்பு முடிவு செய்கிறது. ஏறத்தாழ 400 பிராண்ட் பெயர்களில், எஸ்.டி. கார்டுகள் தயார் செய்யப்படுகின்றன. ஏறத்தாழ 8,000 மாடல் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. செக்யூர் டிஜிட்டல் பார்மட் என்று சொல்லும் போது அதில் நான்கு வகையான கார்ட் பிரிவுகள் உள்ளன. அவை Standard Capacity (SDSC), the High Capacity (SDHC), the extended Capacity (SDXC), மற்றும் SDIO. இதோ அதை பற்றி மேலும் நீங்கள் அறியாத பல தகவல்கள்....


மெமரி கார்டு பற்றிய சில தகவல்கள்!!!

எஸ்.டி. கார்ட் என்பது ஒரு சாலிட் ஸ்டேட் டிவைஸ். இதில் நகரும் பகுதி என எதுவும் இல்லை. எலக்ட்ரிக்கல் சர்க்யூட்களையே இவை சார்ந்திருக்கின்றன.



எஸ்.டி. கார்ட்கள் மூன்று அளவுகளில் கிடைக்கின்றன. அவை standard SD (32 x 24 millimeters), miniSD (20 x 21.5 millimeters) and microSD (15 x 11 millimeters)

SD, SDHC and SDXC என்று குறிப்பிடுகையில், நாம் எஸ்.டி. கார்ட்களின் எந்த தன்மையைக் கொண்டு வேறுபடுத்துகிறோம்? எஸ்.டி. கார்ட் வளர்ச்சி, கெபாசிட்டி திறன் ஆகியவையே இந்த மூன்றின் வகைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன.



ஒரு எஸ்.டி. கார்டின் வேகம் அதிகமாக இருந்தால், வீடியோ பதிவின் போது, டேட்டா அதிகமாக கைப்படுத்தப்படும். என்னும் தரத்தில் வேகம் இருந்தால், நொடிக்கு 312 எம்.பி. தகவல்கள் எழுதப்படும் மற்றும் படிக்கப்படும். இதனால், நிச்சயம் நல்ல தெளிவான வீடியோ பதிவு ஏற்படும்.

எஸ்.டி. கார்ட் வரையறையில், அதன் உள்ளார்ந்த சி.பி.ஆர்.எம். தொழில் நுட்பம் எதனைக் குறிக்கிறது? இது Content Protection for Recordable Media (CPRM) என்று விரித்துச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு எஸ்.டி. கார்டிலும் இந்த தொழில் நுட்பம் உள்ளது.

இதை மீண்டும் திறந்து இயக்கலாம் என்ற வகையில் உள்ளது. இதை மூடிவிட்டால், எழுதவோ, உள்ளிருப்பவற்றை மாற்றவோ முடியாது. மீண்டும் திறந்து, அழிக்கவும், மேலே எழுதவும் முடியும்.



எஸ்.டி. (SD) மற்றும் எஸ்.டி. எச்.சி (SDHC) கார்ட்களைக் காட்டிலும், எஸ்.டி. எக்ஸ்.சி. (SDXC) கூடுதல் கெபாசிட்டி திறன் கொண்டது. இதே போல் தான் இவற்றின் மைக்ரோ எஸ்.டி. கார்ட் வகைகளும். மிகச் சிறிய microSDXC கார்ட், microSD and microSDHC கார்ட்களைக் காட்டிலும் அதிக கொள்ளளவு கொண்டது.

இதில் நாம் பெரிய எஸ்.டி.கார்ட் ஸ்லாட்டில், மைக்ரோ எஸ்.டி. கார்டை செலுத்தி, தகவல்களைப் படிக்க நம்மால் படிக்க அல்லது பார்க்க முடியும்.

SD Formatter software என்ற சாப்ட்வேர் புரோகிராமின் படி நாம் இதை பார்மேட் செய்ய வேண்டும் ஹார்ட் ட்ரைவிற்கான, டிஸ்க் மேனேஜ்மெண்ட் டூல்களை இதற்குப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எஸ்.டி.கார்டில் உள்ள காப்பி பாதுகாப்பு தொழில் நுட்பத்தினைக் கெடுத்துவிடலாம்.

ஒரு எஸ்.டி. கார்டினை எத்தனை முறை எழுதவும் அழிக்கவும் செய்திடலாம் இவற்றைத் தயாரிக்கும் தோஷிபாவின் கூற்றுப்படி, 10,000 சுழற்சிகள் வரை ஒரு எஸ்.டி.கார்டில், டேட்டாவினைப் பதியலாம் மற்றும் அழிக்கலாம். ஒரு கார்டில் ஒவ்வொரு நாளும், ஒரு முறை டேட்டாவினை முழுமையாக அழித்து எழுதினாலும், 10,000 சுழற்சிகள் மேற்கொள்ள 27 ஆண்டுகள் ஆகும்.

------------------

http://tamil.gizbot.com

உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா..



சவுதி அரேபியா..

பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின்கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமேதிரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?ஆம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலேஉடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி என்பது நாம்அனைவரும் நன்கு அறிந்ததே. அத்துடன்இப்பொழுது ஒரு புதிய சாதனையை பெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதி அரபியர்கள். ஆம்..!உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World's LargestUniversity Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். 

இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப் பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக்கழகத்திற்குள் ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கிப் படிப்பதற்காக 12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26கி.மீ தூரத்தை தாண்டி நீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..!!

உலகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்குமெட்ரோ ரயில் அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்றுசொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தில் பரப்பளவு விரிந்துக்கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!

கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல்
பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

இதுமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு 700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக் கூடம்,நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில் நுட்பம்,உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனி துறைகள் இயக்கி இருக்கிறார்கள்.இத்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த்அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் (Princess Nora Bint Abdulrahman
University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20
பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது தகவல்கள்.

நன்றி
சிந்தனைகளம்