Thursday, December 5, 2013

என் காதல் கணவா

 


அத்தை மகனே என் மாமனே 
என் பிள்ளையின் தகப்பனே 

நீ வேடிக்கை பார்க்கையில் 
நான் விதையாக இருந்தேன் 

நீ விளையாடும் பருவத்திலே 
நான் வேடிக்கைப் பார்த்தேன் 

நீ விறுவிறுப்பாய் வளர்ந்திடவே 
நான் விளையாடித் திரிந்தேன் 

நீ வில்அம்பாய் காதல் பார்வை வீச 
நான் விறுவிறுப்பாய் வளர்ந்தேன் 

நீ விசிய காதல்அம்பில் மனைவியாக்க 
நான் காதல் பார்வையை ரசித்து கரைந்தேன் 

நீவாழ்வின் விதையை உற்பத்தி செய்ய 
நான் மனைவியென உன்னுள் மூழ்கிபோனேன் 

நீ விதைத்த விதை வேரூன்ற பாடுபட 
நான் விதைக்கு பதியமிட்டு மகிழ்ந்தேன் 

நீ பாடுபட்ட விதை விருட்சமாக வளர்ந்திட 
நான் விதைக்கும் உனக்குமாய் வாழ்ந்தேன் 

நீ விதையுமற்று விருட்சமுமற்று என்னைகாக்க 
நான் விசும்பல்களாய் உன்னுள் உறங்கிப்போனேன் 

நீ நான் என்பதெல்லம் நீதானென்று மாற்றம்பெற 
என்னையே நான் உண்ணுள்கண்டு மடிசாய்ந்தேன் 

கல்லறையிலும் கைபிடித்தபடி கண்ணுறங்குவேன் 
நீ என்னுடனிருப்பாய் என் காதல் கணவா ... 


---------------
...கவியாழினி..