Monday, November 5, 2012

முடி அதிகம் கொட்டுதா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...


நிறைய மக்கள் சைவ உணவுகளால் கூந்தல் வலுவிழக்கிறது என்று நினைக்கின்றன. உண்மையில் சைவ உணவுகளால் கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் எப்படியோ அந்த சைவ உணவுகளால் இதயம் ஆரோக்கியத்துடன் இருப்பதோடு, உடல் எடை குறைகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேப் போல் ஒரு சில சைவ உணவுகளாலும் கூந்தல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
சைவ உணவுகள் சிலவற்றால் கூந்தல் நன்கு வலுவடைவந்து, கூந்தல் உதிர்தல் தடுக்கப்படும் என்று ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் மாசடைந்து சுற்றுசூழல் காரணமாக கூந்தலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏன், அந்த பிரச்சனைகளால் வலுக்கைத் தலை கூட வருகிறது. சொல்லப்போனால் கூந்தலை வைத்தே உடலின் ஆரோக்கியத்தைப் பற்றி சொல்லலாம். நீங்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியத்துடன் எந்த பிரச்சனையுமின்றி இருக்கும். இல்லையெனில் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, வறட்சி போன்றவை ஏற்படும்.
இவையெல்லாம் வருவதற்கு காரணம், உடலில் போதிய சத்துக்கள் இல்லாததே ஆகும். ஆனால் தற்போது அத்தகைய சத்துக்கள் அனைத்தும், சைவ உணவுகளில் உள்ளன. அதிலும் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களான ஜிங்க், வைட்டமின் சி, புரோட்டீன் போன்றவை உள்ள உணவுகளை சாப்பிட்டாலே, கூந்தலில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும். இப்போது அந்த சத்துக்கள் எந்த உணவுப் பொருட்களில் அதிகம் உள்ளன என்பதைப் பார்ப்போமா!!!
                   

சோயா பீன்ஸ்

கூந்தல் பொதுவாக கெராட்டீன் என்னும் புரோட்டீனால் தான் உருவானது. அதனால் தான் கூந்தல் உதிர்ந்தால் புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர். ஏனெனில் அவை கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, பழுதடைந்த முடியை சரிசெய்கிறது.

பாதாம்

பாதாமில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இவை கூந்தலை விரைவில் வளரச் செய்கிறது. மேலும் கால்சியம் சத்தும் அதிக அளவில் உள்ளது. இதனால் கூந்தலின் வேர்கள் நன்கு வலுவடையும் மற்றும் இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூந்தலை பட்டுப் போன்று மென்மையாக வைக்கிறது.

ப்ரௌன் அரிசி

இந்த வகையான அரிசியில் காப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உள்ள இந்த அரிசியை அதிகம் உணவில் சேர்த்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை காய்கறிகளான பசலைக் கீரை, கடுகு கீரை போன்றவற்றில் கூந்தலுக்கு தேவையான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதிலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள், இரும்புச்சத்துக்களை உடலில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஏனென்றால் அதில் தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஏனெனில் வைட்டமின் சி கொலாஜென் உற்பத்திக்கு உதவுகிறது. கொலாஜென் தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் ஒரு பொருள்.

சீஸ்

வலுவிழந்து இருக்கும் முடியை சரிசெய்வதற்குத் தேவையான புரோட்டீன் சீஸில் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், அதில் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே இதனை உணவில் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுக்கலாம்.
.

ஓட்ஸ்

ஓட்ஸில் இருக்கும் இரும்பு சத்தை உடலானது எளிதில் உறிஞ்சிக் கொள்ளும். மேலும் இதில் எளிதில் கிடைக்காத பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளன.

கொண்டைக்கடலை

பருப்பு வகைகளில் ஒன்றான கொண்டைக்கடலையில் அதிக அளவில் ஜிங்க் உள்ளது. இது ஸ்கால்ப்பில் பொடுகு ஏற்படாமல் தடுப்பதில் சிறந்தது. அதிலும் இதில் உள்ள கனிமச்சத்துக்கள் பொடுகு வராமல் பாதுகாப்பதில் சிறந்தது. எனவே இதனை உணவில் சேர்த்தால், கூந்தல் உதிர்தலை தடுக்கலாம்.


பருக்களால் ஏற்படும் தழும்புகளை எப்படி தடுக்கலாம்?


அழகான முகத்தில் பருக்கள் வந்தால், அது எங்கு பெரிதாக மாறி, முக அழகை கெடுத்துவிடுமோ என்று பயந்து, அதனை ஒரே நாளில் போக்க கடைகளில் விற்கும் க்ரீம்கள் மற்றும் செயற்கை பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் நிறைய மக்கள் அதனை போக்குவதற்கு இயற்கை பொருட்களான வீட்டு மருந்துகளையே பயன்படுத்துகின்றனர்.
how prevent pimple scars
எத்தனை பொருட்களை பயன்படுத்தினாலும், பருக்கள் போய்விடுமே தவிர அதனால் ஏற்படும் தழும்புகள் போவதில்லை. இவை முகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. ஆகவே இத்தகைய முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க ஒரு சில ஈஸியான வழிகள் இருக்கின்றன.
முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க...
* முகத்தில் பருக்கள் வந்தால், உடனே அவற்றை உடைக்கக் கூடாது. ஏனெனில் அவற்றை உடைத்தால், அவற்றிலிருந்து வரும் சீல், முகத்தில் பரவி நிறைய பருக்களை வர வைப்பதோடு, அவை பரு வந்த இடத்தில் தழும்புகளை ஏற்படுத்திவிடும்.
* நிறைய பேர் பருக்களை போக்க இயற்கை பொருளான கிராம்பை பேஸ்ட் செய்து தடவுவார்கள். இந்த முறை நல்ல பலனைத் தரும் தான், ஆனால் முகத்தில் தழும்புகளை ஏற்படுத்தும். ஆகவே அதனை பயன்படுத்துதை விட, சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தி செய்தால், நல்லது.
* முகத்தில் பருக்கள் மற்றும் தழும்புகள் ஏற்படாமல் இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் மாசுக்கள் மற்றும அழுக்குகள் தான் முகத்தில் பருக்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே வெளியே சென்று வீட்டிற்கு வந்தால், உடனே முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
* பருக்கள் முகத்தில் இருந்தால், வெயிலில் அதிகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். சூரியனிடமிருநது வெளிவரும் புறஊதாக் கதிர்கள், சரும செல்களை பாதிப்பதோடு, பருக்களை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி தழும்பை ஏற்படுத்திவிடும்.
* பருக்களை குறைக்க சிறந்த ஃபேஸ் பேக் என்றால், அது ரோஸ் வாட்டர் மற்றும் சந்தனம் தான். ஆகவே பருக்கள் இருப்பவர்கள், முகத்திற்கு சந்தன ஃபேஸ் பேக் போடுவது நல்லது. இதனால் பருக்கள் குறைகிறதோ இல்லையோ, ஆனால் தழும்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
மேற்கூறியவற்றை செய்து வந்தால், பருக்களினால் ஏற்படும் தழும்புகளை நீக்கலாம். மேலும் ஏற்கனவே பருக்கள் இருப்பவர்கள், ஆலிவ் ஆயில் அல்லது வெள்ளரிக்காயை வைத்து மசாஜ் செய்யலாம். வேண்டுமென்றால் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தாலும், பருக்கள் குறையும். பருக்களை குறைக்க ஒரு இயற்கைப் பொருள் என்றால் அது கற்றாழை. இந்த கற்றாழையை முகத்தில் தடவி, 1-2 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து 3-5 நாட்கள் செய்தால், சருமம் நன்கு பொலிவோடு, எந்த ஒரு பருக்களும் இல்லாமல் காணப்படும்.
thanks:    Greynium Information Technologies Pvt. Ltd.

நமக்கு ஏற்படும் பசி உணர்வை குறைக்க சில ஆரோக்கியமான வழிகள்..!


இன்றைய அவசர காலத்தில் எதையும் சரியாக செய்ய முடியாத நிலையில் உள்ளோம். அதிலும் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் தான் நாம் நடந்து வருகிறோம். அதாவது உண்ணும் உணவை சரியாக உண்ணாமல், உடலை வருத்தி வருகிறோம். இல்லையெனில் உணவை அதிகம் உண்டு, பின் அதனால் உடல் எடை அதிகரிக்கிறது என்று வருந்தி, அதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறோம்.
அவ்வாறு உணவை சரியாக உண்ணாமல் இருப்பதால், அடிக்கடி பசி ஏற்பட்டு, அடிக்கடி பசி எடுக்கும் நிலை ஏற்படுகிறது. ஆகவே அநத் நேரம் ஏதாவது ஒரு ஆரோக்கியமற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு, வராத நோய்களை வரவழைத்துக் கொண்டு பிற்காலத்தில் கஷ்டப்படுகிறோம். எனவே இந்த மாதிரியான நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், நமக்கு ஏற்படும் பசி உணர்வை குறைக்க சில ஆரோக்கியமான வழிகள் இருக்கின்றன. இந்த செயல்களை செய்தால், உடலில் உள்ள மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் எடை குறைந்து, பசியின்மையும் நீங்கும். இப்போது அந்த பசி வேதனையைக் குறைக்க உள்ள சிறந்த வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படும் உணர்வு தடுக்கப்படும். அதிலும் சிக்கன் மற்றும் மீனில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்துள்ளது. மேலும் சைவ உணவுகளில் பீன்ஸ், பால் பொருட்கள், பாதாம் போன்றவை சிறந்தது.

சரியான உணவுகள்

சாப்பிடும் போது எந்த உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். ஏனெனில் சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் பசி ஏற்படுகிறதென்றால், அப்போது பழங்கள், கலோரி குறைவாக பால் பொருட்கள், சூப் போன்றவற்றை சாப்பிட்டால், மேலும் பசிக்காமல் இருப்பதை தடுக்கலாம்.

கார உணவுகள்

உணவில் காரம் அதிகம் சேர்த்து சாப்பிட்டால், அது உடலில் உள்ள மெட்டபாலிசத்தின் வேகத்தை அதிகரித்து, பசி உணர்வை தடுக்கும். அதற்காக மிளகாய் தூளை அதிகம் சேர்த்து விட வேண்டாம். இவை செரிமான மண்டலத்திற்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும்.

உடற்பயிற்சி

உடல் ஆரோக்கியத்திற்கு 80% டயட் மற்றும் 20% உடற்பயிற்சி முக்கியமானது. அதற்காக சரியான அளவில் உணவை சாப்பிட்டாமல், உடல் பயிற்சியை மட்டும் செய்தால், அதிக அளவில் தான் பசி எடுக்கும். ஆனால் சரியான அளவில் உணவு உண்டு, உடற்பயிற்சி செய்தால், சரியான நேரத்திற்கு மட்டும் தான் பசி எடுக்கும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
நீர்ச்சத்து
உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இருந்தால், அடிக்கடி பசி எடுக்காது. ஆகவே தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை தாகத்தின் போது குடித்தால், பசி தணியும், எடையும் குறையும்.


உணவுகளை தவிர்த்தல்

காலை உணவை மறக்காமல் சாப்பிட்டு வந்தால், கண்ட நேரத்தில் பசி எடுக்காமல் இருக்கும். இல்லையெனில் அடிக்கடி பசி எடுத்து, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்டு, உடல் எடை அதிகரிக்கும். சொல்லப்போனால், சாப்பிடாமல் இருப்பது, உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியமான காரணம்.

நிதானமாக சாப்பிடுதல்

உணவு நன்கு சுவையோடு இருந்தால், அப்போது அந்த சுவையினால் அவசர அவசரமாக சாப்பிடுவோம். மேலும் அந்த நேரம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று அளவே தெரியாமல் சாப்பிடுவோம். அதுவே மெதுவாக மென்று சாப்பிட்டால், குறைவாக உண்பதோடு, உடல் எடையும் ஈஸியாக குறையும்.

நல்ல தூக்கம்

தூக்கமின்மையால் அதிக பசி எடுக்கும். ஏனெனில் சரியான தூக்கம் இல்லாவிட்டால், உடலில் உள்ள மெலாடொனின் ஹார்மோன் பசியை தூண்டும்.

thanks:    Greynium Information Technologies Pvt. Ltd.