Thursday, February 21, 2013

திருமண வாழ்வின அஸ்திவாரமே புரிதலும் நம்பிக்கையும்தான்!




கணவன் மனைவி ஆகிய‌ இருவரிடமும் சரியான புரிதலும், மனப் பக்குவமும்இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி இன்றைய கால த்தில் திருமணம் செய்து கொள்பவர் கள், திருமணத்தை ஒரு விளையாட் டாகவே நினைப்பதால்தான், அந்த உறவுக்கு முடிவை தேடிக்கொள்கின் றனர். இந் த உலகில் இருக்கும் உறவு முறைக ளிலேயே கணவன்- மனைவி உறவு தான் மிகவும் சிறந்தது.
-
இத்தகைய உறவை வாழ்நாள் முழுவ தும் தக்க வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களே உண் மையான அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த உறவில் அனைத்து உறவுகளுமே அட ங்கும். எனவே இத்தகைய அருமையான திருமண உறவிற்கு முறிவு என்னும் பெயரில் இருக்கும் விவாகரத்து ஏற்படாமல் இரு ப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை பட்டியலிட் டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரி ந்து கொள்ளுங்கள்…
-
*கணவன்-மனைவி இருவருக்குள்சண்டை வருவது சாதாரணம் தான். ஆனால் அந்த பிரச்சனை உடனே தீர் ந்துவிட வேண்டும். இல்லையெனில் அந்தபிரச்சனையே இருவ ருக்கும் இடையில் பெரும் பிரிவை ஏற் படுத்தும். அதற்கு முதலில் அந்த பிரச்சனையைப் பற்றி இருவ ரும் பொறுமையாக பேச வேண்டும். இந் நேரத்தில் ஈகோவை மனதில் கொண்டு நடந்தால், பின் இருவரும் வாழ்நாள் முழுவதும் பிரிய வேண் டி வரும்.
-
*சந்தோஷமான வாழ்க்கை அமை ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. சண்டைகள் வந்தால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கான வழிமுறைகளை யும் யோசித்து, அவற்றை தீர்ப்பதற்கு முயல வேண்டும். இவ்வாறு தீர்வு கண் டால், நிச்சயம் விவாகரத்தை தவிர்க்க முடியும்.
-
* விவாகரத்து நிச்சயம் வேண்டும் என்று நினைக்கும் தருவாயில், அத னை தடுப்பதற்கு நடந்த சண்டையை மறந்து, இருவரும் சந்தோ ஷமாக இருந்த தருணங்களை நினைத்து பார்த்தால், கண்டிப்பாக விவாகரத்தை தவிர்க்க லாம்.
‘தவறுசெய்வதால்தான், சண்டைகள் வருகின்றன. இந்த உலகில் தவறு செய்யாதவர்களே இருக்க மாட்டார்கள். மேலும்தவறு செய் தவர்கள், தவறை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் அந்த உறவு மிகவும்அழகாக இருக்கும். எனவே தவறு யார் மீது இருந்தாலும், அப்போது ஈகோ பார் க்காமல், மன்னிப்பு கேட்க வேண்டும்.


 
-
*நடைமுறை மற்றும் பழக்க வழக்கங்க ளை சூழ் நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். அதை விட்டு எப்போதுமே ஒரே மாதிரி செயல்பட்டால், பின் இருவருக்கும்இடையில் எந்த நேரமும் சண்டைவந்து கொண்டே இருக்கும். ஆக வே ஒரு சில மாற்ற ங்கள் கூட விவாகரத்தை தடுக்கும்.
-
* திருமண வாழ்வில் சரியான புரிதல் மற்றும் நம்பிக்கை தான் மிகவு ம் முக்கியமானது. அந்த சரியான புரிதல் மட்டும் இல்லா விட்டால், அது இறுதியில் நம்பிக்கையின் மையை ஏற்படுத்திவிடும். பின் எந்நேரமும் சண்டை வருவதோடு,இறுதியில் விவா கரத்து வரை சென்று விடும். எனவே எதுவா னாலும் மனதில் கொண்டு செயல்படாமல், அதனைபேசி இருவ ரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள் வதன் மூலம், பிரித லை தடுக்கலாம். ஆனால் அது சற்று தாமத மாகி விட்டாலும், பின் விவாகரத்து தான் முடிவு.
-
இவை அனைத்தையும் மனதில் கொண்டு செயல் பட்டால், விவாகரத்து ஏற்படுவதைத் தடுத்து, சந்தோ ஷமான திருமண வாழ்வை மேற்கொள்ளலாம்.

----------------------------------------
விதை2விருட்சம்

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

16
வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய 
ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது 
என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து
விடுகிறார்கள்.




இந்த
வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் 
பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். 
ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… 
காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை..
உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் 
மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு… 3 மாதம் 
கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட 
நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத 
கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 
ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். 
நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் 
ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து 
மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி 
நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து
விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்…

வாரத்திற்கு குறைந்த பட்சம்
10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது
ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்”
பட காட்சிதான்.

அவர்களை
அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை 
ரணமாக்குகிறது.. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு… என்ற சொல்லும் அந்த
மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து
வளர்த்து… 
வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை 
காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை 
எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி 
அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும்,
டி.வி.யில்
காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் 
பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற 
எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது 
காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன்
சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி..வி.யில்
வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள்
இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் 
மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார 
பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில்
நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய 
ஆரம்பிக்கிறது…

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை 
பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை 
அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது 
இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் 
விதிவிலக்கு! போலீஸ் நிலையத்திற்கு வாரம் 15 புகார்களும், குறைந்த பட்சம் 
10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள்
பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி 
செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ, தோழிகளுடனோ அதிகமாக வெளியில் 
செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை 
பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் 
காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க 
வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க
அனுமதிக்காதீர்கள்.
டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். 
தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு 
முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் 
என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த 
பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை 
ஏற்படுத்தும்…

இது கல்லுரி செல்லும் மாணவிகளுக்கும் பொருத்தும்.

---------------------------------
http://www.eegarai.net/t96244-topic