Wednesday, September 12, 2012

சீனாவில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படும் மாணவர்கள்


Foxconn Factory
சீனாவில் உள்ள ஜூயாங்சு ப்ராவின்ஸில் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சியைப் பெறுவதற்காக பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு அனுப்பப்படுவதாக ஷாங்காய் டெய்லி ரிப்போர்ட்ஸ் தெரிவித்திருக்கிறது.
வரும் செப்டம்பரில் ஆப்பிள் தனது ஐபோனைக் களமிறக்க இருக்கிறது. இந்த ஐபோனை பாக்ஸ்கான் உதவியோடு ஆப்பிள் உருவாக்குகிறது. இந்த நிலையில் பாக்ஸ்கானுக்கு 10,000 அளவிற்கு வேலையாள்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இதைச் சரிக்கட்ட ஜூயாங்கு பகுதியில் இருக்கும் மாணவர்களை அரசே வலுக்கட்டாயமாக பாக்ஸ்கானில் வேலை செய்யப் பணிப்பதாக அந்த தகவல் கூறுகிறது.
இதற்காக மாணவர்களுடனும் மற்றும் அவர்களின் கல்வி நிறுவனங்களிடமும் எந்தவித ஒப்பந்தமும் செய்யவில்லை. அதோடு அவர்களில் பெற்றோர்களிடமும் தகவல் தெரிக்கவில்லை. மேலும் இந்த மாணவர்கள் பாக்ஸ்கானில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாணவர்கள் பாக்ஸ்கானில் வாரத்திற்கு 6 நாள்கள் வேலை செய்ய வேண்டும். மேலும் தினமும் 12 மணி நேரம் அவர்கள் வேலை செய்ய வேண்டும். அதற்காக அவர்களுக்கு மாதம் 1,550 யுவன் அதாவது 244 அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகின்றன. ஆனால் மாணவர்கள் தங்கள் உணவு மற்றும் தங்கும் இடம் ஆகியவற்றை தங்கள் செலவில் கவனித்துக் கொள்ள வேண்டும்.
பாக்ஸ்கானுக்கு இதுவெல்லாம் புதியது ஒன்றும் அல்ல. ஏற்கனவே அந்நிறுவனத்தின் வேலைச் சூழல் தரமாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்திருக்கிறது. இந்த நிலையில் வரும் 2014க்குள் 1 மில்லியன் ரோபோக்களை பாக்ஸ்கான் வாங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மனிதர்களுக்குப் பதிலாக இந்த ரோபோக்கள் வேலை செய்யும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

How to Clean a Touch Screen: Easy Tips to Follow


How to Clean a Touch Screen: Easy Tips to Follow

எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனமாக இருப்பினும் தொடுதிரை வசதி கொண்டதா? என்ற கேள்வி முதலில் எழும்புகிறது. தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களையும், மொபைல்களையும் வாங்குவதை விட அதை சரியாக பராமரிப்பது தான் பெரிய விஷயமாக இருக்கிறது.
எத்தனை தான் துல்லியமான தொடுதிரை தொழில் நுட்ப வசதிகள் இருப்பினும், தூசி படிந்து இருக்கும் தொடுதிரையில் எதையுமே தெளிவாக பார்க்க முடியாது. இதனால் மொபைல் திரையை சுத்தம் செய்து வைத்து கொள்வது மிக அவசியம்.
வீட்டிலேயே எப்படி எளிதாக தொடுதிரையை சுத்தம் செய்வது என்று பார்க்கலாம். முதலில் ஒரு மிருதுவான மைக்ரோஃபைபர் துணியை எடுத்து கொள்ள வேண்டும். மைக்ரோஃபைர் அல்லது சிறிய பஞ்சில் கூட எளிதாக மொபைல் திரைகளை சுத்தம் செய்யலாம். சுத்தம் செய்ய துவங்குவதற்கும் முன்பு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வது மிக அவசியம் மற்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
மைக்ரோஃபைபர் துணியை வரண்டிருக்கும் நிலையில் பயன்படுத்த வேண்டும். இந்த துணியின் மூலம் தொடுதிரையின் ஓரப்பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். இந்த மிருதுவான துணியால் சுத்தம் செய்யும் போது, வட்டமான வடிவத்தில் கட்டைவிரல் கொண்டு மெதுவாக முதலில் தேய்க்க வேண்டம். இப்படி சுத்தம் செய்வதால் மொபைல் திரைகளில் கீறள்கள் ஏற்படாது.
அதன் பிறகு இந்த சிறிய துணியின் ஒருமுனையில் ஈரம் செய்ய வேண்டும். தொடுதிரையை சுத்தம் செய்வதற்காகவே பிரத்தியேகமான திரவங்கள் மொபைல் ஸ்டோர்களில் கிடைக்கும் அந்த திரவத்தினை பயன்படுத்துவது இன்னும் சிறந்தது. அப்படி கிடைக்கும் லிக்குவிடை, மைக்ரோஃபைபர் துணியில் ஒரு சொட்டு நனைத்து தொடுதிரையினை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும்.
இப்படி சுத்தம் செய்த துணியை, அடுத்த முறை சுத்தம் செய்யும் போது அதில் உள்ள அழுக்குகளை அப்புறப்படுத்திவிட்டு பயன்படு்த்துவது அவசியம். இல்லாவிட்டால் இதில் உள்ள அழுக்குகள் மீண்டும் மொபைல் தொடுதிரைகளில் தங்கிவிடும்.
எளிதான முறையில் நாமே சுத்தம் செய்ய இங்கு கூறப்பட்டுள்ள டிப்ஸ் சிறப்பானதாக இருக்கும். இந்த டிப்ஸ்கள் தொடுதிரைகளை சுத்தம் செய்ய மட்டும் அல்லாமல், சாதாரண மொபைல் திரைகளையும் சுத்தம் செய்ய உதவும்.

how to use compressed zipped folders

               compressed zipped folders 

                           உருவாக்க வேண்டுமா?





How to  use compressed (zipped) folders
கம்ப்ரஸ்டு ஃபோல்டர் எப்படி உருவாக்குவது என்பது பற்றி பார்க்கலாம். எந்த ஒரு தகவல்களையும், புகைப்படங்களையும் ஃபோல்டரில் போட்டு பாதுகாத்து வைத்து கொள்வது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அப்படி போல்டரில் இருக்கும் தகவல்களை, மெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்றால் இந்த கம்ப்ரஸ்டு (ஸிப்) ஃபோஸ்டர் தேவைப்படும்.
இது போல் ஃபோல்டரில் உள்ள தகவல்களை முதலில் ஸிப் ஃபோல்டருக்கு மாற்றி, அதன் பிறகு மெயில் மூலம் மற்றவர்களுக்கு அனுப்புவது மிக சிறந்தது. இப்படி கம்ப்ரஸ் ஃபோல்டர் மூலம் அனுப்பவதால், அதற்குள் இருக்கும் தகவல்களையும் மற்றும் புகைப்படங்களையும் சிந்தாமல், சிதறாமல் மற்றவர்களுடன் மெயில் மூலம் பரிமாறி கொள்ள முடியும்.
உதாரணத்திற்கு ஒரு ஃபோல்டரில் பத்து புகைப்படங்கள் இருக்கின்றன. இதை அப்படியே மெயில் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பினால், அதை டெஸ்க்டாப்பில் சேவ் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். காரணம்
ஒவ்வொரு புகைப்படமாக டவுன்லோட் செய்ய வேண்டும். ஏனெனில் இதில் உள்ள புகைப்படங்கள் தனித்தனியே சிதறியிருக்கும். இதுவே ஃபோல்டரில் உள்ள 10 புகைப்படங்களையும் முதலில் கம்ப்ரஸ் ஃபோல்டருக்கு மாற்றிய பின்பு, மற்றவர்களது மெயிலுக்கு அனுப்பினால், அதை டவுன்லோட் செய்வது எளிது.
காரணம், அந்த கம்ப்ரஸ் ஃபோல்டரை சில மணித் துளிகளில் நமது டெஸ்க்டாப்பில் சேவ் செய்யலாம். இதனால் 10 புகைப்படங்களும் சிந்தாமல், சிதறாமல் அந்த கம்ப்ரஸ்டு ஃபோல்டரின் உள்ளேயே இருக்கும்.
இதை செய்வது மிகவும் எளிது. ஒரு ஃபோல்டரின் மேல் மவுஸ் வைத்து ரைட் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின் சென்ட் டூ என்பதை க்ளிக் செய்து, பின்னர் கம்ப்ரஸ்டு (ஸிப்) ஃபோல்டரை உருவாக்க வேண்டும். இப்படி செய்வதனால் ஃபோல்டரில் இருந்த அனைத்து விஷயங்களும், ஸிப் ஃபோல்டரில் மாற்றப்பட்டுவிடும்.
அதன் பிறகு கம்ப்ரஸ்டு ஃபோல்டரில் வைத்து ரைட் க்ளிக் செய்ய வேண்டும். எக்ஸ்ட்ராக்ட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, இந்த கம்ப்ரஸ்டு (ஸிப்டு) ஃபோல்டரை எளிதாக திறக்க முடியும். இது தான் கம்ப்ரஸ்டு ஃபோல்டரை உருவாக்கும் முறை.

செல்போன் பயன்படுத்த பெண்களுக்கு தடை!


Rajasthan Panchayat Bans Cellphones for Girls Under 18
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர்வதி என்ற பகுதியில் 18 வயதுக்கும் கீழ் உள்ள பெண் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த கிராம் பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.
தகவல்களை எளிதாக பரிமாறி கொள்ள பயன்படும் செல்போன்கள் பல வகையில் ஆபத்தினை விளைவிப்பதாக உள்ளதால், ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் உதய்பூர் என்ற பகுதியில் 18 வயதுக்கும் கீழ் உள்ள பெண்கள் செல்போன் பயன்படுத்த கூடாது என்று கிராம பஜ்சாயத்து முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பல கிராம பகுதிகளில் பெண் குழந்தைகள், செல்போன் போன்ற எலக்ட்ரானிக் தொழில் நுட்ப சாதனங்கள் பயன்படுத்துவதால், தகாத மனிதர்களுடன் சகவாசம் கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் பெண் குழந்தைகளின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும்.
இதை கருத்தில் கொண்டு, பதினெட்டு வயதுக்கும் கீழ் இருக்கும் பெண் குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த கிஷோர்புரா என்ற கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.

மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் புதிய ரோபோ


Now a Robot Can Understand Emotions
பின்லாந்து நாட்டில் உள்ள யுனிவெர்சிட்டி ஆப் அவ்லு என்ற பல்கலைக்கழகம் ஒரு புதிய ரோபோவை உருவாக்கியிருக்கிறது. இந்த ரோபோவின் மிக முக்கிய விஷேசம் என்னவென்றால் இது மனிதர்களின் உணர்வுகள், பேச்சுக்கள் மற்றும் உடல் செய்கைகளை மிக எளிதாக புரிந்து கொள்ளும்.
இந்த ரோபோவை நர்சிங் ஹோம், பாதுகாப்பு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்ற துறைகளில் பயன்படுத்தலாம் என்று அவ்லு யுனிவெர்சிட்டி கூறியிருக்கிறது. மேட்டி பியடிகைனின் மற்றும் ஜவா ரோனிங் ஆகியோரின் தலைமையில் அமைந்த குழு இந்த ரோபோவில் உள்ள ஸ்பீச் அனிமேஷன் மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றில் மெசின் விஷன்
என்ற ஒரு புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இருக்கிறது.
இந்த புதிய மெசின் விஷன் தொழில் நுட்பத்தை உருவாக்க இந்த குழு சாதாரண வீடியோ கேமரா மற்றும் கினக்ட் டெப்த் கேமராவைப் பயன்படுத்தி இருக்கிறது. இந்த ரோபோவில் உள்ள மைக்ரோபோன்கள் திசைகள் மற்றும் பேசும் ஒலி அளவையும் அறிந்து கொள்ளும்.
இதில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பு சென்சார்கள் வழியாக சாதாரண தகவல்கள், நேரம் பற்றிய தகவல்கள் மற்றும் உணர்வுகளின் நிலை ஆகியவற்றை பெற்றுக் கொள்ளும். இவற்றை மெசின் விஷன் மொழி மாற்றம் செய்யும்.
அதற்கேற்ப ரோபோ  மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும். இந்த ரோபோ வெற்றி பெற்றால் மிக விரைவில் ரோபோக்களும் மனித வாழ்வில் மிக முக்கியமான அங்கமாகிவிடும்
என்று நம்பலாம்.

மொபைலெறிதல் போட்டியில் நோக்கியா மொபைல்!


At Mobile throwing contest finnish teen wins
கல்லெறிதல் போட்டி போல, மொபைலெறிதல் போட்டி பின்லாந்தில் சேவோன்லின்னா என்ற இடத்தில் கடந்த 18ம் தேதி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பல நாட்டவரும் கலந்து கொண்டனர்.
இதில் 333 அடி உயரத்தில் மொபைலை வேகமாக வீசி பின்லாந்தை சேர்ந்த கர்ஜலெயின் என்பவர் வெற்றி பெற்றார். இந்த மொபைலெறிதல் விளையாட்டை விட இன்னும் ஒரு ஆர்வத்தை தூண்டும் தகவலும் வெளியாகி உள்ளது.
அப்படி கார்ஜலெயின் தூக்கி எறிந்தது என்ன மொபைலாக இருக்கும்? என்ற கேள்வியும் எழும்பும். கர்ஜலெய்ன் விளையாட்டில் பயன்படபத்தியது நோக்கியாவின் பழையதொடு மாடல் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி மாற்றம்: மைக்ரோசாஃப்ட்


Microsoft Unveils a New Logo for First Time in 25 Years
கம்ப்யூட்டர் யுகத்தில் பெரிய சாம்ராஜ்ஜியம் நிகழ்த்தி வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், 25 ஆண்டுகளுக்கு பிறகு  தனது லோகோவை முதல் முறையாக மாற்றி வடிவமைத்துள்ளது.
சமீபத்தில் தனது புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை அறிமுகம் செய்திருக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், லோகோவின் வடிவமைப்பையும் மாற்றியிருக்கிறது.
25 ஆண்டுக்கு பிறகு நிறுவனத்தின் லோகோ வடிவமைப்பினை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மாற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பித்து கொஞ்ச காலங்களிலேயே, எதையும் வித்தியாசப்படுத்தி காட்டுவதற்கு வேண்டி நிறைய மாற்றங்களை பல நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இதுவரை சிறந்த தொழில் நுட்பங்களை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தது.
25 ஆண்டுகளுக்கு பிறகு லோகோவினை மாற்றி வடிவமைத்தது மட்டுமல்லாமல், மாற்றத்தினை மேற்கொள்ள இது சரியான நேரம் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஜெஃப் ஹேன்சன் கூறியிருக்கிறார்.
ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்ற இயங்குதளத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் உலகம் இப்போது விண்டோஸ்-8 இயங்குதளத்திற்காக வெகுவாக காத்திருக்கிறது.
விண்டோஸ்-8 இயங்குதளத்தின் முக்கியத்துவமே, இந்த புதிய இயங்குதளம் கம்ப்யூட்டர்களுக்கு மட்டும் அல்லாமல் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் போன்ற அனைத்திலும் பயன்படுத்த முடியும் என்பது தான்.
புதிய எலக்ட்ரானிக் சாதனம் என்று பெயரில் மட்டும் புதுமை இருந்தால் போதாது, உள்ளிருக்கும் தொழில் நுட்பத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும். அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நிறைய மாற்றங்களை தொழில் நுட்ப உலகில் செய்து வருகிறது. இதற்கிடையில் லோகோவையும் மாற்றி வடிவமைத்துள்ளது விண்டோஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

பூங்காக்களைப் பராமரிக்கும் ரோபோ எந்திரம்


Honda Miimo Robot Lawnmower
ஹோண்டா மோட்டார் கோ நிறுவனம் ரோபோட்டிக் தொழில் நுட்பத்தில் அமைந்த ஒரு புதிய இயந்திரத்தை விற்பனைக்காக சந்தையில் களமிறக்க இருக்கிறது. இந்த ரோபோ இயந்திரத்திற்கு மிமோ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
இந்த ரோபோ எந்திரம் பார்ப்பதற்கு ஐரோபோட் கார்ப்பின் ரூம்பா வாக்கும் க்ளீனரைப் போலத் தோன்றுகிறது. இந்த ரோபோ தொடர்ந்து பூங்காக்களிலுள்ள புற்களை அழகாக வெட்டி அழகுபடுத்தும் சக்தி கொண்டது.
இந்த ரோபோ எந்திரம் முதலில் ஐரோப்பாவில் களமிறக்கப்பட இருக்கிறது. இதன் விலை 2,100 ஈரோ முதல் 2,500 ஈரோ வரை இருக்கும் என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது.
அடுத்த வருடம் விற்பனைக்கு வர இருக்கிறது இந்த ரோபோ எந்திரம். வருடத்திற்கு 4000 ரோபோ எந்திரங்களை விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது.
ஹோண்டாவின் முந்தைய பேசும் மற்றும் நடக்கும் ரோபோட்டுகளான ஆசிமோவை ஒரு சாதாரண விளையாட்டுப் பொம்மை என்று பலர் விமர்சித்தனர். அவர்களின் கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்திருக்கும் இந்த புதிய ரோபோ உண்மையாகவே ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படும் என்று நம்பலாம்.

இன்டெலின் அடுத்த படைப்பு ‘ஹாஸ்வெல்’!


Intel Haswell Dig
பல அல்ட்ராபுக்குகள் தற்போது விண்டோஸ் 7 இயங்கு தளத்துடன் வருகின்றன. அவை விண்டோஸ் 8 ஓஎஸ் களமிறங்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. அடுத்ததாக இப்போது இன்டலின் அடுத்த சிப்பான ஹாஸ்வெல் தற்போது தலைப்பு செய்திகளில் அடிபடுகிறது.
அதாவது இன்டலின் அடுத்த சிப்பான ஹாஸ்வெல் விரைவில் அல்ட்ராபுக்குகளில் வரவிருக்கிறது. ஆனால் இந்த புதிய சிப்பைப் பற்றி இன்டல் பெரிதாக பேசவில்லை. இந்த ஹாஸ்வெல் சிப், முதல் மெயின்ஸ்ட்ரீம் பிசி க்ளாஸ் சிப்பாக இருக்கும் என்று தெரிகிறது. அதோடு இதில் க்ராபிக்ஸ் வசதிகளும் மிக சூப்பராக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த ஹாஸ்வெல் சிப் வரும் வரையிலும் ஏசர் மற்றும் லெனோவா போன்ற நிறுவனங்கள் தங்களது அல்ட்ராபுக்குகளில் விண்டோஸ் 8 இயங்கு தளம் மற்றும் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களைப் பயன்படுத்தும். வரும் 2013ல் இந்த புதிய சிப் களம் இறங்க இருக்கிறது. அதற்கு பின் இந்த புதிய சிப் தனது வெற்றிப் பயணத்தைத் தொடங்கும் என்று தெரிகிறது.

the next chapter in the ultrabook saga haswell

இதய கோளாறு பற்றி அறிய உதவும் சிலிக்கான் ஜெல்லி ஃபிஷ்!


Medusoid Jellyfish Made by Silicone and Rat's Heart Cells
சிலிக்கான் பாலிமர் மற்றம் எலியின் இதய திசுக்கள், இந்த இரண்டையும் வைத்து புதிய ஜெல்லி ஃபிஷ் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் இந்த ஜெல்லி ஃபிஷ் ரோபோட் மீன், மனித இதயத்தில் ஏற்படும் கோளாறுகள் பற்றிய ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவதற்காகவே பிரத்தியேகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலிக்கான் மற்றும் எலியின் தசை மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஜெல்லி மீனுக்கு மெடுசாய்டு என்று பெயரிடப்பட்டுள்ளனர். மனிதனின் இதயம் போலவே இந்த ஜெல்லி மீன் பம்ப் செய்யப்படும் வசதிகளுடன்
உருவாக்கப்ப்டடுள்ளது.
இதன் மூலம் மனித இதயத்தில் ஏற்படும் கோளாறு சம்மந்தமான ஆராய்ச்சிக்கு பயன்படுவது மட்டும் அன்றி, இதய உடலியல் பற்றிய நுனுக்கங்களையும் தெளிவாக தெரிந்து கொள்ளவும் பயன்படும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பையோஎன்ஜினீயர் கெவின் கிட் பார்க்கர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இதய கோளாறுகளை கண்டுபிடிக்க பயன்படும் இந்த ஜெல்லி ஃபிஷிற்கு அசைவுகளை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாக உள்ளது. இதற்காக இதில் சிலிக்கான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல்லி ஃபிஷ் மின்சாரம் நிறைந்த ஒரு தொட்டியில் நீந்தவும் செய்கிறது. இந்த அசைவுகள் சிலிக்கான் மூலம் வழங்கப்படுகிறது.
பொதுவாக நுன்னிய சிலிக்கான்கள் அதிகமான மின்சாரத்தினையும் ஈர்க்கும் வலிமை கொண்டது. அப்படி அதிகப்படியாக ஈர்க்கும் மின்சாரத்தினை தேவையான அளவு அந்த சாதனத்திற்கு கொடுக்கும் சக்தியும் இந்த சிலிக்கானுக்கு உள்ளது.
இப்படி தொழில் நுட்ப ரீதியான சில விஷயங்களையும் இந்த ஜெல்லி ஃபிஷ் கொண்டிருக்கிறது. செயற்கை இதயத்தினை வடிவமைக்கவும் மற்றும் கார்டியோவேஸ்குலர் சம்மந்தமான மருந்து உருவாக்கத்திற்கும் இந்த மெடுசாய்டு ஜெல்லி மீனை பயன்படுத்தலாம் என்றும் கெவின் கிட் பார்க்கர் கூறியுள்ளார்.
சில காலங்களுக்கு முன்பு மனிதனின் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அது தீர்க்க முடியாத ஒரு வியாதியாக இருந்தது. ஆனால் இன்று இதய மாற்று ஆறுவை சிகிச்சை மட்டும் அல்லாது, இதயம சம்மந்தமாக எந்த கோளாறுகள் வந்தாலும் அதை தீர்க்கும் மருந்து தொழில் நுட்பத்தின் மூலமாகவும் கண்டு பிடிக்கப்பட்டு வருகிறது.
இப்படி கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று தான் இந்த மெடுசாய்டு ஜெல்லி ஃபிஷ்.  தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மனிதர்களின் உடலில் ஏற்படும் நோயினை தீர்க்கவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தரவரிசையில் கூகுளை பின்னுக்கு தள்ளிய ஃபேஸ்புக்!


Facebook Beats Google in Alexa's Rank Report சர்வதேச அளவில் வலைத்தளங்களின் தரவரிசைப்பட்டியலை வழங்கி வரும் அலெக்ஸா நிறுவனத்தின் பட்டியலில், கூகுளை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்திருக்கிறது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்.
கம்ப்யூட்டர் யுகத்தின் ஜாம்பவானான கூகுள் நிறுவனம் தான் தரவரிசை பட்டிலில் முதல் இடத்தில் இருந்து வந்தது. முதன் முறை கூகுளை பின்னுக்கு தள்ளிவிட்டு, தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் கொடி நாட்டி இருக்கிறது ஃபேஸ்புக்.
இது திகைக்க வைக்கும் சாதனை என்று தான் சொல்ல வேண்டும். எந்த ஒரு தகவலை தேட வேண்டும் என்றாலும், கூகுளை திறக்காமல் சாத்தியம் இல்லை என்று ஒரு நிலை இருப்பதனால் கூகுள் தரவரிசை பட்டியலில் முதலில் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.
ஆனால் சில காலங்களாக அனைவரின் மனதையும் இரவு பகலாக ஆக்கிரமித்து வரும் ஃபேஸ்புக் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கூகுளை இரண்டாம் இடத்தில் தூக்கி வைத்துவிட்டு, முதலிடத்தை பிடித்திருக்கும் ஃபேஸ்புக் அனைவரின் கண்களையும் சில நிமிடங்கள் அகலமாக விரிய வைக்கிறது.
லட்சோப லட்சம் மக்களால் தினம் தினம் ஆயிரக்கணக்கான் வலைத்தங்கள் இன்டர்நெட்டில் தேடப்பட்டு வருகிறது. இவற்றில் எந்த வலைத்தளம் அதிகமான பேரால் தேடப்படுகிறது என்பது பற்றிய தரவரிசை பட்டியலை பிரித்து காட்டும் நிறுவனம் அலெக்ஸா.
இந்த அலெக்ஸா டூல்பாரை ஒருமுறை உங்களது சிஸ்டத்தில் பயன்படுத்திவிட்டால் போதும், அதன் பிறகு எந்த வலைத்தளத்தை திறந்தாலும், அதன் தரவரிசை பட்டியல் தெளிவாக காட்டப்படும்.
இதில் முதல் 10 இடத்தில் இருக்கும் வலைத்தளங்களின் பட்டியலையும் பார்க்கலாம். முதலிடத்தில் ஃபேஸ்புக், இரண்டாவது இடத்தில் கூகுள், மூன்றாவது இடத்தில் யூடியூப், நான்காவது யாஹூ மற்றும் ஐந்தாவது இடத்தில் பெய்டூ.காம்
இதை தொடர்ந்து ஆறாவது இடத்தில் விக்கிப்பீடியா, ஏழாமிடத்தில் விண்டோஸ் லைவ் இருக்கிறது. சமூக வலைத்தளமான ட்விட்டர் எட்டாமிடத்தில் உள்ளது. கியூகியூ.காம் ஒன்பதாம் இடத்திலும் மற்றும் அமேசான்.காம் பத்தாமிடத்திலும் உள்ளன. 
Related Posts Plugin for WordPress, Blogger...

உங்கள் கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்வது எப்படி ?

தமிழில் நீங்கள் இனையதளங்களில் டைப் செய்யவேண்டும் என்றால் முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஈகலப்பை என்ற மென்பொருளின் சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.



ஈகலப்பையை டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்:

சுட்டி


இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்கள் கம்ப்யூட்டரின் வலதுபக்கம் டைம் பக்கத்தில் கீழ் காண்பதுபோல் ஒரு ஐக்கான் வந்து இருக்கும். அந்த ஐக்கானை கிளிக் செய்து இரண்டாவதாக உள்ள "அ" UNICODETAMIL என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு இனைய தளத்தில் நீங்கள் விரும்பும் இடத்தில் தமிழில் டைப் செய்யலாம்.



இதில் முதலாவதாக உள்ள "அ" TSCIIANJAL என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்கள் கம்ப்யூட்டரில் MSword, Ms Excel போன்றவற்றில் தமிழில் டைப் செய்யலாம். இதில் டைப் செய்யும்போது இதன் Font Type ஐ TSCU_paranar என்ற டைப்புக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

அதாவது

கம்ப்யூட்டரில் டைப் செய்ய: "அ" TSCUANJAL
நெட்டில் டைப் செய்ய :: "அ" UNICODETAMIL

Drop Box பயன்படுத்துவது எப்படி ?



 
Simplify Your Life



Dropbox என்றால் என்ன ? இதனை நாம் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்வதால் நமக்கு என்ன பயன் ? இதனை நாம் நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது எப்படி ? என்பதை பற்றி நாம் இந்த பாடத்தில் தெளிவாக பார்ப்போம்.....

ஆரம்ப காலத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய Personal File களை கம்ப்யூட்டரில் சேமித்து வைத்து பயன்படுத்தும்பொழுது அந்த பைல்களை இன்னொரு காப்பி எடுத்து வைத்துக்கொண்டு தேவையான நேரங்களில் தம் கம்ப்யூட்டரிலோ அல்லது  வேறு கம்ப்யூட்டரிலோ பயன்படுத்துவதற்கு Floppy Disk என்ற ஒன்றை பயன்படுத்தினார்கள். 

                                                                                                                    Floppy Disk ( 1.44 MB Capacity )
                        
 இந்த Floppy Disk ன் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா ? 1.44 MB மட்டும் தான். இந்த 1.44 MB அளவில் தான் நாம் நம் பைல்களை சேமிக்க முடியும். 2 MB அளவில் உள்ள ஒரு பைலை நாம் இந்த Floppy ல் சேமிக்க முடியாது. அப்படி என்னதான் இதில் நாம் சேமிப்பது ? Windows 95 மற்றும் 98 பயன்படுத்தும் காலத்தில் நாம் சேமிக்க நினைப்பது ஆடியோ அல்லது வீடியோ பைல்களை அல்ல. Microsoft Excel மற்றும் Word File களை மட்டும்தான். இந்த மைக்ரோசாப்ட் ஆபீஸ் பைல்கள் ஒவ்வொன்றும் 50 KB, 200 KB, 300 KB என்ற அளவில்தான் இருக்கும். இந்த பைல்களில் 10 அல்லது 15 பைல்களை நாம் இந்த ஒரு Floppy Disk ல் மொத்தமாக சேமித்து வைத்து Backup Disk ஆக இதனை பயன்படுத்திக்கொள்வோம்.

அப்படி இருந்த காலம் மாறிப்போய் இப்பொழுது USB Pen Drive பயன்படுத்தும் காலம் வந்துவிட்டது.


 

இந்த Pen Drive 256 MB, 512 MB, 1 GB என்று ஆரம்பித்து இப்பொழுது 8GB, 16 GB, 32 GB, 64 GB, 128 GB என அசுர வேகத்தில் அதன் வளர்ச்சி மேலே போய்க்கொண்டிருக்கிறது.

 மைக்ரோசாப்ட் ஆபீஸ் பைல்களை மட்டும் காப்பி எடுத்து பத்திரபடுத்தி வைத்துக்கொண்டிருந்த நாம் இப்பொழுது Audio, Video, Digital Photos, Software போன்றவற்றையும் காப்பி எடுத்து பத்திர படுத்தி வைக்கும் காலத்திற்கு வந்துவிட்டோம்.  அதனால் தான் நமக்கு இப்பொழுது 16 GB Pen Drive கையில் இருந்தால் கூட போதாது என்பதுபோல் ஆகிவிட்டது. சரி Drop Box ஐ பற்றி சொல்லாமல் வேறு எதையோ நான் ஏன் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. 

இனி இந்த Drop Box கதைக்கு வருவோம்....... இந்த Dropbox மென்பொருளைதயாரித்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா ? நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பைல்கள் எதுவானாலும் அதனை நீங்கள் மற்ற இடங்களில் பயன்படுத்த Pen Drive வில் அதனை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக எங்கள் Drop Box ஐ பயன்படுத்துங்கள் என்று சொல்கிறார்கள். 

இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கிறீர்களா ? இன்றைய நவீன யுகத்தில் இண்டெர்நெட் கனெக்சன் இல்லாத கம்ப்யூட்டர் எதுவும் இல்லை. கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இண்டெர் நெட் பயன்படுத்துபவராகவே இருக்கிறார்கள். எனவே இண்டெர் நெட் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இண்டெர் நெட் இல்லாதவர்கள் தங்கள் பைல்களை Pen Drive ல் காப்பி செய்து வைத்து மட்டும்தான் பயன்படுத்த முடியும். வேறு வழி இல்லை.

நீங்கள் எப்பொழுதும் இணைய இணைப்புடன் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துபவரா ? நீங்கள் மட்டுமே இனி தொடந்து படிக்கலாம்.....

உங்களிடம் Laptop,  Desktop, i phone, i pad அல்லது Samsung Galaxy phone, Galaxy Tab, Blackberry  என்று பல பயன்பாட்டு எலெக்ட்ரானிக் சாதனங்கள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். 

இந்த Drop Box ஐ நீங்கள் பயன்படுத்தினால் நீங்கள் உருவாக்கி சேமிக்கும் மைக்ரோசாப் ஆபீஸ் பைல்கள் அல்லது இணையத்தில் இருந்து டவுண்லோடு செய்து சேமிக்கும் Audio, Video மற்றும் Software போன்ற பைல்கள் ஒரே நேரத்தில் இந்த அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களிலும் சேமிக்கப்படும். அது எப்படி ? 

முதலில் நீங்கள் இந்த Drop Box ஐ  www.dropbox.com  என்ற இணைய தளத்தில் இருந்து டவுண்லோடு செய்யுங்கள்.

பிறகு இதனை நீங்கள் உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

 


இதனை இன்ஸ்டால் செய்யும்பொழுது இந்த டிராப் பாக்ஸ் மூலம்  நீங்கள் புதிதாக ஒரு கணக்கை உருவாக்க வேண்டி இருப்பதால் I don't have a dropbox account என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து Next ஐ அழுத்துங்கள்......... 

 


அடுத்து வரும் இந்த பகுதியில் உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஈமெயில் முகவரியை சரியாக டைப் செய்துகொண்டு கீழே Terms of Service ஐ டிக் செய்துகொண்டு Next ஐ அழுத்துங்கள்....

 


அடுத்து வரும் இந்த பகுதியில் நீங்கள் இலவசமாக டிராப் பாக்ஸ் அக்கவுண்டை ஓப்பன் செய்வதால் 2 GB Free ஆப்சனை தேர்ந்தெடுத்து Next ஐ அழுத்துங்கள்......

 


அடுத்து இந்த டிராப் பாக்ஸை நீங்கள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற சில டிப்ஸ்கள் கிடைக்கும் பகுதி இது... இந்த டிப்ஸ் தேவை இல்லை எனில் Skip tour என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.....

 


இறுதியாக நீங்கள் இந்த பகுதிக்கு வந்ததும் இந்த Finish Button ஐ கிளிக் செய்து உங்கள் Drop Box Installation ஐ முடித்துக்கொள்ளுங்கள்.........

 


உங்கள் கம்ப்யூட்டரில் இந்த Drop Box இன்ஸ்டால் ஆகி முடிந்ததும் இதுபோல் ஒரு போல்டர் ஓப்பன் ஆகும். இதுதான் உங்கள் டிராப் பாக்ஸ் பைல்களை சேமிக்கும் போல்டர். இதில் Drop Box மூலம் தானாக சேமிக்கப்பட்ட இரண்டு போல்டர்கள் வந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம்...... இந்த இரண்டு போல்டரின் கீழ்பகுதியிலும் இரண்டு நீல கலரில் புள்ளிகள் சக்கரம்போல் சுற்றுவதை நீங்கள் காணலாம். இப்படி சக்ரம் போல் சுற்றும் நேரத்தில் உங்கள் டிராப் பாக்ஸில் இந்த போல்டர்கள் இண்டெர் நெட் மூலம் அதன் உள்ளே இணைக்கப்பட்ட பைல்களை டவுண்லோடு செய்துகொண்டிருக்கிறது என அர்த்தம்......

 

போல்டரின் கீழே உள்ள அந்த சக்கரம்போல் உள்ள ஐக்கான் இங்கு காண்பதுபோல் டிக் செய்ததுபோல் மாறிவிட்டது என்றால் பைல்கள் சரியாக டவுண்லோடு ஆகிவிட்டது என்று அர்த்தம். உடனே உங்கள் டெக்ஸ்டாப்பில் டைம் பக்கத்தில் எத்தனை பைல்கள் டவுண்லோடு ஆனதென்ற செய்தி வந்துவிடும்.

 


இந்த போல்டரில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்ரில் வேறு இடத்தில் உள்ள ஒரு போட்டோவையோ அல்லது பைலையோ காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதுவும் முன்பு சொன்னமுறைப்படி இண்டெர் நெட் மூலம் அப்டேட் ஆக ஆரம்பிக்கும். ( இங்கு காண்பதுபோல்)

 




இறுதியாக இங்கு காண்பதுபோல் அதன் கீழே டிக் வந்துவிடும். 


 


இந்த முறைப்படி நீங்கள் உங்கள் பைல்களை (Audio, Video, Photo, Software போன்றவற்றை) 2 GB அளவில் இந்த Drop Box அக்கவுண்ட் மூலமாக சேமித்துக்கொள்ளலாம். 2 GB க்கு மேல் சேமிக்க வேண்டுமென்றால் இந்த அக்கவுண்டுக்கு பணம் செழுத்தவேண்டும். பணம் செழுத்தாமல் இந்த அக்கவுண்டில் நீங்கள் கூடுதல் GB ஐ பெற வேறு ஒரு வழி உண்டு. அதாவது நீங்கள் இந்த டிராப் பாக்ஸ் மூலம் உங்கள் நண்பர்களுக்கு பைல்களை Sharing செய்யலாம். அப்படி Sharing செய்யும்பொழுது உங்கள் டிராப் பாக்ஸ் மூலம் செல்லும் லிங்க் மூலமாக உங்கள் நண்பர் இந்த Drop Box அக்கவுண்ட் ஒன்றை இலவசமாக உருவாக்கினார் என்றால் உங்களுக்கு 500 MB Space இலவசமாக கிடைக்கும். இந்த முறைப்படி நீங்கள் 18 GB வரை உங்கள் அக்கவுண்டுக்கு இட வசதியை கூட்டலாம்.

சரி இந்த Drop Box ல் நாம் சேமித்த நம் பைல்களை நம் மொபைலில் எப்படி பயன்படுத்துவது ?

iPhone, iPad, Android mobiles and Blackberry Mobile போன்றவற்றிலும் நீங்கள் இதுபோல் Drop Box மென்பொருளை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்...... அப்படி இன்ஸ்டால் செய்யும்பொழுது நீங்கள் ஏற்கனவே இதன் கணக்கை உருவாக்கிவிட்டதால் I already have a Drop box account என்ற ஆப்சன் மூலமாக நீங்கள் செல்லுங்கள்....

 


  
உடனே அடுத்து வரும் பகுதியில் உங்கள் ஜிமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டை டைப் செய்து next பட்டனை கிளிக் செய்தால் போதும். உங்கள் அக்கவுண்ட் ஓப்பன் ஆகிவிடும். உடனே நீங்கள் கம்ப்யூட்டர் மூலமாக சேமித்த பைல்கள் அனைத்தும் உங்கள் மொபைலில் டவுண்லோடு ஆகிவும்.

 

இந்த முறைப்படி நீங்கள் கம்ப்யூட்டரில் Drop Box மூலம் சேமித்த பைல்கள் அனைத்தையும் iPhone, iPad, Samsung Galaxy Tab மற்றும் Android மென்பொருள் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல்களிலும் உடனுக்கு உடன் பயன்படுத்தலாம்.



இந்த Drop Box ஐ iTunes, iPhone App Stores மூலம் நீங்கள் உங்கள் iPhone மொபைல்களுக்கு பயன்படுத்த டவுண்லோடு செய்துகொள்ளலாம்....


 

 


அதே போல் இந்த Drop Box ஐ Google Play Android Marker ல் இருந்து உங்கள் Android மொபைல்களுக்கு பயன்படுத்த  நீங்கள் டவுண்லோடு செய்துகொள்ளலாம்....


 

 
   
 


இந்த Drop Box மூலம் நாம் சேமிக்கும் பைல்களை மற்ற கம்ப்யூட்டர்களிலும் லேப்டாப்பிலும் பயன்படுத்துவது எப்படி ?

மேலே சொன்ன முறைப்படி நீங்கள் உங்கள் Drop Box Account User Name and Password மூலம் வேறு ஒரு கம்ப்யூட்டரிலோ அல்லது நீங்கள் பயன்படுத்தும் லேப்டாப்பிலோ ஒரு Drop Box ஐ இன்ஸ்டால் செய்து செட்டப் செய்துகொண்டால் ஒரே நேரத்தில் உங்கள் பைல்களை நீங்கள் பயன்படுத்தும் அனைத்து கம்ப்யூட்டர்களிலும் சேமித்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Drop Box போல்டரில் இணைக்கும் ஒவ்வொரு பைலும் ஒவ்வொரு முறையும் இணையத்தில் உங்கள் Drop Box அக்கவுண்டில் சேமிக்கப்படுவதால் உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலும் உங்களுடைய முக்கியமான பைல்கள் உடனே அழிந்துவிடாது. கம்ப்யூட்டரை பார்மெட் செய்து மறுபடி இண்ஸ்டால் செய்த பிறகு திரும்பவும் உங்கள் Drop Box அக்கவுண்ட் மூலம் நீங்கள் Drop Box ஐ இன்ஸ்டால் செய்தால் போதும் அதில் நீங்கள் சேமித்த பைல்கள் அனைத்தும் மறுபடியும் உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டுவிடும்.

நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்கள் கம்ப்யூட்டரில் இந்த Drop Box இன்ஸ்டால் செய்யப்பட்டு அது பயன்படுத்தப்படுகிறது. பிறகு நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்கிறீர்கள் அந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் இந்த Drop Box ஐ இன்ஸ்டால் செய்து அதே அக்கவுண்டை பயன்படுத்தும்பொழுதும் நீங்கள் வெளிநாட்டில் இருந்து சேமித்த பைல்கள் அனைத்தும் அங்கு உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரில் தானாக டவுண்லோடு ஆகிவிடும். அதன் பிறகு நீங்கள் அதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதன் பிறகு நீங்கள் மறுபடியும் வெளி நாடு வந்துவிட்டாலும் நீங்கள் வெளிநாட்டில் இருந்துகொண்டு உங்கள் Drop Box அக்கவுண்டில் சேமிக்கும் போட்டோ மற்றும் பைல்களை உங்கள் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் மிக எளிதாக Drop Box ஐ ஓப்பன் செய்து பயன்படுத்திக்கொள்வார்கள்.

உங்கள் Drop Box ல் உள்ள பைல்களை உங்கள் நண்பர்களுக்கு இணைப்பு (Sharing) கொடுப்பது எப்படி ?  

நீங்கள் Drop Box ல் சேமித்த உங்கள் போட்டோ அல்லது சாப்ட்வேர் போல்டரை உங்கள் நண்பர்களுக்கு இணைப்பு கொடுக்கவேண்டுமென்றால் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Drop Box போல்டரை ஓப்பன் செய்து அதில் நீங்கள் Sharing (இனைப்பு) கொடுக்கப்போகும் அந்த போல்டரின் மேல் உங்கள் மவுசை வைத்து வலதுபக்கம் கிளிக் செய்து வரும் தட்டில் Drop Box என்ற ஆப்சனுக்கு சென்று அதில் Share this folder என்ற ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.....

 


 உடனே இணைய தொடர்பின் மூலம் இதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும். முதன் முதாலாக நீங்கள் Drop Box மூலம் உங்கள் நண்பருக்கு உங்கள் பைல்களை Sharing செய்வதால் உங்கள் ஈமெயில் இது உங்கள் மெயில் முகவரிதான் என்பதன் அடையாலமாக Email Verification செய்யப்படும். இதில் நீங்கள் Send Mail என்பதை கிளிக் செய்யுங்கள்.

 

உடனே Drop Box மூலம் உங்கள் ஈமெயில் முகவரிக்கு ஒரு லிங்க் தானாக அனுப்பி வைக்கப்படும். இனி நீங்கள் உங்கள் ஈமெயிலை ஓப்பன் செய்து அந்த Drop Box  தளத்தில் இருந்து வந்த மெயிலை ஓப்பன் செய்து அந்த Verification Link ஐ கிளிக் செய்து உங்கள் Drop Box user name மற்றும் password ஐ டைப் செய்து confirm செய்துகொள்ளுங்கள்.

இனி  நீங்கள் உங்கள் போல்டரை Sharing செய்யும்பொழுது இங்கு காண்பதுபோல் ஒரு தட்டு ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் உங்கள் நண்பரின் ஈமெயில் முகவரியை டைப் செய்து Share folder என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் பைல்கள் அடங்கிய போல்டரை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
      


மேலே சொன்ன தேவைகளை தவிற இன்னும் பல தேவைகளுக்கு இந்த Drop Box மென்பொருளை நீங்கள் இந்த நவின யுகத்தில் பயன்படுத்தி பயன் பெறலாம்.

முயற்ச்சி செய்யுங்கள்...... வெற்றி நிச்சயம்........

அழித்த பைல்களை மீட்க..........


re














கொம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு அடிக்கடி ஒரு சிக்கல் வரும். தேவையான ஃபைல்களை சில நேரங்களில் நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். 
அவை ரிசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை பயன்படுத்தி றீ சைக்கிள் பின்னுக்கு செல்லாமல் சில பைல்களை அழித்துவிடுவோம். பின்னர் அதற்காக வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட ஃபைல்களை எடுத்து தருவதற்கு என்று பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாக கொம்ப்யூட்டரை பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. 
அனைவரும் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாக கிடைக்கிறது. இந்த புரோகிராமின் பெயர் Recover files இது கிடைக்கும் தளத்தின் முகவரி
றீ சைக்கிள் பின்னிலிருந்து நீக்கப்பட்ட பைல்கள், நெட்வொர்க் கட்டமைப்பில் அழிக்கப்பட்ட பைல்கள், கையடக்க பிளாஷ் கார்டிலிருந்து ஒரேடியாக நீக்கப்பட்ட பைல்கள், டாஸ் இயக்கம் மூலம் டெலீட் செய்த பைல்கள், விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று ஷிப்ட் கீயை அழுத்திக்கொண்டு கட்டாயமாக நீக்கிய பைல்கள் என அத்தனை வகையிலும் அழித்த பைல்களை இந்த புரோகிராம் மூலம் மீட்டு விடலாம்.
மிகச்சிறிய, ஆனால் வேகமாக இயங்கும் புரோகிராமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 
விண்டோஸ் 95 தொடங்கி விஸ்டா வரையில் இது இணைந்து செயல்படுகிறது.