Monday, December 17, 2012

இளம் காதலர்களே.. “மடலூர”வும் தயார்தானே ..


என்ன.... லைலா-மஜ்னு,அம்பிகாபதி-அமராவதி வம்சத்தில் வந்த காதல் சாம்ராஜ்யத்தின் வாரிசுகளே.... நலம்தானே....? 

காதல் மட்டும் இல்லையென்றால் ... ஹே..யப்பா.... இந்த உலகம் 
எவ்வளவு கொடுமையாக இருந்திருக்கும்.. ? விலங்குகளோடு வேற்றுமையில்லாமல் மானிட மிருகமும் கூடித்திரிந்திருக்கும்... 
மலர்களும்,செடிகளும்,மரங்களும்... எல்லாம் தத்தமது நிறங்களை இழந்து , கறுப்பு வெள்ளையில் அல்லவா காய்த்துப்போயிருக்கும்... ??! 

காதல் பற்றி எத்தனை முறை, எத்தனை பேர், எத்தனை வகையில் சொன்னாலும் .. திரும்பவுமே புதிதாக சொல்லப்பட்டது போல .. ஏதோ ஒரு சுவாரசியம்.. புதைந்திருப்பது.. அதிசயத்திலும் அதிசயம்தான்... ??? 

காதலை மட்டும் கடவுள் படைக்காமல் இருந்திருந்தால் ....ஏது இங்கு மனிதனின் அடையாளம்... ?காதல் வந்தபிறகே பூமியில் எல்லாம் வந்தது....  

கிரேக்கத்திலும், சுமேரிய நாகரிகத்திலும், எகிப்திய வம்சத்திலும் எண்ணற்ற காதல் பொக்கிசங்கள் குவிந்து கிடக்கின்றன... இந்த காதலில் நம் தமிழர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன... அங்கே ஒரு கிளியோபாட்ராவை உயர்த்திச் சொன்னால்.. இங்கே மாதவி 
”இதோ நானிருக்கிறேன் “என்று ஒடோடியும் வருவாளே... ? 

இன்னும் சொல்லப்போனால்.. அங்கே காதல் பேசப்பட்ட அளவிற்கு காமமும் சேர்ந்தே பேசப்பட்டது... இங்கோ.. உண்மையான காதலில் , களங்கமில்லாத கற்பு , சந்தனத்தில் மணம்போலா இயற்கையாகவே கலந்திருந்தது... கற்பில்லாத காதலை நம்மவர்கள் காதலென்றே ஏற்றுக்கொண்டதில்லை... காமம் என்றே தள்ளிவைத்தார்கள்... 


                 

தமிழனின் நாகரிகம் இன்றளவும் பேசப்படுவதற்கு ..அடிப்படையாக.... இழையோடும் காரணமாக.... இந்த உண்மையான காதலைத்தான் நான் சொல்வேன்... காதல் இவனுக்கு கம்பீரம்...!! காதல் பெண்மையே ஆண்மையின் மணிமகுடம்...!!! 

இமயமாய் நிமிர்ந்த , பெண்மையின் மென்மைச் சாயலை , நமது முன்னோரின் எல்லா கலை படைப்புகளிலும் ... நம்மால் காண முடிவதற்கு, காதலும் ஒரு காரணம்... 

அந்த வகையிலே.. இன்றைய காதலர்களில் பெரும்பாலோருக்கு தெரியாத , அன்றைய காதல் வாழ்க்கையில் இடம்பெற்ற ஒரு சுவையான காதல் நிகழ்வினை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.... 

மடலூர்தல் ... இளம்காதலர்களே... இந்த சொல்லை இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறீர்களா.... ? 



இன்றைய காலகட்டத்தில் ஏற்படுவது போலவே அன்றும் காதலில் வெற்றி,தோல்வி எப்போதும் உண்டு. வெற்றிபெறுகிறபொழுது விண்ணையும் முட்டுகிற உற்சாகம், தோற்றுப்போகிற பொழுதோ , ஒரு கூழாங்கல் தட்டினால்கூட , நிலைதடுமாறி விழுகிற வேதனை அன்றும் காதலர்களுக்கு உண்டு... 

அன்று காதல் கொண்ட பெண்ணை, அது தெரிய வருகிற போது , வீட்டுக்குள்ளேயே போட்டு பூட்டி வைத்துவிடுவார்கள் பெண் வீட்டார்.... அந்த இக்கட்டான சூழலில் , அந்த காதலை ஊருக்கும், உலகுக்கும் தெரிவித்து , தான் விரும்பிய பெண்ணையே மணம் முடிக்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் ஆண் பிள்ளைகள் தலைமேல்... என்ன செய்வது.. எப்படி இதை தெரிவிப்பது... அந்த 
தருணத்தில் அவர்கள் செய்கிற ஒரு நிகழ்வினைத்தான் ”மடலூர்தல்” என்று நமது காவியங்கள் கொண்டாடுகின்றன... 

அந்த காதலன் , பனங்குருத்தினால் செய்த ஒரு குதிரையை செய்து எடுத்துக்கொண்டுபோய் , தன் காதலியின் ஊருக்குள்ளே சென்று, அதன்மேல் அமர்ந்துகொண்டு , அந்த ஊரில் விளையாடும் சிறுவர்களை அழைத்து , அந்த குதிரையை ஊரிலுள்ள எல்லா தெருக்களின் வழியாகவும் இழுத்துக்கொண்டு போகச்செய்வானாம்... பனங்குருத்தானது , மிகவும் கூர்மையாகவும், அதன்மீது அமர்பவரின் தோலை அறுக்ககூடியதாகவும் இருக்குமென்பதால் , உடம்பெல்லாம் புண்ணாக, இரத்தக்களறியாய் காதலன் ஊர்வலம் வர, பார்ப்பவர்கள் அத்தனை பேரும் அவன்மீது பரிதாபப்பட்டு ,இரக்கம்கொண்டு அவனுக்காக, அந்த காதலர்களுக்காக , பெண் வீட்டாரிடம் பேசி மணம் முடிக்க முயற்சிப்பது தனிக்கதை.... ! 

”கலித்தொகையில் “” இந்த மடலூரும் காட்சிகளை நிறைய பாடல்களில் காணலாம்.. 

ஒரு பெண் கூட , ” பெண்ணாய் இருந்தாலும் என்ன , மடலூரி , என் காதலரை அடைவேன் “என்று சபதம் இட்ட காட்சியெல்லாம்கூட நம் இலக்கியங்களில் உண்டு.... 

இன்றைய காதலர்கள் கெட்டிக்காரர்கள்... ”மடலூரிப்”போவதை விடவும், சில “ மடல்களிலேயே” அப்பா,அம்மாவை மடக்கி காதலில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.... இல்லையா... ??! 

                 

இளம் காதலர்களே...  திருக்குறளில் மூன்றாம் பாலில் உள்ள அதிகாரங்களை படியுங்கள்.. காதலின் இன்பத்தை, அந்த காதல் ரசத்தை , திருவள்ளுவர் சொன்னதுபோல , வேறு எந்த கவிஞனும் , இவ்வளவு சுவையாக, இனிமையாக சொல்ல முடியுமா என்பது சந்தேகமே.... ??!! 


உடலால் தீண்டுகிற இன்பத்தைவிடவும், உடல் விலகி இருக்க , உயிரால் தீண்டுகிற இன்பமே சுவை மிகுந்தது என்பதையும் தெரிந்துகொள்வீர்கள்... 


::::எழுத்து இணையம் :::

அழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்)....


அழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்).... - கட்டுரை


அழிந்த மொழிகளும் அழியாத தமிழும்... (என்றும் சாகாது தமிழ்).... 

மொழி எ‎னப்படுவது எ‎ன்ன? 

எழுத்து - சொல் – வாக்கியம் என அமைந்த இலக்கணமா? காதல் – வீரம் எ‎ன்பதைக் கற்பனை நயத்துட‎ன் விளக்கும் இலக்கியமா? அல்லது எண்ணங்களையும் ஏடல்களையும் பரிமாறிக்கொள்ள பய‎ன்படும் தொடர்புக் கருவியா? இவற்றில் எதுவுமே ‏இல்லை! 

மொழி எ‎னப்படுவது ஓர் இனத்தின் அடையாளம் – பண்பாடு – வாழ்வியல் – வரலாறு எல்லாமே! மொத்தத்தில் ஓர் இனத்தி‎ன் உயிரும் – உயிர்ப்பும் மொழியே ஆகும். 

ஓர் இனம் அழியாமல் ‏இருக்க அந்த இனத்தி‎ன் மொழி உயிரோடும் - உயிர்ப்போடும் இருத்தல் வேண்டும். அந்த வகையில், பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு வகையான தடைகளைக் கடந்து தமிழ் இன்றளவும் உயிரோடு இருப்பதே நமக்குப் பெருமைதரக்கூடிய வரலாறாகும். காலத்தால் தொ‎ன்மையும் தெய்வத்தன்மையும் பெற்று ‏இருப்பதால்தான், நாடோ - அரசோ - ஆட்சியாளரோ இல்லாத நிலையிலும் தமிழும் தமிழினமும் இ‎ன்றும் நிலைத்திருக்கி‎ன்றன. 

உலகில் தோன்றிய பல பழம்பெரும் மொழிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ் மட்டுமே இன்றளவும் வளத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. 




4500 ஆண்டுகளுக்கு முன் பிரமிடுகளைக் கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்து மொழி இன்று உலக வழக்கில் இல்லை. 

3000 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் எழுதப்பட்ட வட இந்திய மொழியாகிய சமஸ்கிருதம் இன்று வழக்கில் இல்லை. தேவ மொழியாகப் போற்றப்பட்டாலும் சம்ம்ஸ்கிருதம் மக்கள் வழக்கிலிருந்து செத்தமொழியாகவே ஆகிவிட்டது. இம்மொழியைப் பேசவோ எழுதவோ அல்லது புரிந்துகொள்ளவோ அது தோன்றிய இந்திய மண்ணிலேயே எவரும் இலர் என்றே சொல்லலாம். 

2800 ஆண்டுகளுக்கு முன் உரோமாபுரி மன்னர்கள் வளர்த்த தாய்மொழியும் ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழியுமாகிய இலத்தீன் மொழி இன்று இல்லை. மேலைநாட்டு அகராதிகளில் மட்டுமே இம்மொழியைக் காணலாம். 

2600 ஆண்டுகளுக்கு முன் புத்தர் பெருமான் பேசிய பாலி மொழி இன்று இல்லை. புத்த நெறி உலகின் பல பகுதிகளில் வாழ்ந்தாலும்கூட அந்தத் திருநெறி தோன்றிய பாலிமொழி உலக வழக்கிலிருந்து அழிந்துவிட்டது. 

2300 ஆண்டுகளுக்கு முன் மாபெரும் எழுச்சியோடு உலகை ஆட்டிப்படைத்த மகா அலெக்சாந்தர் பேசிய மொழி; சாக்கிரட்டீசு, பிளாட்டோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் தாய்மொழியான கிரேக்க மொழி கிட்டதட்ட அழிந்துபோய், தற்போது கிரேக்க அரசினால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பெற்று வளர்க்கப்படுகிறது. 

2006 ஆண்டுகளுக்கு முன் உலகில் தோன்றி அன்புவழி காட்டிய ஏசுபிரான் பேசிய அரமிக்–ஈபுரு மொழியும் கிட்டதட்ட அழிந்து போய்விட்டது. 

மேற்குறிப்பிட்ட மொழிகளுக்கு முற்பட்ட மொழியாகக் கருதப்படும் சீன மொழி காலத்தால் பல்வேறு மாற்றங்களை அடைந்து இன்றைய நிலையில் சீன மக்களின் பேச்சு மொழிகள் வேறு வேறாகவும் எழுத்து மொழி மாண்டரின் மொழியாகவும் ஆகிவிட்டது. பழஞ்சீனம் இன்று எவருக்கும் புரிவதில்லை. 



ஆனால்... இந்தப் பழம் பெரும் மொழிகள் வாழ்ந்த காலத்திலும் வளமாக வாழ்ந்து... இன்றும் இளமையோடு வாழும் ஒரே மொழி... நம் தமிழ் மொழிதான். இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக தமிழ் மக்கள் பெருமையடையலாம். 

தமிழ் மொழியின் சிறப்புகள்... 

தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள், வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல் திருக்குறள் மற்றும் உச்சரிப்பு இனிமை போன்ற கருத்துக்கள் தான். 

தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். 

தமிழில் பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகை உண்டு. அவை பிரித்துப்பார்க்க வேண்டியவை, பிரித்துப்பார்க்க கூடாதவையாகும். 

உதாரணமாக கடவுள் (கட+ உள் ) என்ற சொல்லின் பொருள் எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன் என்பதல்ல. நீ ஆசைகளை , பந்த பாசங்கள் எல்லாவற்றையும் கட உனக்குள் கடவுள் இருப்பான் என்பதாகும். 

எண்கள் என்றால் அரேபியர்களை தான் கூறுகின்றனர் ஆனால் அவர்களுக்கு அது பற்றி ஒன்று தெரியவில்லை. கேட்டால் இந்தியர்களிடம் இருந்து வந்தது என்கின்றனர். வட இந்தியனை கேட்டால் அவனுக்கு ஒன்றும் தெரியாது. இந்திய அரேபிய குழப்பத்தில் இருக்கும் எண்களை தமிழ் கல்வெட்டுகளில் பாருங்கள். உங்களுக்கே புரியும். 

இது சிறிய அளவின் பிரிவுகள் . 

1/102400 – கீழ்முந்திரி 
1/2150400 – இம்மி 
1/23654400 – மும்மி 
1/165580800 – அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001 
1/1490227200 – குணம் 
1/7451136000 – பந்தம் 
1/44706816000 – பாகம் 
1/312947712000 – விந்தம் 
1/5320111104000 – நாகவிந்தம் 
1/74481555456000 – சிந்தை 
1/489631109120000 – கதிர்முனை 
1/9585244364800000 – குரல்வளைப்படி 
1/575114661888000000 – வெள்ளம் 
1/57511466188800000000 – நுண்மணல் 
1/2323824530227200000000 – தேர்த்துகள் 

இந்த இம்மியளவும் அசையாது என்று நம் பேச்சு வழக்கில் பேசும் சொல். 

தமிழை அழகு தமிழ் ,இசைத்தமிழ் ,அமுதத்தமிழ் என மேலும் பல பெயர்கள் உண்டு . (இணைப்பு கீழே உள்ளது) 

தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவம் இனிமையானதொடு மட்டும்மல்லாது அதை உச்சரிக்கும் போது குறைந்தளவு காற்றே வெளியேறுகிறது .இது மொழியியலார்களின் ஆராய்ச்சி முடிவு . 

உலகில் இருக்கும் எந்த மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் குன்றாமல் மொழி பெயர்த்து விடலாம் .ஆனால் தமிழை அப்படியே பிரதிபலிக்க வேறு எந்த மொழிகளாலும் முடியாது . 

ஏன் உங்கள் காதலிக்கு உங்கள் காதலை கூட சரியாக மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த தமிழால் மட்டுமே முடியும் .

 

உதாரணமாக ஆங்கிலம் மற்ற மொழிகளை கடன் வாங்கி வளர்ந்ததால் அதன் சொல் உச்சரிப்புக்கும் எழுத்து உச்சரிப்புக்கும் சம்மந்தமே இருக்காது . 

தமிழில் அன்பை இப்படி பிரிக்கலாம் . அ + ன்+ பு (ப்+உ) இந்த எழுத்துக்களை தனித்தனியே எப்படி உச்சரித்தாலும் அதே சொல் தான். LOVE உச்சரித்தால் எல்ஒவிஇ என்று தான் வரும். 

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களும் தமிழின் சிறப்பு எழுத்துக்கள் எனலாம் . அதிலும் ழ உலகமொழிகளில் பிரெஞ்சில் மட்டும் தான் காணப்படுகிறது . (நற்றமிழ் இலக்கணம்:டாக்டர் சொ.பரமசிவம்). தமிழுக்கே சிறப்பான ழகரம் உச்சரிப்புக்கள் எத்தனை பேர் சரியாக உச்சரிக்கிறார்கள் என்பது தான் கவலை. உச்சரித்து பாருங்கள். அல்லது பாடி பாருங்கள் அதன் இனிமை உணர்வீர்கள். 

டாக்டர் கால்ர்டு வேல் போப் என்பவர்கள் தமிழை கற்று திருக்குறள், திருவாசகத்தை மொழிபெயர்த்தவர்கள் ஆவார்கள். கலப்பில்லாத தூய தமிழ் என போப் தான் இறந்த பிறகு கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என பொறிக்க சொன்னார். முக்கியமாக இந்த “கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக “எனும் குரல் கிட்டத்தட்ட 3000 வருடங்கள் முன் எழுதியது. இது இப்போது படித்தாலும் சாதாரண மனிதனுக்கே விளங்கும். 3000 வருடங்களுக்கு முன்னர் இப்படி தமிழில் எழுதும் அளவுக்கு (இரண்டு வரியில் இவ்வவளவு அர்த்தம் ) மொழி அப்போதே வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் அது எவ்வளவு காலத்திற்கு முதல் தோன்றியிருக்க வேண்டும் என சிந்தித்து பாருங்கள். சீனன் சீன மொழியில் பேசினான் சீனா வளர்ந்தது , பிரான்ஸ் நாட்டுக்காரன் பிரெஞ்சு மொழியில் பேசினான் பிரான்ஸ் வளர்ந்தது. தமிழன் ஆங்கிலத்தில் பேசினான் அமெரிக்கா வளர்ந்தது. 

1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ் 

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ் 

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ் 

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ் 

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ் 

6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ் 

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு) 

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது 

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது) 

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது. 

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்) 

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ் 

13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்) 

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ் 

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ் 

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ் 

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ் 

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ் 

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது 

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்) 

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ் 

22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ் 

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது 

24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ் 

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ் 

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது 

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ் 

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ் 

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை) 

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ் 

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது 

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது 

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது 

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது 

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா) 

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ் 

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்) 

38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ். 



தாய் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம் 
தாலாட்டுப் பாடிய எங்கள் தாய் மொழியே 
வாய்மொழி பேசியே வளர்த்தவள் தாய் 
வாழ்வெல்லாம் தமிழ் உணர்த்தியவள் தாய்! 

வள்ளுவர் இளங்கோ கம்பரென 
வாழ்ந்தவர் காவியம் படைத்த மொழி 
துள்ளிடும் இசை நயம் நிறைந்த மொழி 
தூய நல் இலக்கணம் அமைந்த மொழி! 

ஆண்டாள் ஒளவையார் பெண்புலவர் 
அன்புடன் பேணிய எம்மொழியே 
அணையா விளக்காய் அகிலமெல்லாம் 
அலங்கரிக்கும் தமிழே செம்மொழியே! 

நாவையே அசைத்துப் பேச வைக்கும் 
நம் தமிழ் மொழியே செந்தமிழே 
பாவையே எங்கள் தென்மொழியே 
பாடுவோம் வாழிய செம்மொழியே!... 



செ. சத்யாசெந்தில், முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு, 
மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், 
தமிழ்நாடு - இந்தியா.



::::எழுத்து இணையம் :::

alcohol - மதிமயக்கும் சில தகவல்கள்


                                   



-முருகானந்தன்
 -


அரேபியா போன்ற சில நாடுகளைத்தவிர , இன்றைக்கு உலகமெங்கும் முதியவர்கள் , இளைஞர்கள் மட்டுமல்ல.... இளைஞிகளை கூட தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கும் ஆல்கஹால் என்னும் மாயமோகினியின் வசீகரிக்கும் சில தகவல்களை தெரிந்துகொள்வது குடிமகன்களான (??!) நமது கடமை அல்லவா..... ?? 

ஆல்கஹால் என்று சொன்னாலே விஸ்கியும் , பிராண்டியும்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். பிராண்டி என்பது Brandewijn 
என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது. ” எரிக்கப்பட்ட வைன்” 
( Burnt Wine ) என்பது இதன் பொருள்.... ! ஆம், வைனை உயர்வெப்ப நிலையில் கொதிக்கவைக்கிறபோது, அதிலுள்ள சர்க்கரை பொருட்கள் பிரிந்து , ஆல்கஹாலாகவும் , நீராகவும் மாறுகிறது. இந்த ஆல்கஹாலே பின்னர் பல்வேறு மதுபானங்களாக நடைமுறையில் மாற்றம் செய்யப்படுகிறது. “ வைன் “ என்பது திராட்சை பழரசத்தினை பல நாட்களுக்கு புளிக்கவைக்கிறபோது கிடைக்கிற ஒன்று. இந்த புளிக்கவைத்தலை ஆங்கிலத்தில் FERMENTATION என்று சொல்வார்கள். 


 

                       
பொதுவாக திராட்சை தவிர ஆப்பிள்,அரிசி,கோதுமை மற்றும் சர்க்கரை சத்து நிறைந்துள்ள எந்த ஒரு உணவுப் பொருளிலிருந்தும் ஆல்கஹாலை தயாரிக்க முடியும். 

ஒவ்வொரு நாட்டிற்கும் அதெற்கென பிரத்தியோகமான பிராண்டி மதுபான பிராண்டுகள் உண்டு . இத்தாலியில் கிரப்பா , போலாஇந்தில் ஸ்லிவிவிட்ஸ் , ஜப்பானில் சோச்சு , அமெரிக்காவில் பார்பன் , பிரெஞ்சு கோக்நாக் .....இப்படி பல பிராண்டுகள் இருந்தாலும் பிரெஞ்சின் கோக்நாக் தான் உலகிலேயே உன்னதமான தரமான பிராண்ட்.....!!! 

மனித நாகரிகம் தோன்றிய பொழுதே மதுபானம் தோன்றியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. தன் மனைவி மதுபானத்தை அருந்தியிருப்பாளோ..? என்ற சந்தேகத்தில் ரோமானிய வீரன் ஒருவன் முதன்முதலில் அவளது இதழ்களை சுவைத்து பார்க்க , அதிலிருந்து வந்தது தான் காதலர்கள் இதழ்களில் முத்தத்தை பரிமாறிக்கொள்கிற பழக்கம் என்கிற சுவையான தகவலும் உண்டு..... ! வியாபார நோக்கில் மதுபானம் தயாரிக்க ஆரம்பித்தது கிமு 800 வாக்கில்தான்... 
ஜாபீர் இபின் ஹய்யான் என்கிற அரேபிய விஞ்ஞானி தன்னுடைய புத்தகத்தில் மதுபானம் தயாரிக்கிற முறைகளை எட்டாம் நூற்றாண்டிலேயே விரிவாக சொல்லியிருக்கிறார் ... 

                          


எது எப்படி ஆனாலும், அன்றைய மனித நாகரித்தில் மதுபானம் 
முக்கிய இடம் வகித்திருந்தது என்பதற்கு ரோமானியர்கள் அதை இலத்தீன் மொழியில் அழைத்த விதத்திலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.. ”அக்வா விட்டே” ( aqua vitae) , உயிர்தண்ணீர் ( water of life ) என்றே அது அழைக்கப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்களேன்... ! நம்முடைய இதிகாசங்களிலும் , வேதங்களிலும் கூட .. சோமபானம், சுரபானம் என்கிற மதுபானங்களை தேவர்களும், அசுரர்களும் அருந்தியதாக அறிகிறோம்....! ஐரோப்பியர்கள் திராட்சையிலிருந்து மதுபானம் தயாரிக்க , மத்திய கிழக்கினை சேர்ந்தவர்கள் அரிசி,கோதுமை போன்ற உணவுப்பொருட்களிலிருந்து தயாரிக்க, ஆசியர்கள் குதிரையின் பாலிலிருந்து மதுபானம் தயாரித்ததுதான் சுவாரஸ்யம்... முதன்முதலில் வடிகட்டி தயாரிக்கபட்ட சுத்தமான( ??) மதுபானமும் இதுதான்... !!!! 

                                      

இவ்வளவு ஏன்.... அமெரிக்காவில் ஒருகாலத்தில் தடை செய்யப்பட்டிருந்த ( நம்புங்கள்... காந்தியின் மதுவிலக்கு கொள்கைக்கு முன்னரே, மதுவிலக்கு அமெரிக்காவில் 1920 களில் இருந்து 1932 வரை அமலில் இருந்தது...) சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட ஆல்கஹாலால் கள்ளச்சாராய விபத்துகள் அதிகமாக , 1932 போட்டியிட்ட ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் , தான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் , மதுபான தடையை நீக்குவதாக பிரச்சாரம் செய்ய, அவரின் இந்த பிரச்சாரத்திற்கு கைமேல் பலன் கிடைத்தது... ஆம், அந்த ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக அவர் வெற்றிபெற்றார்.... ( ஏன் நம்மூர் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் இந்த விசயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது தெரிந்ததா.... ? ) 


மனித இனம் இருக்கும் வரைக்கும் மயக்கும் மதுபானமும் இருக்கும்.. எந்த அரசாங்கம் வந்தாலும் , இதை மட்டும் தடைசெய்யவோ , ஒழிக்கவோ முடியாது என்பது மட்டும் 
சர்வ நிச்சயமாக தெரிகிறது... இல்லையா !!!???



::::எழுத்து, இணையம் :::

காதலும், காமமும்

                                

-பைத்தியக்காரன் -              


வாழ்க்கை முழுவதும் ஒரு நபரைப் புணர்வதற்கான விருப்பத்தையே நாம் காதல் என்ற பெயரில் அழைக்கிறோம். - நான் 

நான் இந்த அத்தியாயத்தை எழுதுவதற்குத் தயங்குகிறேன். ஏனென்றால், பதிவயதினரால் புனிதமானதாகக் கருதப்படும் ஒரு விஷயத்தின் இரத்தமும், சதையுமான அங்கத்தை நான் வெளிப்படுத்தப் போகிறேன். ஆனால் நான் கண்டறிந்த உண்மையை எழுதுவதையும், ஆதரிப்பதையும் நான் என் கடமையாகக் கருதுகிறேன். 

எனக்குப் பதினெட்டு வயதாகும் போது நான் காதலை முதன் முறையாக உணர்ந்தேன். அவள் ஒல்லியாகவும், நடுத்தர உயரத்துடனும், செவ்விய வெண்மை நிறத்துடனும் இருந்தாள். நான் எதனால் அவளைக் காதலித்தேன் என்பதை நான் அப்போது அறியவில்லை. அவள் அந்த அளவுக்கு அழகியில்லை. அவளை விட சிறந்த அழகிகளை அதற்கு முன்பும் பின்பும் சந்தித்திருக்கிறேன். அவளது உடல் எனக்குள் மோகத்தை மூட்டவில்லை. நான் அழகானவன் என்று நான் கூறவில்லை. நான் கவர்ச்சியற்றவனாகவே இருந்தேன். 


                                           

காலங்கள் கடந்த போது எனது ஈடிபஸ் மனப்பான்மையே அக்காதலுக்குக் காரணமாக இருந்தது என்பதை உணர்ந்தேன். நான் சந்தித்த எந்தப் பெண்ணையும் விட, எனது தாயாரைப் போன்றே அவள் தோற்றமளித்தாள். அதனாலேயே நான் அவளைக் காதலித்தேன். 

காதலும் காமத்தின் இன்னொரு வடிவம் தான். காமத்தின் சில கொச்சையான பகுதிகளை நீக்கி விட்டு நாம் அதனைக் காதல் என்று அழைக்கிறோம். காதலைக் காமத்திலிருந்து பிரிக்க முடியாது. காதலின் நோக்கம் உடலுறவிலேயே இருக்கிறது. காதலர்கள் எப்போதும் தங்கள் இணையைத் தங்கள் சொத்து என்றே கருதுவார்கள். தங்கள் இணை தங்களைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும் என்று கருதுவார்கள். அந்த விருப்பம் நிறைவேறாத போது அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். 

காதல் முதலில் மன அடிப்படையிலான விருப்பத்திலிருந்தே துவங்குகிறது. காலங்கள் செல்லும் போது உடலின் மீதான ஆவலும், ஈர்ப்பும் வெளிப்படத் துவங்குகிறது. ஷாஜகானும், மும்தாஜ் மகாலும் கடந்த ஆயிரமாண்டுகளின் சிறந்த காதல் இணை என்று கருதப்படுகிறார்கள். மும்தாஜ் ஷாஜகானுக்குப் பதிமூன்று குழந்தைகளை ஈன்று விட்டு தனது பதினான்காவது பிரசவத்தின் போது மரணமடைந்தாள். காமம் என்பது காதலின் பிரிக்க முடியாத பகுதி என்பது இதன் மூலம் தெளிவாகிறது. 

                                    

எனது காதலைப் பொறுத்த வரை நான் முதலில் உடலியல் ஈர்ப்பைப் பற்றி அறியாதவனாகவே இருந்தேன். பிற்காலத்தில் அவள் மீது எனக்கு உடலியல் ஈர்ப்பு ஏற்பட்டதைக் குறித்து நானே ஆச்சரியப்பட்டேன். ஆனால் அவளுக்கு என் மீது அப்படிப்பட்ட உடலியல் ஈர்ப்பு தோன்றியிருக்காது என்பதை நான் அறிவேன். ஏனென்றால் நான் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவனில்லை. பெண்கள் காமத்தைப் பற்றியும் கலவியைப் பற்றியும் எத்தகைய எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. எந்தப் பெண்ணாவது இதைப் பற்றித் துணிவுடன் எழுதினால் நான் அறிந்து கொள்வேன். 
நான் எனது முதற்காதலில் தோற்றுப் போனேன். நான் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவன் அல்ல; சிரிக்க சிரிக்க பேசுபவன் அல்ல; வேறு காரணங்களும் இருக்கக் கூடும். ஆனால் அவள் எதனால் என்னைப் புறக்கணித்தாள் என்பதை நான் அறியவில்லை.



::::எழுத்து, இணையம் :::

காதல் என்றால் என்ன?


                      

காதல் சம்பந்தமாக பல தரப்பு எழுத்தாளர்களால் எழுதப்பட்டாலும் உண்மை காதல் பற்றி ஒரு தேடல் எழுந்தது. முக புத்தகத்தில் வரும் பல கவிஞர்கள் காதல் பற்றி கவிதை வடிக்கும் போது அழகு சம்பந்தமாக எழுதுவார்கள். அப்படிபட்ட கவிஞர்கள் யாரையாவது காதலிப்பதாக இருந்தால் அந்த காதல் உண்மை என்று சொல்ல மாட்டேன். அவர்களின் பார்வை வெறும் அழகை மட்டும் சுற்றிய ஒரு குறுகிய வட்ட சிந்தனையில் எழுந்த காதலாக மட்டுமே பார்க்க முடியும். 

அடுத்து உன் அக்கா இல்லை என்றால், உன் தங்கை போதும் என்று கருத்து பட கவிதை புனையும் சில கவிஞர்கள், வெறும் ஒரு காமடி கவிஞர்களாகவோ,இல்லை பல டீன் ஏஜ் வயதில் உள்ள இளம் தலைமுறையை மையபடுத்தி எழுதும் கவிஞராகவோ பார்க்க முடியும். அவர்களின் காதல் வரிகள் ஒரு பணம் பண்ணும் இல்லை, தம்மை விளம்பர படுத்தும் நோக்கில் எழுதபட்ட கவியாக மட்டும் தான் பார்க்க முடியும் 
காதலிக்கும் பெண்கள் எப்போதுமே காதலிக்கும் ஆண்களை செலவழிக்க மட்டுமே, பயன்படுத்தும் மணி பர்சாகவே பயன்படுத்துகின்றார்கள் என்று எழுதும் கவிஞர்களும்,உண்மை காதலை சொல்லவில்லை என்றே சொல்லலாம். 


                         

ஆகவே உண்மை காதல் என்றால் என்ன? அது எப்போது வரும்? எந்த காதல் உண்மையில் வெற்றி பெறும்? ஆராயலாம் 
காதல் என்பது உண்மையில் இன கவர்ச்சியில் ஆரம்பித்து அழகுணர்ச்சியில் பயணித்து புரிதலில் வெற்றி பெறும். 
டீன் ஏஜ் காதல் உண்மை காதலா? 
ஒரு ஆணும் பெண்ணும் சாதாரணமாக பழகும் போது அதுவும் டீன் ஏஜ் இல் பழகும் போது அவர்களுக்கான பொறுப்பு மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. இது ஆசிய நாடுகளில் டீன் ஏஜ் தாண்டிய பின்னும் தாய் தந்தையில் சார்ந்து இருக்கும் ஆண் பெண்களின் அளவு அதிகம் என்றே சொல்லலாம். இப்படி பொறுப்பு இல்லாமல் தாய் தந்தையின் உழைப்பில் வாழும் டீன் ஏஜ் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, அந்த வயதை தாண்டிய ஆணும் பெண்ணுமாக இருந்தாலும் சரி தமது உடற் கூறில் ஏற்படும் மாற்றத்தின் விளைவால் ஒரு பெண்ணிற்கு ஆணின் மீதும் ஒரு ஆணிற்கு பெண்ணின் மீதும் ஏற்படும் உடற் கவர்ச்சியை காதல் என்ற சொல்லை சொல்லி தம்மை தாமே ஏமாற்றுகின்றார்கள். இவர்களின் காதல் வேலை என்னவென்றால் ஒன்றாக சுற்றுவது, பீச்சுக்கு செல்வது, சினிமா செல்வது போன்ற பொழுது போக்கில் ஈடுபடுவது மட்டும் தான். இந்த பொழுது போக்கிற்கு பயன் படுத்தும் பணம் என்னவோ அந்த ஆணினதோ இல்லை பெண்ணினதோ தந்தையோ இல்லை தாயோ முதுகு முறிய சம்பாதித்த பணமே தான். எப்போது இன்னொருவரை வருத்தி இன்பம் காணும் காதல் ஏற்படுகின்றதோ அது உண்மை காதல் இல்லை. எந்த ஒரு டீன் ஏஜ் காதலாவது இல்லை அந்த வயதை தாண்டிய காதலாவது தாமே உழைத்து (காதலனும் காதலியும்) தமக்கு செலவளிக்கின்றார்களோ அந்த காதல் மட்டுமே வெற்றி பெறும். ஆகவே டீன் ஏஜ் காதல் அதிகளவில் உண்மை காதலாக இருக்கும் சாத்தியம் குறைவு என்றே சொல்லலாம். அத்துடன் டீன் ஏஜ் தாண்டியும் அப்பா அம்மா சம்பாத்தியத்தில் வாழும் ஆணும் பெண்ணும் செய்யும் காதலும் உண்மை காதலாக இருக்க முடியாது. 

                        


இருபத்தைந்து வயதிற்கு பின்னர் ஏற்படும் காதலை ஓரளவு உண்மை காதல் என்று சொல்ல முடியும். அந்த வயது ஓரளவு சமூக குடும்ப பிரச்சனைகளை சந்திக்க கூடிய மன வலிமையையும் 
சரி பிழைகளை சீர் தூக்கி பார்க்கும் மன தெளிவையும் கொடுக்க கூடியது. ஆனாலும் காதல் பற்றி ஒரு கற்பனையில் வாழும் எந்தவொரு மனிதராலும் உண்மை காதலில் வெற்றி பெற முடியாது. 
காதல் என்பது நடைமுறை வாழ்கையில் ஒன்றி ஆணின் உள் மனதை புரிந்த பெண்ணாலும் பெண்ணின் உள் மனதை புரிந்த ஆணாலும் மட்டுமே வெற்றி பெற முடியும். 

                               


ஒரு ஆணும் பெண்ணும் எப்போது ஒருவரை ஒருவர் மனித நேயத்துடனும் மனிதாபிமானத்துடனும் நோக்குகின்றார்களோ அப்போது தான் காதல் வெற்றி பெறும். 
பெண்ணின் உள் மனதை அறிய முடியாது என்பது ஆணாதிக்க சிந்தனை உள்ள ஆணின் கருத்தே தவிர நடைமுறை வாழ்கையில் அப்படி அறிய முடியா ரகசியம் எதுவும் இல்லை. ஒரு பெண்ணை மிக சரியாக அறிந்து வைத்திருப்பதால் தான் ஆண் இப்போதும் பெண்ணிற்கு எதிராக பாலியல் மோசடியிலும், பெண்ணிய கொடுமைகளிலும் ஈடுபடுகின்றான்.


::::எழுத்து இணையம் :::

திருக்குறளும் அரிய தகவல்களும்


                        

திருக்குறள்:- 

பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் "முப்பால்" என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகின்றது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களை தன்னுள் அடக்கியது. இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் "திருக்குறள்" என்றும் இது பெயர் பெற்றது. 

7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள் கொண்டது. 

திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள்:- 

* நாயனார், 
* தேவர், 
* தெய்வப்புலவர், 
* செந்நாப்போதர், 
* பெருநாவலர், 
* பொய்யில் புலவர் 
* பொய்யாமொழிப் புலவர் 
என்று பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர். 


திருக்குறளும் அரிய தகவல்களும்:- 

* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812 
* திருக்குறளின் முதல் பெயர் – முப்பால். 
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133 
* திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380 
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700 
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250 
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330 
* திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000 
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194 
* திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை. 
* திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை. 
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம் 
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி 
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒப். 
* திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல். 
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில். 
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி. 
* திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங. 
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள். 
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர். 
* திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர். 
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப். 
* திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர். 
* திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. 
* “எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது. 
* “ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. 
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது 
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. 
* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர். 
* திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 


திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது. 


வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது 

திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன் படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். 

தமிழ் உரை எழுதியவர்கள்:- 

• திரு மு.கருணாநிதி 
• திரு மு.வரததாசனார் 
• திரு சாலமன் பாப்பையா 
• திரு பரிமேலழகர் 
• திரு மணக்குடவர் 

ஆங்கில உரை எழுதியவர்கள்:- 

• Rev. Dr. G. U. Pope 
• Rev W. H. Drew 
• Rev. John Lazarus 
• Mr F. W. Ellis 


அறத்துப்பால்:- 

பாயிரவியல்: 

1. கடவுள் வாழ்த்து 
2. வான்சிறப்பு 
3. நீத்தார் பெருமை 
4. அறன் வலியுறுத்தல் 

இல்லறவியல்: 

5. இல்வாழ்க்கை 
6. வாழ்க்கைத் துணைநலம் 
7. புதல்வரைப் பெறுதல் 
8. அன்புடைமை 
9. விருந்தோம்பல் 
10. இனியவைகூறல் 
11. செய்ந்நன்றி அறிதல் 
12. நடுவு நிலைமை 
13. அடக்கமுடைமை 
14. ஒழுக்கமுடைமை 
15. பிறனில் விழையாமை 
16. பொறையுடைமை 
17. அழுக்காறாமை 
18. வெஃகாமை 
19. புறங்கூறாமை 
20. பயனில சொல்லாமை 
21. தீவினையச்சம் 
22. ஒப்புரவறிதல் 
23. ஈகை 
24. புகழ் 

துறவறவியல்:- 

25. அருளுடைமை 
26. புலான்மறுத்தல் 
27. தவம் 
28. கூடாவொழுக்கம் 
29. கள்ளாமை 
30. வாய்மை 
31. வெகுளாமை 
32. இன்னாசெய்யாமை 
33. கொல்லாமை 
34. நிலையாமை 
35. துறவு 
36. மெய்யுணர்தல் 
37. அவாவறுத்தல் 

ஊழியல்:- 

38. ஊழ் 

பொருட்பால்:- 

அரசியல்:- 

39. இறைமாட்சி 
40. கல்வி 
41. கல்லாமை 
42. கேள்வி 
43. அறிவுடைமை 
44. குற்றங்கடிதல் 
45. பெரியாரைத் துணைக்கோடல் 
46. சிற்றினஞ்சேராமை 
47. தெரிந்துசெயல்வகை 
48. வலியறிதல் 
49. காலமறிதல் 
50. இடனறிதல் 
51. தெரிந்துதௌiதல் 
52. தெரிந்துவினையாடல் 
53. சுற்றந்தழால் 
54. பொச்சாவாமை 
55. செங்கோன்மை 
56. கொடுங்கோன்மை 
57. வெருவந்தசெய்யாமை 
58. கண்ணோட்டம் 
59. ஒற்றாடல் 
60. ஊக்கமுடைமை 
61. மடியின்மை 
62. ஆள்வினையுடைமை 
63. இடுக்கண் அழியாமை 

அமைச்சியல்:- 

64. அமைச்சு 
65. சொல்வன்மை 
66. வினைத்தூய்மை 
67. வினைத்திட்பம் 
68. வினைசெயல்வகை 
69. தூது 
70. மன்னரைச் சேர்ந்தொழுதல் 
71. குறிப்பறிதல் 
72. அவையறிதல் 
73. அவையஞ்சாமை 

அங்கவியல்:- 

74. நாடு 
75. அரண் 
76. பொருள்செயல்வகை 
77. படைமாட்சி 
78. படைச்செருக்கு 
79. நட்பு 
80. நட்பாராய்தல் 
81. பழைமை 
82. தீ நட்பு 
83. கூடாநட்பு 
84. பேதைமை 
85. புல்லறிவாண்மை 
86. இகல் 
87. பகைமாட்சி 
88. பகைத்திறந்தெரிதல் 
89. உட்பகை 
90. பெரியாரைப் பிழையாமை 
91. பெண்வழிச்சேறல் 
92. வரைவின்மகளiர் 
93. கள்ளுண்ணாமை 
94. சூது 
95. மருந்து 

ஒழிபியல்:- 

96. குடிமை 
97. மானம் 
98. பெருமை 
99. சான்றாண்மை 
100. பண்புடைமை 
101. நன்றியில்செல்வம் 
102. நாணுடைமை 
103. குடிசெயல்வகை 
104. உழவு 
105. நல்குரவு 
106. இரவு 
107. இரவச்சம் 
108. கயமை 

காமத்துப்பால்:- 

களவியல்:- 

109. தகையணங்குறுத்தல் 
110. குறிப்பறிதல் 
111. புணர்ச்சிமகிழ்தல் 
112. நலம்புனைந்துரைத்தல் 
113. காதற்சிறப்புரைத்தல் 
114. நாணுத்துறவுரைத்தல் 
115. அலரறிவுறுத்தல் 

கற்பியல்:- 

116. பிரிவாற்றாமை 
117. படர்மெலிந்திரங்கல் 
118. கண்விதுப்பழிதல் 
119. பசப்பறுபருவரல் 
120. தனிப்படர்மிகுதி 
121. நினைந்தவர்புலம்பல் 
122. கனவுநிலையுரைத்தல் 
123. பொழுதுகண்டிரங்கல் 
124. உறுப்புநலனழிதல் 
125. நெஞ்சொடுகிளத்தல் 
126. நிறையழிதல் 
127. அவர்வயின்விதும்பல் 
128. குறிப்பறிவுறுத்தல் 
129. புணர்ச்சிவிதும்பல் 
130. நெஞ்சொடுபுலத்தல் 
131. புலவி 
132. புலவி நுணுக்கம் 
133. ஊடலுவகை . 

7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள் கொண்டது திருக்குறள். 



::::எழுத்து இணையம் :::

யார் நல்லாசிரியன்?


யார் நல்லாசிரியன், அவரது குணாதிசயங்கள் எத்தன்மையதாக இருக்கவேண்டும் என்று நன்னூலில் கூறப்பட்டிருக்கிறது. 

‘குலனருள் தெய்வங் கொள்கை மேன்மை 
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை 
நிலமலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் 
உலகிய லறிவோ டுயர்குண மினையவும் 
அமைபவன் நூலுரை யாசிரி யன்னே’ 



பதவுரை: 

குலன் – உயர்குடிப்பிறப்பும் 
அருள் – ஜீவகாருண்யமும் 
தெய்வம் கொள்கை – கடவுள் நம்பிக்கையும், வழிபாடும் 
மேன்மை - பெருந்தகைமையும் 
கலைபயில் தெளிவு – பல நூல்களில் பயின்ற தேர்ச்சியும் 

கட்டு உரை வன்மை – மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி, தொடுத்துச் சொல்லுகின்ற சொல்வன்மையும் (கற்றுத்தரும் வல்லமை) 

நிலம் மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும் – பூமியையும் மலையையும் தராசு கோலையும் பூவையும் ஒத்த உயர்ந்த குணங்களும் 

உலகு இயல் அறிவோடு – உலகத்தில் உள்ள நன்மை தரும் செயல்களை அறிந்திருக்கின்ற அறிவுடனும் 

உயர் குணம் இனையவும் – இவை போன்ற மிக உயர்ந்த குணங்கள் அனைத்தும் சேர்ந்து 

அமைபவனே – பொருந்தியிருக்கப் பெற்றவனே 

நூல் உரை ஆசிரியன் – நூலைக் கற்பிக்கும் நல்லாசிரியனாவான். 

கருத்துரை: 

உயர்குடிப்பிறப்பும், உயிர்களிடத்தில் அன்பும், கடவுள் நம்பிக்கையும், வழிபாடும் அளித்த பெருந்தன்மையான குணமும், பல நூல்களில் பயின்ற தேர்ச்சியும், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி, தொடுத்துச் சொல்லுகின்ற (கற்றுத்தரும் திறனும்) சொல்வன்மையும், பூமியையும் மலையையும் தராசு கோலையும் பூவையும் ஒத்த உயர்ந்த குணங்களும், உலகத்தில் உள்ள நன்மை தரும் செயல்களை அறிந்திருக்கின்ற அறிவும், இவை போன்ற மிக உயர்ந்த குணங்கள் அனைத்தும் சேர்ந்து பொருந்தியிருக்கப் பெற்றவனே நூலைக் கற்பிக்கும் நல்லாசிரியனாவான். 

இன்று ஆசிரியத் தொழில் செய்பவர்க
ள் ‘ஆசிரியத் தொழிலுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றுகிறோமா’ என்று தங்களுக்குத் தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.



::::எழுத்து இணையம் :::

MJR ரின் டான்ஸ் மாஸ்டர் சலீம் தெருவுக்கு வந்த கதை

சுமார் 300 படங்களுக்கு மேல் நடனம் அமைத்த சினிமா டான்ஸ் மாஸ்டர் சலீம் (80) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சில நாட்களுக்கு முன்  காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஒரியா உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், சோபன்பாபு, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், கமல், ரஜினி, விஜயகாந்த் ஹிந்தியில் திலீப்குமார், ஜிதேந்திரா, தர்மேந்திரா, அமிதாப் பச்சன், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆருக்கு மட்டும் 78 படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறார். இளைமை ஊஞ்சலாடுகிறது` படத்தில், `தண்ணி கருத்திருக்கு` என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததுடன், அந்த பாடலுக்கு நடனம் ஆடியும் இருந்தார். சிவாஜிகணேசன் நடித்த `வியட்நாம் வீடு` படத்தில் இடம்பெற்ற `பாலக்காட்டு பக்கத்திலே`` என்ற பாடலுக்கும் சலீம் நடனம் அமைத்திருந்தார். கடைசியாக அவர், `கேப்டன் பிரபாகரன்` படத்தில் இடம்பெற்ற ``ஆட்டமா தேரோட்டமா`` என்ற பாடலுக்கு நடனம் அமைத்தார். சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் அவர் பணிபுரிந்துள்ளர். 20 ஆயிரம் பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். 

..சில ஆண்டுகளுக்கு முன்  குங்குமம் இதழில் வெளியான ஒரு சோகமான நேர் காணலே இதுவாகும் .
                                                       IMG_7830
ஒரு நீளமான வீட்டின் பின்புறம் மாடிப்படியை ஒட்டிய ஒடுங்கிய சந்து. வீட்டின் பழைய பொருட்களைக் கொட்டி வைக்கும் அந்த வீட்டின் ஒதுக்குப்புறம் அதுதான். கந்தலான உடைகளோடு ஒடுங்கிக் கிடக்கும் அவரிடம் ‘‘சலீம் சார் இதுதான் நீங்க குடியிருக்கிற இடமா? என்றால் அவரிடம் பதிலேதும் இல்லை. ஒரு காலத்தில் தமிழ் திரையுலகின் கொடிகட்டிப் பறந்த டான்ஸ் மாஸ்டர் பி.ஏ சலீம் இப்போது தன் செல்ல பூனைக்குட்டி பேபியோடு வாழ்வது இந்த இடத்தில்தான். எம்.ஜீ.ஆர், சிவாஜி, என்.டீ.ஆர், ஜெயலலிதா, தர்மேந்திரா, ஜெயப்பிரதா, ஹேமமாலினி என கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் பி.ஏ. சலீம். இன்று அடுத்த வேளை உணவுக்கு உத்திரவாதமின்றி உறவுகளுமின்றி வாழ்கிறார்.செல்வமும் , செல்வாக்கும் கூடவே புகழ் கொடுக்கிற போதையும் எத்தனையோ மனிதர்களை வழுக்கி விழ வைத்திருக்கிறது. அடுத்த வேளை உணவுக்காய் கையேந்தி நிற்கும் பொழுதுகளில் சடுதியாய் மின்னி மறைகிறது கடந்த கால வசந்த வாழ்க்கை அப்படித்தான் பி.ஏ.சலீமிற்கும்.
                                                               
‘‘ ஜெமினி கணேசன் நடித்து வெளிவந்த பொற்சிலை என்கிற படம்தான் என்னோட முதல் படம். அதிலிருந்துதான் என்னோட சினிமா வாழ்க்கை துவங்குகிறது. என்னோட சொந்த ஊர் கேரளாவில் இருக்கிற கண்ணனூர் பெரிய வசதிகளோ வாய்ப்போ இல்லாத ஷியா பிரிவு முஸ்லீம் நான். நன்றாக டான்ஸ் ஆடுவேன் சினிமாவுக்கு வந்த போது பெரிய ஆளாக வருவேன் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்த்ததில்லை. சினிமாவுக்குப் போகணும் பணம் சம்பாதிக்கணும் ஒரு தடவை என்னோட புனிதக் கடமையான மெக்காவுக்குப் போகணும் என்கிற ஆசை எல்லாம் எனக்கு இருந்தது. ஒரு முஸ்லீம் மெக்காவுக்குச் செல்ல வேண்டுமென்றால் அதற்கு மூன்று விதிகள் இருக்கின்றன ஒன்று மெக்கா செல்வதற்கான வசதி இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமும், மனதைரியமும் இருக்க வேண்டும். இந்த மூன்றில் உடல் ஆரோக்கியமும், மனோதிடமும் என்னிடம் இருந்தது. ஆனால் பணம் இல்லை. மிகக் குறுகிய காலத்தில் எனக்கு செல்வமும் செல்வாக்கும் சினிமாவில் வந்து சேர்ந்தது. என உறவினர்களை எல்லாம் நான் மெக்காவுக்கு புனிதப் பயணம் அனுப்பி வைத்தேன். ஆனால் நான் செல்வதற்கான நேரம் எனக்கு அப்போது வாய்க்கவில்லை. 
ஒரு நாள் கூட நான் சினிமாவில் ஓய்வாக இருந்ததில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரிய்யா, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் எழுபதுகளில் இருந்த டாப் ஹிரோக்களுக்கு நான்தான் டான்ஸ் மாஸ்டராக இருந்தேன். தமிழில் எம்.ஜி,ஆர்,சிவாஜி, ஜெயலலிதா, தெலுங்கில் என்.டீ.ஆர், மலையாளத்தில் பிரேம்நஷீர், மது, ஹிந்தியில் ஜித்தேந்திரா, தர்மேந்திரா, ஹேமமாலினி, ஜெயப்பிரதா என எல்லா பாப்புலர் நடிக, நடிகைகளின் படங்களுக்கும் நான்தான் டான்ஸ் மாஸ்டர்.1974&ல் எஸ்.ஏ. அசோகன் தயாரிப்பில் வெளியான நேற்று இன்று நாளை படத்தைத் தவிற மீதி எம்.ஜீ.ஆரோடு நடித்த எல்லா படங்களுமே ஹிட். சில சமயம் சலீம் இல்லை என்பதற்காக பாடல் எடுப்பதையே தவிர்த்திருக்கிறார் எம்.ஜீ.ஆர். அவரோட படங்களுக்கு விரும்பி என்னை நடனம் அமைக்க அழைப்பார் ஒரு தடவை இதய வீணை படப்பிடிப்புக்காக காஷ்மீர் போனோம். காஷ்மீரில் இருந்து திரும்பியதும் என்னோட வீட்டிற்கு ஒரு புத்தம் புதிய எம்.எஸ். ஆர் கார் வந்து நின்றது. ‘‘எம்.ஜீ,ஆர் உங்களுக்கு பரிசாக இந்தக் காரை அனுப்பியிருக்கிறார்’’ என்று வந்தவர்கள் சொன்னார்கள். கார் மட்டுமல்ல அந்தக் காரை ஓட்ட டிரைவரையும் நியமித்துக் கொடுத்தார். அப்போ அந்தக் காரின் விலை ஒரு இலட்சம் ரூபாய் இருக்கும். அப்போது எனக்கு ஒரு இலட்சம் ரூபாய் என்பது பெரிய பணமே கிடையாது. ஆனாலும் அந்தப் பரிசுதான் என்னோட வாழ்க்கையில் பெரிய பொக்கிஷமாக நான் மதித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் பிசியாக இருந்தேன். ஹிந்தியில் ஒரு படத்திற்கு ஒரு இலடம் ரூபாய் வரை சம்பளமும் தமிழில் ஐம்பதாயிரம் ரூபாய்வரையும் மலையாளம், தெலுங்கில் பத்தாயிரம் ரூபாயும் ஊதியம் கிடைக்கும். அப்போது அதிக ஊதியம் வாங்கிய டான்ஸ் மாஸ்டர் நான்தான்.’’ என்கிற பி.ஏ சலீம் தொடர்ந்து,
‘‘சென்னை உஸ்மான் சாலையில் இருக்கிற சாரி தெரிவில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் சதுர அடி அளவில் பிரமாண்டமான மூன்று மாடி வீட்டைக் கட்டினேன். அதே நேரத்தில் ஹைதராபாத்தில் ஒரு வீடும், கானாத்தூரில் ஒரு பண்ணை வீடும், கோழிக்கோட்டில் என் உறவினர்களுக்கு பிரமாண்டமான வீட்டையும் கட்டிக் கொடுத்தேன். வசதி வந்தது, நண்பர்கள் வந்தார்கள், பெரிய மனிதர்களின் பழக்கங்கள் என கண்ணனூர் சலீம் உயரப்பறந்த காலமது. வாழ்க்கை என்பது பிரமாண்டத்தில் இருக்கிறது என்பதை நான் இன்று நம்பவில்லை. ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். எனக்கு ஒரு பையன், பொண்ணு. மகனின் நான்காவது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாடினேன். எம்.ஜீ.ஆர். ஆந்திர சூப்பர் ஸ்டார் என்.டி.ஆர், ஹேமமாலினி என எல்லா பிரபலங்களையும் அழைத்து வர கோலாகலமான ஒரு திருவிழாவாக அதை நடத்தினேன். செலவுக்காக கானாத்தூரில் இருந்த நிலத்தையும், ஹைதராபாத் வீட்டையும் விற்றேன். அதன் பிறகு கூட நான் திரயுலகில் கொடி கட்டிதான் பறந்தேன். 1977&ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த பதினாறு வயதினிலே படத்தில் கூட நான் மாஸ்டராக வேலை செய்தேன். தொண்ணூறுகளில் வெளிவந்த பாலச்சந்தரின் அழகன் படம்தான் நான் வேலை செய்த கடைசிப் படம். 
எனக்கு அள்ளிக் கொடுத்த சினிமாவுக்கும் நடனத்துக்கும் நான் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். சென்னை திநகர் பர்கிட் சாலையில் இடம் வாங்கி நடனம் கற்றுக் கொள்ளவும், நடன ஊழியர்களுக்காகவும் ஒரு கட்டிடம் கட்டிக் கொடுத்தேன்.அந்த நிலத்தை வாங்கி கட்டி முடிக்க அப்போது இருபத்து நான்கு லட்ச ரூபாய்க்கு மேல் செலவானது. அந்தக் கட்டிடம் கட்ட எம்.ஜி.ஆர் பத்தாயிரம் ரூபாயும். எல்.எம் பிரசாத் ஐந்தாயிரம் ரூபாயும், டான்ஸ் மாஸ்டர் தங்கராஜ் இரண்டாயிரம் ரூபாயும் கொடுத்தாங்க மீதிப்பணத்தை நான் போட்டு அந்தக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தேன் இன்று அந்தக் கட்டிடம்தான் நடன இயக்குநர்களின் யூனியனாக இருக்கிறது. இப்போ என்னோட நிலையைப் பார்த்து விட்டு அவங்க மாதாமாதம் கொஞ்சம் காசு கொடுக்கிறாங்க. ஆனால் அதை வைத்து ஒரு மாதம் முழுக்க என்னால் சாப்பிடக் முடியவில்லை. இப்போ ஸ்டன்ட் மாஸ்டர் முஸ்தபாதான் எனக்கு இந்த இடத்தை ஒதுக்கிக் கொடுத்து இல்லாதபோது உணவும் கொடுக்கிறார்’’ என்று சொல்லும் சலீமிற்கு சினிமா ஆசை மட்டும் இன்னும் போகவில்லை. அது எவளவு பெரிய கனவாக இருக்கிறது என்றால் ‘‘ நான் ஒரு சினிமா எடுக்கப் போகிறேன் சார். அதில் தர்மேந்திராதான் வில்லன். ரஜினிதான் ஹீரோ நல்லாயிருக்கும்ல சார்? ’’ என்று ரஜினியின் உயரம் தெரியாமல் அப்பாவியாகப் பேசுகிறார்.
கிட்டத்தட்ட 170 விருதுகள் வாங்கிய பி.ஏ. சலீமிடம் இப்போது எஞ்சியிருப்பது புகழின் உச்சியில் இருந்த போது பத்திரிகைகளில் வெளிவந்த மஞ்சள் கரை படிந்த சில பேப்பர் கட்டிங்குகள் மட்டுமே. ‘‘எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. விதி வந்து விளையாடிய விபரீத விளையாட்டுக்கு பலியாகியவன் நான்.என் மனைவி, மக்களைப் பார்த்துக் கிட்டத் தட்ட 14 வருஷமாச்சு. என்னோட பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள், என் மகன் வெளிநாட்டிற்குப் போய் விட்டதாகவும் தகவல். எனக்கு எதுவுமே தெரியவில்லை. வாழ்க்கையில் இன்னும் எனக்கு சில நம்பிக்கைகள் இருக்கிறது. நான் வாழ்வில் செய்ய நினைத்து செய்யாமல் விட்டது ஒன்றுதான் அது புனித மெக்கா பயணம். விரைவில் எனது வழக்கு முடிவுக்கு வரும் வெற்றி கிடைக்கும். நான் எனது புனிதக் கடமையான மெக்காவிற்குச் செல்வேன்’’ என்று பெருமூச்சு விட்டபடி தலைகுனிந்து அமர்ந்திருக்கும் சலீம் தனது செல்லப் பூனையின் தலையை வருடிக் கொடுக்கிறார்.
நன்றி – குங்குமம்.

அழகு என்பது புறத்தில் உள்ளதா? அகத்தில் உள்ளதா?


         

அழகு என்பது என்ன? கண்ணுக்கு தெரிகின்ற பொருள்களில் அழகு இருக்கிறதா?கண்ணுக்கு தெரியாதவைகளில் அழகு இருக்கிறதா?இது நீண்ட நாட்களாக கேட்கப் பட்டுவரும் ஒரு கேள்வி ஆனால் பதில் மட்டும் இதுவரை இதுதான் அழகு என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியவில்லை.
         

அவன் ஒரு இளைஞன் திருமண வயதை தொட்டவுடன் வாழ்க்கை துணைவியை தேடிகொள்ள பெண் பார்க்க ஆரம்பித்தான். வாரத் தில் இரண்டு நாட்களாவது பெண் பார்க் கும் படலம் நடந்தது. இப்படி ஒரு வாரம் அல்ல இருவாரம் அல்ல மூன்று வருடங்கள் பெண்களை பார் த்து கொண்டே இருந்தான். அவன் பெண் பார்க்கும் படலத்திற்கு கொ டுத்த பயண செலவு இரண்டு கல்யாணமே பண்ணலாம். அவ்வளவு செலவு செய்தும் பெண் அமை யவில்லை இது என்ன அதிசய ம் பார்த்த பெண்ணெல்லாம் இவனை வேண்டாமென்று மறுத்து விட்டார்களா? இல் லை இவன் தான் அவர்களை மறுத்தான். காரணம் இவன் எதிர்பார்ப்பதுபோல் அவர்கள் அழகாக இல்லையாம். 

                              
ஒருத் திக்கு கண் சரியில்லையாம். இன்னொருத்திக்கு கழுத்து அழகாக இல்லை யாம். ஒருத்தி நிறமாக இல்லையாம் வேறொருத்தி அதிக நிறமாக இருக்கிறாளாம். இதனால் அவள் இவனை மதிக்க மாட் டாளாம். நடக்கும்போது ஆண்பிள்ளைபோல நடககிறாளாம். ஒருத் தி பேசும்போது அதிர்ந்து பேசுகிறாளாம் வேறொருத்தி. இப்படி அவன் கண்டு பிடித் த குறைகள் எண்ணிக்கையில் அடங்கா து. ஏராளம் ஏராளம் எது தான் அழகு? ஒரு பட்டியல் போடு என்றால் பத்து நடிகைக ளின் அங்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு உருவத்தை வரைந்து தருகிறான். அப் படி ஒரு பெண்ணை கண்முன்னால் நிறுத் தினாலும் அவளிடத்திலும் குற்றம் காண் கிறான். அவள் கட்டிய புடவை நன்றாக இல்லையாம். இவனால் அழகி இல்லை அவலட்சனமா னவள் என்று புறக்கணிக் கப்பட்ட பெண்க ள் அனைவருமே திருமணம் ஆகாமலா வீட்டில் இருந்துவிட்டார்கள்? அவர்களை பிடித்த நல்ல மாப்பிள்ளை கள் கட்டிக்கொண்டு போய் சந்தோசமாக குடும்பம் நடத்துகிறார் கள். இவனு க்கு அழகற்றவர்களாக தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு அழகாக எப்படி தெரிந்தனர்? ஒருவேளை இவன் முன்னால் அவலட் சன வேஷம் போட்டா ர்களா? இல்லை என்றால் இவ னது கண் மட்டும் விஷேச தயா ரிப்பா அல்லது அவர்களை பார் த்த மற்ற மாப்பிள்ளை களுக்கு கண்களில் குறைபாடா? இதில் எதுவுமே இல்லை. இவன் கரு த்தில்தான் குறைபாடு இருக் கிறது. இப்படி சொல்வது கூட தவறு இவன் அழகு என்று கருதுவது வேறு விதமாக இருக்கிறது இவ ன்கற்பனைக்கு ஏற்றவா று எந்த உருவத்தையும் காணவில்லை அதனால்தான் எதிர்பார்த்தது கிடை க்கவில்லை என்பதனால் எல்லா வற்றையும் அழ குகள் அல்ல என்று புறக்கணிக்கிறான்.

               
 ஆகவே ஒன் றை அழகாக காண்பதும் அழகு அற் றதாக காண்பதும் கண்களில் இல் லை மனதில் இருக்கிறது. என்பது நன்றாக தெரிகிறது என்றாலும் உல கில் உள்ள எல்லா மனதும் ஏற்று கொள்ளும் அழகு என்று எதாவது தனியாக இருக்கிறதா? இந்த கேள்விக்கு பதி ல் கிடைத்து விட்டால் அழகு என்பது புறத்தில் உள்ளதா? அகத்தில் உள்ளதா? என்ற நமது ஆரம்ப கேள்விக்கு சரியான பதி ல் கிடைத்து விடும்.  நீ தொடர் ச்சியாக நல்ல எண்ணங்களால் நல்ல செயல்களால் நல்ல வார் த்தைகளால் நிரப்ப பட்டவனாக இருந்தால் உனது தோற்றம் கவர் ச்சி மிக்கதாக மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுவதாக அமைந்து விடும் . இது உண்மைதான் இன்றைய ஆணழகர்கள் அனைவருமே காந்தி என்ற கிழவனின் அழகு முன்னால் தூசிபோல பறந்துவிடு வார்கள் காரணம் காந்தி என்ற மகாபுருஷனின் அழகுபுறத்தோற்ற த்தை வைத்து தீர்மானிக்கபட வில்லை அவ ரின் அகதோற்றமே அவர் அழகுக்கு இலக் கணமாக இருக்கிறது. இதை வேறொரு விதத்திலும் சொல்லலாம். . அன்பு அருள் கருணை இன்பம் புத்து ணர்ச்சி முயற்சி உற்சாகம்  இந்த பண்புகள் நிறைந்த மனிதன் இன்பம் என்பதை பஞ்சமில்லா மல் பெற்றவனாக இருப்பான் அவன் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் திருவடியாக இருக்கும், தோல்வியும் துன்பமும் துயரமும் அவ னை அணுகவே அணுகா து.  பொறாமை பேரா சை கோபம் காமம் போன்ற வைகள் இந்த உணர்வுகள் எங்கே மண்டி கிடக்கிறதோ அங்கே அவலட்சணம் இருக்கும். இந்த உணர்வுகள் நிரம்பி வழியும் மனிதர்கள் மன்மதனை போல காட்சி தரலாம் ஆனா லும் அவனை நோக்கி யாரும் ஈர்க்கப்ப டமாட்டார்கள் என்னை பார் என் அழகை பார் என்று அவன் நம் முன் னும் பின்னும் நடந்து காட்டினாலும்கூட அவனை நம் மால் ஏறடுத்து பார்க்க இயலாது. 


வெளித்தோற்றம்தான் அழகு என்று சொல்வோரும் அகத்தின் அழகே சிறப்பு என்று சொல்வோரும் நல்ல பண்புடைய மனிதன் மட்டுமே அழகானவன் என்று சொன்னால் எதிர்க்க மாட்டார்கள் என் கண்களுக்கு கீழே கருவளையம் விழுகிறதே சர்மம் எல்லாம் வறண்டு போகிறதே முகத்தில் எண்ண முடியாத பருக்கள் அணிவகுக்கிறதே நான் எப்படி அழகாக இருக்க முடியும். என்று யோசித்து தன்னை தானே முடக்கி கொள்ளும் பலகீனமான மனிதர்கள் தங்களை அழகுபடுத்தி கொள்ள அலங்கார பொருள்களை தேடவேண்டாம். அதற்கு அவசியமும் இல்லை நல்ல பண்புகளை வளரவிடுங்கள் நல்ல பண்புகள் உங்களை அழகர்களாக ஆக்கி விடும். ஒரு நல்லவார்த்தை நல்ல சிந்தனையை உருவாக்கும் ஒரு நல்ல சிந்தனை ஒரு நல்ல செயலை உருவாக்கும் ஒரு நல்ல செயல் நல்ல பண்பாட்டை உருவாக்கும் ஒரு நல்ல பண்பாடு உலகம் முழுவதையும் அழகு பொருந்தியதாக ஆக்கிவிடும். எனவே சுத்திகரிக்கபட வேண்டியது உருவமல்ல உடலும் அல்ல மனதும் மனதால் இயங்கும் நமது செயலுமே ஆகும் இதுதான் அழகாக மாறுவதற்கு உள்ள ஒரே ரகசியம்.