Friday, November 9, 2012

லண்டனில் திப்பு சுல்தானின் நேரடி வாரிசு நூர் இனயத் கானின் சிலை திறப்பு


18-ம் நூற்றாண்டில் இந்தியாவின் மைசூர் பகுதியை மன்னர் திப்பு சுல்தான் ஆண்டு வந்தார். அவரின் நேரடி வாரிசான நூர் இனயத் கான் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பிரிட்டனுக்காக பிரான்சில் இருந்து உளவு வேலைகளில் ஈடுபட்டு வந்தார். உளவு இளவரசி என்று அழைக்கப்பட்ட 30 வயதான நூர் இனயத் கான் ஜெர்மனியின் நாசிப்படையினரால் அப்போது பிடிக்கப்பட்டார். பின்னர் 1944-ம் ஆண்டு அவர் கொடுமைபடுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

உளவு இளவரசி நூரின் தியாகத்தை ஞாபகப்படுத்தும் விதமாக லண்டனில் உள்ள கோர்டன் ஸ்குயர் கார்டன் பகுதியில் நேற்று அவருக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டது. அவரின் தைரியத்தையும் தியாகத்தையும் புகழ்ந்து, பாராட்டி ராணி எலிசபெத்தின் மகள் இளவரசி அன்னே இந்த சிலையை திறந்து வைத்தார்.

பிரிட்டனில் திறக்கப்பட்ட முதல் முஸ்லிம் சிலை இதுவாகும். மேலும் ஆசியாவின் முதல் பெண் சிலையும் இதுவே என்றும் கூறப்படுகிறது. 60 வருடங்களுக்கு பிறகு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த கௌரவம் பத்துமாதம் கொடுமைபடுத்தப்பட்ட அவரின் தியாகத்திற்கு இணையானது அல்ல என்றும் கூறப்படுகிறது.
:::::::நன்றி::::::மாலைமலர்:::::::

லண்டனில் திப்பு சுல்தானின் நேரடி வாரிசு நூர் இனயத் கானின் சிலை திறப்பு

76 காரட் இந்திய வைரம் ஜெனீவாவில் ஏலத்திற்கு வருகிறது: ரூ.82 கோடிக்கு விலை போக வாய்ப்பு


76 காரட் இந்திய வைரம் ஜெனீவாவில் ஏலத்திற்கு வருகிறது: ரூ.82 கோடிக்கு விலை போக வாய்ப்பு


உலகில் உள்ள அரிய வகை மற்றும் மிகவும் புகழ்பெற்ற வைரங்கங்களில் ஒன்றான ஆர்ச்டியூக் ஜோசப் என்ற இந்திய வைரம் ஏலத்திற்கு வருகிறது. ஆந்திர மாநிலம் கோல்கொண்டா சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட 76.02 கேரட் வைரமான ஆர்ச்டியூக் ஜோசப், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டீ ஏல நிறுவனத்தில் வரும் செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட உள்ளது. 

அப்போது இந்த வைரம் ரூ.82 கோடிக்கும் அதிகம் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த வெட்டு (கட்) வடிவம், நிறம் மற்றும் ஜொலிப்பு கொண்ட ஆர்ச்டியூக் ஜோசப், இதுவரை ஏலத்தில் விடப்பட்ட விலைமதிப்பற்ற வைரங்களில் ஒன்றாகும். 

கோல்கொண்டா சுரங்கத்தில் கோகினூர் போன்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க வைரங்கள் கிடைத்துள்ளன என்று கிறிஸ்டி ஏல நிறுவனத்தின் மூத்த நிபுணர் ஜீன்-மர்க் லூனல் தெரிவித்தார். இந்த வைரம் இதற்கு முன்பு ஹங்கேரி மன்னர் ஆர்ச்டியூக் ஜோசபிடம் இருந்தது. இதனால் அவரது பெயரை இந்த வைரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

 :::::::நன்றி::::::மாலைமலர்:::::::

‘செல்’பேச்சை குறைங்க... இல்லைன்னா ‘செல் திசு’ சூடாயிரும்.....

Study Finds Cell Phones Stir Brain

செல்போனை அளவிற்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கு அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சினால் செல் திசுக்கள் சூடாகிவிடும் அபாயம் உள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் மூளையில் பாதிப்பு வருவதோடு ஏதேனும் சிறிய கட்டிகள் இருந்தால் கூட அது பெரிதாகிவிடும் வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் முக்கியமான எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளது.
அழிந்து வரும் குருவிகள்
பச்சைப் பசுமையான மரங்கள் இருந்த இடங்களில் காங்கிரீட் கட்டிடங்கள் முளைத்தன. அந்த கட்டிடங்களின் மேல் இப்போது வரிசையாக செல்போன் கோபுரங்கள் முளைத்து காக்கை, குருவி இனங்களைக் கூட அழித்து வருகின்றன என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.
செல்போன் நிறுவனங்களில் பிரச்சாரம்
செல்போன் கதிர்வீச்சினால் எந்த பாதிப்பும் இல்லை இது டிஎன்ஏவை சிதைக்காது என்று செல்போன் நிறுவனங்கள் பசப்பு வார்த்தைகளை தெரிவித்து வருகின்றன. சர்வதேச ஆணையம் பரிந்துரைக்கும் பாதுகாப்பு அளவுக்கு ரொம்ப குறைவாகத்தான் செல்போன் கோபுரங்கள் உமிழும் கதிர்வீச்சு இருக்கும் என்றும் சப்பைக் கட்டு கட்டுகின்றன நிறுவனங்கள்.
செல் திசுக்கள் சூடாகும்
செல்போன் நிறுவனங்களின் பொய்யான பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது செல்போன் கதிர்வீச்சு டி.என்.ஏவை பாதிக்கா விட்டாலும் அது செல் திசுக்களை சூடாக்கும் என்று தெரிவித்துள்ளது.
மூளைப் புற்றுநோய் வரும்
செல்போன்களின் ஆன்டனா உமிழும் கதிர்வீச்சை மூளையின் சில பகுதிகள் உள்வாங்கி மூளை வளர்ச்சிதை மாற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதாம். இதனால் மூளைப் புற்றுநோய் கண்டிப்பாக வரும் என்கின்றனர் நிபுணர்கள்.
உலக சுகாதார நிறுவனம்
இதை உறுதிப் படுத்தும் வகையில் 2000-லிருந்து 2004 வரை 5 வருடங்களில் 13 நாடுகளில் கைபேசி உபயோகிக்கும் 12 ஆயிரத்து 800 நபர்களிடம் 8 வித ஆய்வுகள் மேற்கொண்டதில் 6 ஆய்வுகள் அளவுக் கதிகமாக செல்போன் உபயோகிப்பதற்கும் மூளையில் கட்டி ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
காதொலி நரம்பு பாதிக்கும்
10 வருடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களின் மூளைக்கும் காதிற்கும் இடையிலான மிருதுவான `அகோஸ்டிக் நியூரினோமா' எனப்படும் காதொலி நரம்பு அதிகஅளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று மற்றொரு ஆய்வு குறிப்பிடுகிறது.
உடல் வெப்பநிலை அதிகரிக்கும்
நமது மூளையில் மின்சார ஓட்டம் உள்ளது. செல்போனில் இருந்து வெளியாகும் மின்காந்த கதிர்வீச்சு மூளையின் மின்னோட்டத்தைப் பாதிக்கிறது. தொடர்ந்து 20 நிமிடம் செல்போனில் பேசினாலே நமது உடம்பின் வெப்பநிலை 1 டிகிரி அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கின்றனர் இந்திய ஆய்வாளர்கள்.
என்னென்ன பிரச்சினை வரும்
அலைபேசி வெளிவிடும் மின்காந்த கதிர்வீச்சினால் புத்தி பேதலிக்கும் மூளைக்காய்ச்சல், காது செவிடா கும் தன்மை, உமிழ்நீர் சுரப்பிகளில் கட்டி, விந்து உற்பத்தி குறைதல், இயல்பிற்கு மாறான இதயத்துடிப்பு, புற்றுநோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
விந்தணு உற்பத்தி குறையும்
2004-ல் அலைபேசி உபயோகிக்கும் ஆண்களை ஆய்வு செய்தபோது அடிக்கடி செல்போன் உபயோகிக்கும் ஆண்களுக்கு 30 சதவீதம் விந்தணு உற்பத்தி குறைவாக இருப்பது தெரியவந்தது.
செல்போன் கோபுரம் வேணுமா?
இந்த பாதிப்புகள் உங்களுக்கு வராமல் இருக்க கூடுமானவரை செல்போனில் பேசுவதை குறையுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். இ.மெயில், லேண்ட்லைன் உபயோகித்தால் சிக்கல் ஏற்படாமல் தப்பிக்கலாம் என்று கூறும் நிபுணர்கள். வீட்டு மொட்டை மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க இடம் கொடுக்காதீர்கள் என்கின்றனர்.