Thursday, August 9, 2012

Chicken Escoty: கோழிக்கறி எஸ்காட்டி

                                  





கோழிக்கறி எஸ்காட்டி தேவையான பொருட்கள்

முழுக்கோழி - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 3
மிளகு - 10
ஏலக்காய் - 3
பட்டை சிறு துண்டு, லவங்கம் - 5
ஜாதிக்காய்த் தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணை - தேவைக்கேற்ப
புளி - கோலியளவு

கோழிக்கறி எஸ்காட்டி செய்முறை:

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை லவங்கம், சோம்பு, இஞ்சி, வெந்தயம் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இதை விழுதாக அரைக்கவும்.

துண்டுகளாக நறுக்கிய ஒரு வெங்காயத்தை சிறிது எண்ணைவிட்டு வதக்கி, தேங்காய் துருவல், கசகசா சேர்த்து வறுத்து அரைக்கவும்.

மீதி தேங்காயில் பால் எடுக்கவும். ஒரு கப் கெட்டியான பால் எடுத்துக் கொள்ளவும். நீர் ஊற்றி இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும்.

மூன்று டீஸ்பூன் எண்ணெயை ஒரு கடாயில் காய வைத்து நறுக்கிய இரண்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

இப்போது கோழிக்கறி துண்டுகளை சேர்த்து, அரைத்த விழுதுகளையும் போட்டு வதக்கவும்.

மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும்,

புளிக் கரைசலைச் சேர்த்து இரண்டாவது பாலைச் சேர்க்கவும், போதுமான உப்பு சேர்த்து கோழிக்கறி நன்றாக வேகும் வரை சமைக்கவும்.

எலுமிச்சம் பழச்சாறு மற்றும் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய்ப்பால் சேர்க்கவும். பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.


Meat Vadai: இறைச்சி வடை


இறைச்சி வடை: தேவையான பொருட்கள்

கைமா (கொத்துக்கறி) - 1/4 கிலோ
முட்டை - 2
                                


கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது)
டால்டா - 200 கிராம்
எலுமிச்சம் பழம் - 1/2 மூடி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 நறுக்கியது
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 3
ரஸ்க் தூள் - 5 ஸ்பூன்
இஞ்சி - சிறுதுண்டு (பொடியாக நறுக்கியது)
பூண்டு பல் - 5 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப

இறைச்சி வடை செய்முறை

கைமாவைச் சுத்தம் செய்து எலுமிச்சம் பழம் பிழிந்து, உப்பு, மஞ்சள்தூள் போட்டு வேக வைக்கவும். பின் நீரை வடித்துவிட்டு வதக்கவும்.

உருளைக் கிழங்கை வேக வைத்து மசிக்கவும், பட்டை கிராம்பு தூள் செய்யவும்.

கடாயில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி இலை, உருளைக்கிழங்கு, பட்டை, கிராம்பு பொடி இவற்றுடன் சிறிது உப்பு போட்டு வதக்கவும்.

மட்டனுடன் இதை நன்கு மிக்ஸ் செய்யவும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி, சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். ஆட்டிறைச்சி கலவையை இதில் முக்கி ரஸ்க் தூளில் புரட்டவும்.

காய்ந்த எண்ணெயில் இதை வடை போல தட்டிப் போட்டு, புரட்டி வெந்ததும் எடுக்கவும்.

Dry Chillie is an Pain Killer: வலிகளைப் போக்கும் வர மிளகாய்



காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நம் இந்திய சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது. இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன. குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – ( விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.

ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்

விதைகளுடன் கனிகள், ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவேற்றுகிறது.. தசைக்குடைச்சல் வலியை போக்கும் தன்மை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது.
உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படையாகிறது.

தோல் நோய்களை போக்கும்

தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க வல்லது.
பாக்டீரியங்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும். தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக பயன்படுகிறது.

வலிகளைப் போக்கும்

சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண வில்லைகளாகச் செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது. மேடைப் பேச்சாளர்கள் மற்றும் பாடகர்களுக்கு மிகவும் உதவும். வலிகளைப் போக்க தேய்ப்புத் தைலமாக பயன்படுகிறது.
இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாகிறது. தீப்புண் மேல் தூவப்படுகிறது.

Tembarature Trash: வெப்பநிலை மாசுபாடு


அதிக வெப்ப கழிவு மற்றும் வெப்ப நீரோட்டம் போன்றவற்றின் காரணத்தால் வெப்ப நிலை மாசுபாடு உண்டாகிறது. வெதுவெதுப்பான நீரில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ளது. ஆகையால் அங்கக பொருட்களின் மக்கும் திறனானது குறைகிறது. பச்சை பாசியானது நிலப்பச்சை பாசியாக மாறுகிறது. பல விலங்குகளின் இனம்பெருக்கம் பாதிக்கிறது. ஒà ��ு நன்னீர் வகை மீன்களின் முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல் மற்றும் சால்மன் இனத்தின் முட்டையிடுதல் போன்றவை உயர் வெப்பநிலையில் ஏற்படும் போது தோல்வியடைகிறது.
வெப்பநிலை மாசுபாடு என்பது மனிதனின் செயலால் நீரில் ஏற்படும் தட்பவெப்பநிலையின் ஏற்றம் அல்லது இறக்கமாகும். மின் நிலையம் மற்றும் தொழிற்சாலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் நீரினால் வெப்பநிலை மாசுபாடு உண்டாகிறது. இயந்திரங்களின் வெப்பத்தை தனிக்க உதவும் நீரினை வெளியேற்றும் போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு குற�¯ �வு மற்றும் உயர்வாழினங்களை பாதிக்கும் தன்மு பொன்றவற்றால் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. நகர மக்களின் பயன்பாடான சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்திவைக்கப்படும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது, மேற்பரப்பு நீருடன் கலப்பதால் அதிக தட்பவெப்பநிலையைக் கொண்ட நீருக்கு ஆதாரமாக அமைகிறது.
பொட்ரீரோ உற்பத்தி நிலையம்
வெதுவெதுப்பாக உள்ள ஆற்றுகளில் மிகக் குளிர்ந்த தன்மையுடைய நீர்த்தேக்கத்த வெளியீடும் போது வெப்பநிலை மாசு ஏற்பட காரணமாக அமையும். இதனால் மீன்கள் (அதன் முட்டை மற்றும் கூட்டுப்புழு) ஆற்றின் தன்மை பாதிக்கிறது.
தற்போது இருப்பதை விட இன்னும் வெப்பநிலை மாசுபாடு அதிகமாகும் போது உலகவெப்பமய பாக்கலின் தாக்கம் அதிகரிக்கும். அதிக செயல் பணிகளை உள்ளடக்கிட தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் அதிக வெப்பத்திறனால் வெப்பநிலை மாசுபாடு அதிகரிக்கிறது. இந்த மாசுபாடு ஏற்படுவதற்கான விளக்கம் பின்வருமாறு.
சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாவில் பொட்ரீரோ உற்பத்தி நிலையின் வெப்பமான நீர் வெளியீடு :
உற்பத்திக்கான மூலப் பொருட்கள் (அங்கக மற்றும் இரசாயன பொருள்)
பல்வேறு செயல் முறைகளில் வெவ்வேறு வேதி வினை
அதிக வெப்ப திறனால் உற்பத்தியாகும் பயனற்ற பொருள் (திரவமாக) வெளியேற்றப்படுகிறது
சுற்றுப்புறச்சூழல் முறையின் தட்பவெப்ப நிலையை உயர்த்துதல்
வானிலை ஆராய்ச்சி மையத்தின் மூலம் வானிலை மாற்றத்தினை குறிப்பாக வளிமண்டல தட்பவெப்ப நிலையை அளவீடுகிறது. இந்த அளவீடப்பட்ட வரைபடமானது கடந்த 10 வருடம் அளவின் படி ஒப்பீடப்படுகிறது. இந்த ஒப்பீடானது தற்போது இருக்கும் வெப்பநிலையின் விகிதத்தை கூறுகிறது. இதன் அடிப்படையில் வெப்பநிலையை நிலையாக தக்கவைத்து கொள்ள மேற்கோள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
ஆதாரங்கள் மற்றும் முறைகள் :
வெப்பநிலை மாசுபாட்டிற்கு காரணமான முக்கிய ஆதாரங்களின் வகைகள் பின்வருமாறு.
மின் நிலையங்களில் தொல்லுயிர் எச்ச எரிபொருட்களின் பயன்பாட்டால் உருவாக்கப்படும் மின்சக்தி
தொழிற்சாலையின் வசதிகளால் குளிர்விக்கப்படும் நீர்
கடற்கரை பகுதிகளில் காட்டழிப்பு
மண்ணரிப்பு
வேளாண்மை ஆதாரங்கள்
சூழலியலில் தாக்கம் - மிதவெப்பமான நீர்
உயர் வெப்ப நிலையானது நீரில் கரையும் ஆக்ஸிஜனின் (DO) தன்மையை குறைக்கிறது. இவ்வாறு ஆக்ஸிஜன் கரையும் தன்மை குறைவதால் மின், நீர் நில வாழிகள் போன்ற உயிரினங்களை பாதிக்கிறது. இவ்வகை உயிரினங்களின் வளர்சிதை மாற்றத்தின் விகிதமானது வெப்பநிலை மாசுபட்டால் அதிகரிக்கும் போது உயிரினங்களுக்கு தேவைப்படும் உணவில் குறைபாடுமà � ஏற்படுகிறது. இதனால் எண்ணிக்கையில் குறைகிறதுஇ சுற்றுப்புறச்சூழலில் மாற்றங்கள் ஏற்படும் போது உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதாவது உயிரினங்களுக்கு தகுந்த சூழலுக்கு இடப்பெயருகிறது. மீன்கள் மிதமான தண்ணீரில் வாழ்கிறது. இவைகள் இடம்பெயருவதில்லை ஆகையால் கிடைக்கும் ஆகாரத்தின் அளவு குறைகிறது. பழைய மற்றும் புதிய சுற்றுப்புறச்சூழலின் இணக்கமான உணவà � சங்கிலியில் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் முடிவாக உயிரியியல் பல்வகை குறைகிறது.
பெறப்பட்ட நீரினால் மீன் இறப்பு
தட்பவெப்பநிலையில் 1-2 டிகிரி செல்சியஸ் அளவு மாற்றங்கள் நிகழும் போது உயிரினங்களின் வளர்சிதை மாற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. மற்ற உயிரியல் அணுக்களும் பாதிக்கிறது. மேலும் சவ்வூடு பரவலுக்கு செல்லும் உயிரணுக்களின் ஊடுருவும் தன்மை, உயிரை புரதத்தின் திரளும் தன்மை, நொதி வளர்ச்சிதைமாற்றம் போன்றவற்றிலு ம் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் இனப்பெருக்கம் மற்றும் இறப்பு விகிதம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.
நீரில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது நீரித் தாவரங்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்தும் குறைந்த வாழ்க்கைச் சூழலையும், சிற்றினத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் காணப்படுகிறது. இதனால் இந்த பாசிகள் நீரில் ஆக்ஸிஜனின் அளவை குறைக்கிறது. ஒளிச்சேர்க்கையின் அளவு குறைவதால் தாவரத்தின் அதிக அடர்த்தி தாவரத்தின் சுவாச விகிதத்தை அதிகரிக்கிறது. இது வளமூட்டப்பட்ட நீர் நிலைகளுக்கு ஒத்தாகும். இந்த நீர்நிலைகளில் வேளாண்மை கனிம உரங்கள் பயன்பாட்டால் நீர்மூலக்கூறுகள் மாசுபடுகிறது. அதிக அளவு அதிகரிக்கும் வெப்பநிலையினால் நொதி அமைப்பில் நைட்ரஜன் மற்றும் டைசல்பைடு பிணைப்பு உடைந்து நொதியின் முறையை மாற்றுகிறது. இந்த நொதி மாறுபாட்டுடைய நீர்நிலையங்களில் லிப்பீடுகள் உடையும் திறனற்று இருக்கிறது. இதனால் ஊட்டக்குறையானது ஏற்படுகிறது.
வரையறுக்கப்பட்ட நிலையில் வெதுவெதுப்பான நீரினில் குறைந்தபட்ச அழிவையையும் நீர்நிலவாழினங்களின் உட்கிரக்கும் தன்மை அதிகமாகும் இருக்கும். இந்த நிலையானது பொதுவாக பருவம் சம்பந்தப்பட்ட நீருக்கு பொருத்தும். இதனை வெப்பநிலை செறிவூட்டம் எனலாம். குளிர்காலத்தில் அளவுக்கு அதிகமான வெப்பநிலை இருக்கும் போது நீர் மசுக்களானது மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் வெதுவெதுப்பான நீரினில் இருந்து நீர் பசுக்கள் ஒன்று கூடி கூட்டமாக இருக்கும். ஆனால் மின்நிலையத்தின் வெளியேற்றம் தடுக்கப்படும் போது குளிர்காலத்தில் நீர்பசுக்கள் இறந்துவிடும் நிலை ஏற்பட்டு எண்ணிக்கையானது குறைந்துவிடும்.
வெப்பநிலையானது, நன்னீரில் 700 பாரன்கைட், உப்புநீரில் 800 பாரன்கைட் மற்றும் வெப்பமண்டல பகுதியின் மீன்களில் 850 பாரன்கைட் ஆகும்.
சூழிலியலில் விளைவு - குளிர் நீர்
நீர்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் குளிர் நீரினால் ஆறுகளிலுள்ள மீன்கள் மற்றும் பெரிய முதுகெலும்பற்ற உயிரினங்கள் போன்றவற்றில் மாற்றங்களையும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறுகள் வெதுவெதுப்பான வெப்பநிலையை உள்ளடக்கிய பகுதியாகும். இதனால் இந்த ஆறுகளில் நிலையான மீன் இனங்கள் மற்றும் குறிப்பிட்ட முதுகெலும்பற்à �± உயிரினங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தட்பவெப்பநிலையானது நன்னீரில் 500 பாரன்கைட்டுக்கு குறைவாகவும் உப்பு நீரில் 750 பாரன்கைட்டாகவும், வெப்ப மண்டலத்தில் 800 பாரன்கைட்டாகவும் இப்பகுதியில் உள்ளது.
வெப்பநிலை மாசுக்கட்டுப்பாடு :
கஸ்டல் நீப்பர் மின் நிலைய குளிர்விப்பான் கோபுரம், டார்ட்மட், ஜெர்மனி
தொழிற்சாலை கழிவுநீர் :
ஐக்கிய நாடுகளில் வெப்பநிலை மாசுவானது தொழில் சம்பந்தம்பட்டான ஆதாரங்களான மின்நிலையம் பெட்ரோலில் துரிதம், காகித ஆலை, வேதிவினை நிலையம் இரும்பு நிலையம் மற்றும் நுகர் பொருட்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படுகிறது. இந்த மாசுக்கள் கட்டுப்படுத்தும் வழிகள் பின்வருமாறு.
குளிர்விக்கும் குளம் நீராவி, பரிமாற்றம் மற்றும் கதிரியக்கம் போன்றவற்றினால் மனிதனால் உருவாக்கப்பட்ட குளிர்விக்கும் குளம்
குளிர்விக்கும் கோபுரம் - ஆவியாகும் மற்றும் வெப்ப மாற்று முறையின் மூலம் தேவையற்ற வெப்பத்தை வளிமண்டலத்திற்கு அனுப்புதல்
ஒருங்கிணைந்த வெப்பம் மற்றும் மின்திறன் தொழிற்சாலை வெப்பமாக்குதலின் நோக்கத்திற்கு தேவையற்ற வெப்பத்திறன் மறுசுழற்சி செய்யும் செயல்முறை.
மேலே குறிப்பிட்ட முறைகளின் மூலம் ஒருமுறை குளிர்வித்தல் (OTC) என்ற இயக்கமுறையை கையாளும் போது தட்பவெப்பநிலையானது தேவயான அளவு குறைவதில்லை. எடுத்துக்காட்டாக ஸான் ஃப்ரான்சிஸ்கோவின் பொட்ரீரோ உற்பத்தி நிலையத்தில் OTC முறையை பயன்படுத்தும் போது வெளியேற்றப்படும் திறன் அளவானது சுற்றுப்புறத்திலுள்ள வெப்பநிலையை விட 100 செல்சியஸ் (200 பாரன்கைட்) அதிகமாக இருக்கிறது.

FASTING - GOOD FOR HEALTH


நோன்பு

மறுமைக்கு மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு என்றால் அது மிகையாகாது. உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்புத மாதம். இந்த ஆரோக்கியத்தை நம்மில் எத்தனை பேர் நோன்பின் மூலம் வென்றுள்ளோம் என்றால் அது மிக சொற்பமே.
நோன்பு வைத்து கடமையை நிறைவேற்றி நன்மையைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதை முறையாக வைத்து, முறையாக திறக்காத காரணத்தால் நாம் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்வதற்குப் பதில், உள்ளத்துக்கு சோர்வையும், உடலுக்கு நோயையும் பெற்றுக் கொள்கிறோம். ஆரோக்கிய வழியில் நோன்பு வைப்பது பற்றி தெரிந்து கொண்டு, நோன்பு வைப்போமானால் நாம் இம்மை மறுமை நன்மைகளைப் பெற்று உள்ளத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் நேரம் காலை 3-5 மணி வரை உள்ள 2 மணி நேரமாகும்.
இதற்கு உதாரணமாக ஆஸ்துமா நோயாளிகள் இந்த அதிகாலை நேரத்தில் மூச்சு விட சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருப்பதைக் காணலாம். ஏனெனில், தூங்கும் போது இயங்குவதை விட விழித்திருக்கும் போது நுரையீரலால் சிறப்பாக இயங்க முடியும். அதனால் இயற்கையாக தூக்கம் கலைந்து நுரையீரல் இயக்கத்துக்கு உடல் உறுப்புகள் உதவி செய்கின்றன.
இந்த நுரையீரல் அதிகப்படியாக இயங்கும் ஸஹர் நேரத்தில் (அதிகாலையில் நோன்பு வைப்பதற்காக) நாம் அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த புத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது. இதன் மூலம் மற்ற உறுப்புக்கள் புத்துணர்வு பெறுகின்றன. இந்த நுரையீரல் அதிகமாக இயங்கும் காலை நேரத்தைத்தான் யோகா கலையில் அமுத காற்று வீசும் நேரம் என்றும் கூறுவார்கள்.
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டுப் பழகிப் போன நமது வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இத்ன மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

இயற்கைப் பொருட்களைக் கொண்டு பல் துலக்குங்கள்

காலையில் பல் துலக்க இரசாயன முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகிப்பதை விட, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பற்பசைகளை உபயோகித்து பல்துலக்குவது நல்லது.
ஸஹர் நேரத்தில் தூக்க கலக்கத்தில் கடமைக்காக உட்கார்ந்து சாப்பிடாமல், சுய உணர்வுடன் தனக்கு விருப்பமானதை நன்றாக மென்று சாப்பிடுங்கள். "நொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு" என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று சாப்பிடப் பழகிக் கொண்டாலே, அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை குறைந்து விடும். நன்றாகச் சாப்பிட்ட திருப்தி உண்டாகும்.
குளிர்ச்சியான நீரைக் குடிக்காதீர்கள். இதனை உடல் ஜீரணிப்பதில்லை. குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ்கிரீம், ஜுஸ் போன்றவைகள் நாக்கில் உமிழ் நீரோடு கலப்பதில்லை. அதனால் முறையான ஜீரணம் ஏற்படாமல், உடலுக்கு நன்மைக்குப்பதிலாக தீங்கே உண்டாகும். ஜீரணித்திற்காக இதமான வெந்நீரை கொஞ்சம் குடிக்கலாம். தொடர்ந்து வெந்நீரையே குடிப்பது நல்லதல்ல. அதிகச் சூட்டோடு பருகும் பொழுது அதில் உள்ள உயிர் சக்தியின் நிறை இருப்பதில்லை. எனவே காய்ச்சி ஆற வைத்த நீர் மிகவும் சிறந்தது.
பகல் நேரத்தில் டீ, காபி, சிகரெட், வெற்றிலை, பொடி போன்ற அனைத்து வகையான கெட்ட பழக்கங்களிலிருந்தும் நீங்கி விடுவதால், நோன்பு அவரது உடல்நிலை நலிவடைவதிலிருந்து காப்பாற்றி, அரவது உடல் சீராக இயங்க உதவுகின்றது. இந்த நேரத்தில் தான் உடலில் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன.
நோன்பு வைப்பவர்கள் அதிகமாக பொறுமையிழந்து தவறு செய்யும் ஒன்று இருக்கின்றதென்றால் அது நோன்பு திறக்கும் நேரம் தான். அதிகாலையிலிருந்து மாலை வரை பொறுமையாக இருந்த ஐம்புலன்களையும் அடக்கி வைத்தவர்கள் நோன்பு திறக்கும் போது பொறுமையிழந்து கட்டுப்பாடு இல்லாமல் கண்ட உணவுகளையும் உண்பது நோன்பின் நோக்கத்தையே வீணாக்கி விடும்.
நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமிலங்கள் வயிற்றில் சுரந்திருக்கும். குடலிலும் வயிறிலும் இன்னும் தேவையற்ற கழிவுகளும் தங்கியிருக்கும்.இவைகளை நீக்கும் சக்தி சுத்தப்படுத்தும் சக்தி தேனுக்கு உண்டு. பேரீத்தம் பழத்தை தேனில் நனைத்து நன்றாக மென்று சாப்பிட்டு நோன்பு திறக்கும் போது, உடலில் ஊறிக் கிடக்கும் தேங்கிய கழிவுகள் நீக்கப்படுகின்றன.
எலுமிச்சப் பழச்சாற்றில் தண்ணீர் தேன் கலந்து குடிக்கலாம். விரைவாகக் குடிக்காமல் நிதானமாகக் குடிக்க வேண்டும். ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுடனும் தேன் கலந்து குடிக்கலாம். ஆனால் எந்த ஜுஸ் சாப்பிட்டாலும் சீனியும் ஐஸ்சும் சேர்க்கக் கூடாது. இளநீரும் நோன்பு திறக்க நல்லதொரு பானமாகும். இளநீர் வயிற்றின் நச்சுக்களை சிறுநீராக மாற்றி வெளியேற்றி விடும்.
ஐஸ் கிரீம், குளிர்பானங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், காப்பி, டீ, புகைபிடித்தல், எண்ணெய்யில் மூழ்கி எடுத்த சம்சா, பஜ்ஜி போன்றவற்றின் மூலம் நோன்பு திறக்கக் கூடாது. வாயு நிறைந்த பானங்கள் மூலமும் நோன்பு திறப்பது உடல் நலத்தை பாழடித்து விடும். வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்தி விடும். விட்டமின் சி உள்ளதாகக் கூறி விற்கப்படும் செயற்கைப் பானங்கள், பவுடர் கரைசல்களால் தயாரித்த பானங்களையும் தவிர்த்தல் மிகவும் நல்லது.
இவ்வாறு முறையாக நோன்பு திறந்து 1 மணி நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது உடல்நலத்துக்கு மிகவும் சிறந்து. அவ்வாறு உண்ணாமல் இருக்கும் போது, வயிறு தன் அமிலத்தை முழுவதும் வெளியேற்றி விடும். பிறகு நாம் உணவை நன்றாக மென்று உண்பதால் நன்கு ஜீரணம் ஏற்படும். வயிற்றில் கோளாறு எதுவும் ஏற்படாது. ஏற்கனவே கோளாறு இருக்குமானால் அதுவும் குணமடையும். வயிறு முட்ட உண்பதையும், கார உணவை உண்பதையும் தவிர்ப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் நோன்பு வைக்கப் பழகிக் கொண்டால் உடலில் தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்றவை இருக்காது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையில்லாத கொழுப்புகள் குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறையும், உடம்பு வனப்பு அதிகமாகும். முக்கியமாக இரவுத் தொழுகையில் மிகவும் விருப்பத்துடன் சோர்வில்லாமல் தொழ முடியும். உடலில் புது தெம்பு பிறக்கும். மனதில் புது உற்சாகம் உண்டாகும்.

நோன்பும் சில முதல் உதவிகளும்

மயக்கம் :
நோன்பு நேரத்தில் சிலருக்கு மயக்கம் உண்டாகலாம். அப்படி ஏற்பட்டால் மேல் உதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக அழுத்தம் கொடுத்து 1 நிமிடம் விடுவதன் மூலம் அந்த மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.
தலைவலி :
கை கட்டை நகத்திற்கு கீழ் பகுதி முழுவதும் நகத்தைக் கொண்டு 1 நிமிடம் தொடர்ந்து விட்டு விட்டு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதேபோல மற்ற கை கட்டை விரலிலும் கொடுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணர்வீர்கள். 99 சதவீத தற்காலிக தலைவலிகள் இதன் மூலம் குணமடைந்து விடும். இன்ஷா அல்லாஹ்.
வயிற்று உபாதைகள் :
தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.
கால் கட்டை விரல் பக்கத்து விரலுக்கும் அதற்கு அடுத்த விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஜவ்வு பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்தால், வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல்போட்டது போன்றது போல் இருப்பது, உடல்வலி போன்றவை தீரும்.
மூச்சுத் திணறல் :
இரண்டு மார்பு காம்புக்கும் இடைப்பட்ட பகுதியில் நெஞ்சு குழிக்கு நேர்மேல் ஆட்காட்டி விரலை வைத்து லேசாக ஒரு நிமிடம் வைத்தால் மூச்சுத் திணறல் சரியாகும்.
மேற்கண்ட எளிய முறைகளை பின்பற்றி நீங்களும் நோன்பை அழகாக வைத்து, இதே முறையை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து அவர்களும் நோன்பின் பூரண மகத்துவத்தைப் பெற்றுக் கொள்ள உதவுங்கள்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஆரோக்கியமான உடலையும், மனதையும் கொடுத்து, நோன்பை முழுமையாக நிறைவேற்றி, அதற்காக முழுமையான நற்கூலியைப் பெற்றுக் கொண்டவர்களாக நம் அனைவரையும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்!!
- ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ -
88; ☼ ☼ ☼ ☼ -

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

                               


சம்பவம் 1:
தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் 'நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்' என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.
சம்பவம் 2:
தஞ்சையிலுள்ள எனது 'தி ஹெல்த் ரிசோட்' மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.
சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?
உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.
டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.
அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன.
தேவையில்லாத இரசாயன பொருட்கள்:
கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.
கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள்
கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி
இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை
அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்
குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.
பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்
மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்
பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்
சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன
குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.
விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்
விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி
விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி
விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்
விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு
விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்
விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை
விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)
விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்
விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை
விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி
சவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார்.
தேவையற்ற கட்டுபாடுகள்:
கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா?
திட்டமிட்ட சதியா?
பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.
சிசேரியன் மோசடிகள்
அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?.
உண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை.
அந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் 'ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்' என்றேன்.
அவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா? என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.
தேவையில்லாத மருத்துவ செயல்கள்:
விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது.
உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.
சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:
சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.
தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-
மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.
தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-
வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.
சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது.
சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?:
கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.
கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.
ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.
இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:
கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.
வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:
கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.
பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .
கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:
கணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது (பார்க்க படம் ).
ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்..
நன்றி: http://naturecuredr.com

Nuclear Trash: கதிரியக்க கதிரியக்கம் மாசுபாடு

                            



கதிரியக்கம் என்பது புரோட்டான் (ஆல்பா துணிக்கை) எலக்ட்ரான் (பீட்டா துணிக்கை) மற்றும் காமா (மின் காந்த கதிர்வீச்சு) போன்ற சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சாகும். இந்த கதிர்வீச்சு தான் கதிரியக்க மாசுபாட்டிற்கு காரணமாகும் கதிரியக்கமானது. அயனி கதிரியக்கம், அயனியாகà ��க கதிரியக்கம் என இருவகைப்படும். அயனியாக்க கதிரியக்கமானது கிரகிக்கும் அணுக்களை தாக்குகறிது. இவை குறைந்த ஊடுருவும் தன்மையுடையது. அயனி கதிரியக்கமானது அதிக ஊடுருவும் தன்மையுடையது. பெரிய மூலக்கூறு உடைப்பிற்கு இந்த அயன்கதிரியக்கம் காரணமாகும்.
சுரங்கத்தொழில், புளோடோனியம் மற்றும் தோரியத்தின் தூய்விப்பு மற்றும் உற்பத்தி, வெடிக்கத்தக்க மற்றும் அணுஆயுதங்கள், அணு சக்தி நிலையம், எரிபொருள் மற்றும் கதிரியக்க சமதானி உற்பத்தி போன்றவை கதிரியக்கத்திற்கு மனிதனால் உருவாக்கப்படும் ஆதாரங்களாகும்.
பொதுவாக கதிரியக்கத் மூன்று வகைப்படும்: அவை
ஆல்பா துணிக்கை - இவற்றை ஒரு துண்டு காகிதம், மனிதனின் தோல் மூலம் தடுக்கப்படுகிறது.
பீட்டா துணிக்கை - இவை மனிதனின் தோலில் ஊடுருவிச் செல்லும். இதனை ஒரு சிறிய துண்டு கண்ணாடி மற்றும் உலோகம் போன்றவற்றின் மூலம் தடுக்கப்படுகிறது.
காமா கதிர்கள் - இலை மனிதனின் தோல் பாதிக்கப்பட்ட செல்கள் மூலம் ஊடுருவிச் செல்லும் இவை அதிக தொலைதூரத்திற்கு உடுருவும் இவற்றினை அடர்த்தியான பலமான நுண்சேர்பொருளின் (concrete) மூலம் தடுக்கப்படுகிறது.
ஆதாரங்கள் மற்றும் முறைகள் கதிரியக்க மாசுபாட்டிற்கு காரணமாக ஆதாரங்களின் வகைகள் பின்வருமாறு :
அணு சக்தி நிலையம்
அணு ஆயுதம்
போக்குவரத்து
அணுச்சிதைவு அப்புறப்படுத்ததல்
யுரேனியம் சுரங்கத்தொழில்
கதிரியக்க மாசுபாட்டினால் உயிரியலில் தாக்கம் :
கதிரியக்க சமதானியஜன் விளைவானது, கதிரியக்கத்தின் உயிரிகளை பாதிக்கும் தன்மை மற்றும் இவை, உயிரணுக்களை உட்கிரகிக்கும் வெளியேற்றம் தன்மையை பொருத்து இருக்கும். பெரும்பாலும் இந்த கதிரியக்கம் உயிரணுக்களின் ஒரு செல்லை தாக்குகிறது. இதனால் மனிதன் மற்றும் பிற பல செல்களுடைய உயிரணுக்களில் சிக்கல�¯ ˆ ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒரு செல் பாதிப்படையும் போது மற்ற செல்களையும் எதிராக தாக்குகிறது. ஒரு மனிதனின் உடலில் உள்ள உறுப்புகளை தோல் குடல் மற்றும் இரத்த நாள செல்களானது மனிதனின் உணர்ச்சி தூண்டுதல் மையமாக உள்ளது.
உயிரியல் மூலக்கூறுகளுடன் கதிரியக்கம் வினைபுரியும் போது அயன்களை உருவாக்குவதால் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இந்த அயனிகள் முற்றுப்பெறாத அயனிகளாக (free radical) இருந்து, புரதம், சவ்வுகள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் போன்றவற்றை சேதப்படுத்துகிறது. கதிரியக்கமானது டி.என்.ஏவின் தனிப்பட்ட அடிப்பக�¯ �தி (அதாவது தைமின்) அழித்தல் ஒரு புரியிழை உடைப்பு, இருபுரியிழை உடைப்பு, வெவ்வேறு டி.என்.ஏ புரியிழையின் பிணைப்பில் சேதம் போன்றவற்றினால் டி.என.ஏ முற்றிலும் பாதிப்படைகிறது. இதனால் புற்றுநோய் பிறப்பில் கோளாறு மற்றும் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.

கதிரியக்கம் தாக்கம் மனித உடலில் குறைவாக இருக்கும் பொழுது செல்களிலுள்ள உயிர்வேதியியல் திருத்தம் செய்யும் முறையின் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கிறது. ஆனால் அணுமின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களில் வெளிப்படும் கதிர்கள்ளானது இந்த உயிர் வேதியியல் முறையினால் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனா ல் மக்கள் தொகையில் புற்றுநோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அறிவியலறிஞர்களால் கூட இதற்கான நிரந்திர தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை
அறிவியல் விஞ்ஞானிகளில் மத்தியில், மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதிரியக்கத்தின் (கறைந்தபட்ச) அளவில் வேறுபட்ட கரத்துக்கள் நிலவி வருகிறது. இதில் சில அறிவியல் விஞ்ஞானிகள் குறைந்தபட்ச அளவுக்கு கீழே கதிரியக்கம் இருந்தாலும் அதாவது நுண்ணிய அளவு இருந்தாலும் உயிரியலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றனர். ஆனால் சில விஞ்ஞானிகளின் கருத்து யாதெனில் குறைந்தபட்ச அளவுக்கு கீழே இருந்தால் அவை மனிதனின் உயிரியலில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

1945 - ல் ரோஸீமா மற்றும் நாகசாகி என்ற பகுதியில் நடந்த அணுகுண்டு வெடிப்பில் ஜோம்ஸ் நீல் மற்றும் அவருடைய ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் அதிக அளவு மக்கள் புற்றுநோய் இரத்த புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் போன்றவற்றால் பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது
கதிரியக்க மாசுபாடு சுற்றுப்புறச்சூழலில் ஒரு முக்கிய பிரச்சனையாக கருத்தப்படுகிறது. எனவே கதிர்வீச்சு சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் அணுமின் நிலையங்களில் செய்யப்படும். செயல்களில் போன்றவற்றின் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கதிரியக்க மாசுபாட்டின் வகைகள் மற்றும் விளைவுகள் :
புறஊதாக் கதிர்கள்: சிற்றலையின் அலைநீளம் 100-300 நேனோமீட்டர் மற்றும் அதிக ஆற்றலானது 260 நேனோமீட்டர் அலை நீளத்தில் இருக்கும் பொழுது டி.என்.ஏ வை பாதிக்கின்றது. இவை கண்விழித்திரையிலுள்ள செல்களை தாக்கும் போது குருட்டுத்தன்மை ஏற்படுகிறது. மேலும் இவை தோலின் வளர்ச்சி செல்களை பாதிக்கிறது. தோலில் கொப்பளங்கள் ஏற்படுதல் மற்றும் தோலில் சிவப்பேறுதல் (தோல் புற்றுநோய்) போன்ற நோய்கள் ஏற்படுகிறது. நம்முடைய தோலில் உள்ள நிறமிகள் புறஊதாக்கதிர்கள் தாக்கத்திலிருந்து பாதுகாக்குகிறது. ஆனால் இந்த நிறமிகளில் பற்றாக்குறை ஏற்படும் போது தோல் உலர்வு நோய் உண்டாகிறது. மேலும் இந்த புறஊதாக்கதிர்கள், புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

காஸ்மிக் கதிர்கள்:காஸ்மிக் கதிர்களின் கதிர்வீச்சுத் தன்மை 0.001 ஏ ஐ விட குறைவாகும். ஆனால் இதன் ஆற்றல் அதிகமாக இருப்பதால் உயிரணுக்களை எளிதில் தாக்குகிறது. அதிஷ்டவசமாக விண்வெளியின் படை மண்டலத்தில் (stratosphere) இந்த கதிர்வீச்சு சிக்கிக் கொள்வதால் குறைந்த அளவு மட்டும் புவிளை வந்தடைகிறது.

மற்ற கதிர்வீச்சான ஊடுக்கதிர் (x - கதிர்), இவை உயிரணுக்களின் ஊடுருவி செல்வதால் பல்வேறு உயிரணுக்களின் பரிணாம வளர்ச்சியானது குறைகிறது.

கதிர்களின் தாக்கமானது 1909 - ல் யுரேனியம் சுரங்கத் தொழிலாளர்களிடம் ஏற்பட்ட புற்றுநோயின் மூலம் கண்டறியப்பட்டது. உயர்வான மின் நிலையங்களில் பயன்படுத்தும் அல்லது மேம்படுத்தும் பன்மயமி (polyploid) கதிரியக்கத்தை கட்டுப்படுத்தும் ஒருவகை இயக்கமுறையாகும் அணுசக்தி குறையும் பொழுது ஓரகத்தனிமம் (isotopic) I - 132 மற்றும் Sr-90 மூலம் உடனடியாக தாக்குகிறது. கதிரியக்க I -131 ஆனது கேடயச் சுரப்பியுள்ள சாதாரண அயோடின் (I -27) மூலம் செறியை எடுத்துக்கொள்கிறது. இதனால் இரத்த வெள்ளையணுக்கள், எலும்பு பகுதி, மண்ணீரல், நண்நீர்க்கணு போன்றவற்றை தாக்குகிறது.
மேலும் கண் பார்வை கோளாறு, மலட்டுத் தன்மையை அதிகரித்தல், தோல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் கட்டி போன்றவை உருவாகிறது. Sr-90 என்பது கால்சியத்தின் கோளாறு. இவை எலும்புகளை தாக்கி எலும்பு புற்று நோயை உருவாக்குகிறது. வரலாற்று சம்பந்தப்பட்ட எடுத்துக்காட்டாக ஜப்பானின் ஹீரோஸிமா மற்றும் நாகசாகி பகுதியில் 1945ல் ஏற்பட்ட  கதிரியக்க குண்டு வெடிப்பு ஒரு உதாரணமாகும்.


Free Audio & Video Convertor's: இலவச ஆடியோ/வீடியோ மாற்றிகள்

                                             



இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன்படுத்திப் பார்ப்பது என் பழக்கம். அந்த வகையில் சென்ற வாரம் தரப்பட்ட இரண்டு புரோகிராம்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்கவும் மிக எளிதாகவும் உள்ளன. வேகமாகவும் செயல்படுகின்றன.

ஆடியோ பைல்கள் பல பார்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் இவை உள்ளன. இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். பெரும்பாலான ஆடியோ இயக்கும் புரோகிராம்கள், அனைத்தையும் இயக்கு வதில்லை. எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன், விண்டோஸ் இதனை இயக்க புரோகிராமà � ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஆடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.

இந்த இலவச ஆடியோ கன்வர்டர் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரிhttp://www.freemake.com/free_audio_converter/. மேலே குறிப்பிட்ட அனைத்து பார்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு, நமக்குத் தேவையான பார்மட்டில் மாற்றித் தருகிறது.இதே போல பல வீடியோ பார்மட் பைல்களில் இருந்து, ஆடியோவினை மட்டும் பிரித்தெடுத்து, நாம் குறிப்பிடும் பைல் பார்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG பார்மட் பைல்களில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.

பார்மட் மாற்றிய ஆடியோ பைல்களை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும், அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான பார்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆடியோ பைல்களை இணைக்கலாம்.

இதே நிறுவனம் வீடியோ பார்மட்களை மாற்றித் தரும் வீடியோ கன்வர்டர் புரோகிராமினையும் (Freemake Video Converter.) கொண்டுள்ளது. இதுவும் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறப்பாக இயங்குகிறது. இந்த புரோகிராம் http://www.freemake.com/free_video _converter/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. , AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS ஆகிய பார்மட் வீடியோக்களை இது கையாள்கிறது. டிவிடிக்களில் இருந்து வீடியோ பைல்களைப் பிரித்து தனி பைலாக்கித் தருகிறது. YouTube, Facebook, MTV, Vimeo, Dailymotion, ComedyCentral போன்ற 50 க்கும் மேற்பட்ட இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் வீடியோ பைல்களை மாற்றித் தருகிறது.
 
இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, வீடியோ, போட்டோ ஸ்லைட் ‌ஷோ, எம்பி3 ஆகிய பைல்களை யு-ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் எம்பி3 பைல்களைக் கொண்டு இந்த புரோகிராம் மூலம் ஸ்லைட் ஷோக்களை உருவாக்கலாம். பல வீடியோ பைல்களை இணைக்கலாம்.
இந்த ஒரு வீடியோ கன்வர்டர் புரோகிராம் தான், CUDA மற்றும் DXVA ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக, இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு புரோகிராம்களும் விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகின்றன.

Chicken Varuval: பசுமை கோழி வறுவல்

                               



தேவையான பொருட்கள்

கோழிக்கறி - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகாய் - 6
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
புதினா - 1/2 கட்டு
தேங்காய் துருவியது - 1/2 மூடி
தயிர் - 1/2 குழிக்கரண்டி
கசகசா - 1 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவைக்கேற்ப

பசுமை கோழி வறுவல் தாளிக்க:

சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2

பசுமை கோழி வறுவல் செய்முறை:

கோழிக்கறியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், கசகசாவை அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலை, புதினா இலையை விழுதாக்கவும்.

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும், சோம்பு, பட்டை, லவங்கம் இவற்றை தாளிக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சிக்கன் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும்.

அரைத்த தேங்காய், புதினா கொத்தமல்லி இலை விழுது இவற்றைச் சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும்.

சிக்கன் வெந்ததும், தயிரை ஊற்றி குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து பசுமை கோழி வறுவல் இறக்கவும்.

How the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்?




ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.

சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் அதிக எடை கொண்டவை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.

10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட்' 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.

அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றையொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆக்கிமிடிஸ் கருதினார்.

காற்றில் அமிழ்ந்துள்ள பொருட்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும். கியாஸ் உள்ளிட்ட எல்லா திரவங்களுக்கும் ஆக்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனுக்குச் சமமான எடையை விட இலேசாக இருந்தால் பறக்கும்.

Talking Frogs | `பேசும்' தவளைகள்!

                              



`மொழி' என்றதுமே அது மனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று என்ற எண்ணம்தான் நமக்கு ஓடுகிறது. ஆனால் மொழியும், மொழி சார்ந்த பிரச்சினைகளும் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. தவளைகளும், தேரைகளும் கூட அவற்றின் சொந்த மொழியில் பேசிக்கொள்கின்றன.

சமீபத்திய உயிரியல் ஆராய்ச்சிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. தவளைகளும், தேரைகளும் ஒன்று ஒன்று தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் ஒலி சமிக்ஞை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

தவளைகளும், தேரைகளும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை தங்களுக்கே உரிய பிரத்தியேக மொழிகள் மூலம் தத்தமது இனத்துக்கு இடையே தொடர்பு கொள்கின்றன.

நூற்றுக்கணக்கான தவளைகள் ஒரே சமயத்தில் ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். பொதுவாக இனச்சேர்க்கைக்காகவே தவளைகள் இப்படிக் குரல் கொடுக்கின்றன.

ஒரு பெண் தவளை இந்தப் பெரிய கூச்சலுக்கு நடுவே தனது வகையைச் சேர்ந்த ஆண் தவளையின் குரலைத் தனியாக இனங்கண்டு கொண்டு அதைத் தேடிச் சென்று இனவிருத்தி செய்கிறது என்கிறார்கள் உயிரியல் வல்லுநர்கள்.

Smoking & Heart | புகை பிடித்தலும், இருதயமும் | புகை பிடிப்போருக்கு மாரடைப்பு




மாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும்
வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.

புகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந்தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் நேரும் இருதய நோய்களில், 20 சதவீதம் புகைபிடிப்பதாலேயே ஏற்படுகின்றன. புகை பிடிப்பதால் இருதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? சிகரெட்டில் இருந்து வரும் புகையில், 4,000 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் கலந்துள்ளன.

இவற்றில் முக்கியமான இரண்டு பொருட்கள், இருதயத்தையும், உடலின் அனைத்து உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களையும் வெகுவாக பாதிக்கிறது.

1) நிக்கோட்டின் 2) கார்பன் மோனாக்சைடு

நிக்கோடினும், இருதய ரத்தக்குழாயும்:

சிகரெட் புகையிலுள்ள நிக்கோடின், இருதய தசைக்கு செல்லும் ரத்தகுழாயிலும், உடலின் மற்ற முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாயிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவ்வுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைபடுகிறது. ஒரு சிகரெட் புகைத்தாலே, அதிலுள்ள நிக்கோடின், 45 நிமிடங்களுக்கு ரத்தக்குழாய்களில் இறுக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.

நிக்கோடினும், ரத்தநாளங்களில் அடைப்பும்:

சிகரெட்டில் உள்ள நிக்கோடின் ரத்தக்குழாய்களில், கொழுப்புச் சத்து படிவதை விரைவுபடுத்துகிறது. கொழுப்பு படிவங்கள் எளிதில் வெடிப்பு பிளவுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இதுவே புகை பிடிப்போருக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

கொழுப்பு சத்தும், நிக்கோடினும்:

நன்மை பயக்கும் கொழுப்பான எச்.டி.எல்., ரத்தக்குழாயில் படியவிருக்கும் அல்லது படிந்திருக்கும் கொழுப்பு சத்தை, அதிலிருந்து அகற்றி, கல்லீரலுக்கு எடுத்து சென்று, இறுதியில் குடல் வழியாக வெளியேற்றுகிறது. தீய கொழுப்பான எல்.டி.எல்., கல்லீரலில் உருவாகும் கொழுப்பையும், உண்ணும் உணவில் இருந்து குடல் வழியாக ரத்தத்தில் கலக்கும் கொழுப்பையும், எடுத்து செல்லும் இவை, நேராக ரத்தக்குழாயில் படிய வைக்கின்றன. டிரைகிளசைடும் நமக்கு நல்லதல்ல. இந்த மூன்று கொழுப்புகளில், எல்.டி.எல்., கொழுப்பை அதிகமாகப் படிய வைக்கும் வேலையை நிக்கோட்டின் செய்கிறது.

கார்பன் மோனாக்சைடும், அதன் விளைவுகளும்:

கார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் போய் அமர்ந்து கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாததால், இருதயமும், மற்ற உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன. இருதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்து, அதனால் ரத்த ஓட்டமும் குறையும்பட்சத்தில், ஆக்சிஜனும் குறைவாக இருந்தால் அதன் பக்கவிளைவுகள் பன்மடங்காகி, மாரடைப்பு வரலாம் அல்லது நாளடைவில் இருதய தசை மிகவும் பலவீனமாகலாம்.