Thursday, September 27, 2012

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!!


முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.
how steaming face benefits your skin

வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?
சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.
ஆவி பிடிப்பதால் என்ன நன்மை?
* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.
* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.
* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.
* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.
* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.
* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள். மேலும் ஆவி பிடிப்பதை முகத்திற்கு மட்டுமல்லாமல, கூந்தலுக்கு செய்யலாம். அதாவது வெதுவெதுப்பான நீரால் கூந்தலை அலசுவது தான். அதுமட்டுமல்லாமல், உடலுக்கு கூட செய்யலாம்.


English summary
Going for steaming is one of the best ways to refresh your skin and open the skin cells. Facial steaming has both beauty and health benefits. Steaming your face is inexpensive and can be done at any time of the day. All you need to do is treat your skin with some steamy air.

காலநிலை மாற்றம்: வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம்!


   
      


லண்டன்: தற்போது உலகம் சந்தித்து வரும் காலநிலை மாற்றம் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்கு உலகில் 10 கோடி பேர் பலியாகலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பல்வேறு காரணங்களால் உலகின் காலநிலையில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹஸ் விளைவு பாதிக்கப்பட்டுள்ளதால், உலகின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் துருவ பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது அதிகரித்து, கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக பூமி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் டாரா என்று மனிதாபிமான அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகில் உள்ள 184 நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு வரையுள்ள காலநிலை, பொருளாதாரம், மனித இனம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது,
உலகில் தற்போது நிலவி வரும் மாசுப்பட்ட காற்று, பசி, நோய்கள் ஆகிய காரணங்களால், ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரிப்பின் மூலம், வரும் 2030ம் ஆண்டிற்குள், ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் வரை பலியாகும் நிலை உருவாக வாய்ப்புள்ளது. தற்போது இறப்பவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.
காலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரித்து வருவதால், வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம். காலநிலை மாற்றம் மூலம் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் 1.2 ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இது வரும் 2030ம் ஆண்டிற்கு 3.2 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில் வரும் 2100ம் ஆண்டிற்குள் இது 10 சதவீத பொருளாதார இழப்பை ஏற்படுத்தலாம்.
அடுத்த 50 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலையில் 2 முதல் 3 டிகிரி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 50 ஆண்டுகளுக்கு பிறகு நுகர்வோரின் வாங்கும் தன்மை 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஒப்பு கொண்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Ignore climate change and 100m people will die by 2030, shocking new report claims


More than 100 million people will die and global economic growth will be cut by 3.2 percent of gross domestic product (GDP) by 2030 if the world fails to tackle climate change, a report commissioned by 20 governments has claimed.
As global average temperatures rise due to greenhouse gas emissions, the effects on the planet, such as melting ice caps, extreme weather, drought and rising sea levels, will threaten populations and livelihoods, said the report conducted by humanitarian organisation DARA.
It calculated that five million deaths occur each year from air pollution, hunger and disease as a result of climate change and carbon-intensive economies, and that toll would likely rise to six million a year by 2030 if current patterns of fossil fuel use continue.

The report warns that devastating changes to the earth would lead to 100m deaths and the end of many animal's habitats.
The report warns that devastating changes to the earth would lead to 100m deaths and the end of many animal's habitats.
More than 90 percent of those deaths will occur in developing countries, said the report that calculated the human and economic impact of climate change on 184 countries in 2010 and 2030. 
It was commissioned by the Climate Vulnerable Forum, a partnership of 20 developing countries threatened by climate change.
'A combined climate-carbon crisis is estimated to claim 100 million lives between now and the end of the next decade,' the report said.
It said the effects of climate change had lowered global output by 1.6 percent of world GDP, or by about $1.2 trillion a year, and losses could double to 3.2 percent of global GDP by 2030 if global temperatures are allowed to rise, surpassing 10 percent before 2100.
 
It estimated the cost of moving the world to a low-carbon economy at about 0.5 percent of GDP this decade.
British economist Nicholas Stern told Reuters earlier this year investment equivalent to 2 percent of global GDP was needed to limit, prevent and adapt to climate change. 
His report on the economics of climate change in 2006 said an average global temperature rise of 2-3 degrees Celsius in the next 50 years could reduce global consumption per head by up to 20 percent.
Temperatures have already risen by about 0.8 degrees Celsius above pre-industrial times. 
Climate change could dramatically alter cities such as Sao Paulo, researchers say.
Climate change could dramatically alter cities such as Sao Paulo, researchers say.
Almost 200 nations agreed in 2010 to limit the global average temperature rise to below 2C (3.6 Fahrenheit) to avoid dangerous impacts from climate change.
But climate scientists have warned that the chance of limiting the rise to below 2C is getting smaller as global greenhouse gas emissions rise due to burning fossil fuels.
The world's poorest nations are the most vulnerable as they face increased risk of drought, water shortages, crop failure, poverty and disease. 
On average, they could see an 11 percent loss in GDP by 2030 due to climate change, DARA said.
'One degree Celsius rise in temperature is associated with 10 percent productivity loss in farming. 
'For us, it means losing about 4 million metric tonnes of food grain, amounting to about $2.5 billion. 
'That is about 2 percent of our GDP,' Bangladesh's Prime Minister Sheikh Hasina said in response to the report.
'Adding up the damages to property and other losses, we are faced with a total loss of about 3-4 percent of GDP.'
Even the biggest and most rapidly developing economies will not escape unscathed. 
The United States and China could see a 2.1 percent reduction in their respective GDPs by 2030, while India could experience a more than 5 percent loss.


முகப்பரு குறையமாட்டேங்குதா? எண்ணெய்யை பயன்படுத்தி பாருங்களேன்...!


முகத்தின் அழகைக் கெடுப்பதில் முகப்பருக்கள் முதலில் இருக்கின்றன. அத்தகைய பருக்கள் முகத்தில் அதிக எண்ணெய் இருப்பதனால் ஏற்படுகிறது என்று தான் அனைவரும் நினைக்கின்றனர். ஏனெனில் அந்த எண்ணெய் இருப்பதால், முகத்தில் அழுக்குகள் படியும் போது, அவற்றை அப்படியே சருமத்தில் தங்க வைத்துவிடுகின்றன. பிறகு துளைகள் அடைக்கப்பட்டு, பிம்பிளாக மாறி, பின்னர் உடைந்து விடுகின்றன. ஆனால், சருமத்திற்கு எப்படியிருந்தாலும் சருமத்திற்கு ஏதேனும் எண்ணெய்கள் தேவைப்படுகின்றன.
இல்லையென்றால் சருமம் வறட்சியை அடைந்துவிடும். அதிலும் ஒரு சில எண்ணெய்கள் பயன்படுத்தினால், சருமத்தில் படியும் அழக்குகளை தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். இதனால் முகத்தில் தோன்றும் முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் அந்த எண்ணெய்களைப் பயன்படுத்தினால், சருமம் நன்கு மென்மையோடு, இளமையோடு காணப்படும். இப்போது எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தினால், முகப்பருக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதைப் பார்ப்போமா!!!


.சந்தன எண்ணெய்: முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க இதுவரை சந்தன ஃபேஸ் மாஸ்குகளை தான் பயன்படுத்துவோம். இப்போது அதே சந்தனத்தால் ஆன எண்ணெய் கூட, அந்த ஃபேஸ் மாஸ்க்கின் பயனைத் தருகிறது. அதிலும் முகப்பருக்கள் ஏற்படுவதற்கு பெரும் காரணம், உடலில் வெப்பம் அதிகமாக இருப்பதாகும். ஆகவே இந்த சந்தன எண்ணெயை பயன்படுத்தினால், உடல் குளிர்ச்சியடைந்து, பருக்களை குறைத்துவிடும்.
கிராம்பு எண்ணெய்: முகப்பரு வந்து அதனை நீக்க, கைகளால் உடைத்து, அதனால் நிறைய பருக்கள் பரவினால், அப்போது கிராம்பு எண்ணெயை பயன்படுத்தினால், பருவில் உள்ள கிருமிகள் அழிந்து, பருக்கள் வராமல் இருப்பதோடு, பருக்களால் ஏற்படும் வடுக்களை எளிதில் நீக்கலாம்.
லாவண்டர் எண்ணெய்: முகத்தில் பருக்கள் ஏற்பட்டு, அதனால் முகத்தில் அதன் வடுக்கள் படிந்து, முகத்தின் அழகு கெட்டுவிட்டது போல் நீங்கள் வருத்தப்பட்டால், அப்போது அதனை நீக்க சிறந்த வழி லாவண்டர் எண்ணெய் தான். மேலும் இந்த எண்ணெயை முகத்திற்கு தடவி வந்தால், பருக்கள், அதனால் ஏற்படும் வடுக்கள் எளிதில் போவதோடு, முகத்தில் பளிச்சென்று அழகாக காணப்படும்.
ஜொஜொபா எண்ணெய்: சருமத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க பயன்படும் எண்ணெய்களில் ஜொஜொபா எண்ணெயும் ஒன்று. இந்த எண்ணெய் சருமத்தின் சக்தியை அதிகரிக்கிறது. மேலும் சருமத்தில் பாதிக்கப்பட்டுள்ள செல்களை புதுப்பித்து, சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, முகப்பருக்களை வராமல் தடுக்கும்.
ஆலிவ் எண்ணெய்: சருமத்திற்கு வைட்டமின் ஈ உள்ள எண்ணெய் என்றால் மிகவும் நல்லது. ஏனெனில் அதில் உள்ள வைட்டமின் ஈ ஆன ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் படியும் அழுக்குகளை தங்க விடாமல் தடுப்பதோடு, சருமத்தை பொலிவோடும் வைக்கும்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயிலும் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. நிறைய மக்கள் இதனை பயன்படுத்தினால், பருக்கள் அதிகமாகும் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் சரியாக இயங்கி, சருமத்தில் அழுக்குகள் தங்குவதை தடுத்து, முகப்பருக்களை வேரோடு அழித்துவிடும். மேலும் இது உடலில் உள்ள ஹார்மோன்களை சரியாக இயக்குவதால், பருக்கள் ஏற்படாமல் இருக்கும்.