Thursday, February 21, 2013

திருமண வாழ்வின அஸ்திவாரமே புரிதலும் நம்பிக்கையும்தான்!




கணவன் மனைவி ஆகிய‌ இருவரிடமும் சரியான புரிதலும், மனப் பக்குவமும்இல்லாததே ஆகும். அதுமட்டுமின்றி இன்றைய கால த்தில் திருமணம் செய்து கொள்பவர் கள், திருமணத்தை ஒரு விளையாட் டாகவே நினைப்பதால்தான், அந்த உறவுக்கு முடிவை தேடிக்கொள்கின் றனர். இந் த உலகில் இருக்கும் உறவு முறைக ளிலேயே கணவன்- மனைவி உறவு தான் மிகவும் சிறந்தது.
-
இத்தகைய உறவை வாழ்நாள் முழுவ தும் தக்க வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களே உண் மையான அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த உறவில் அனைத்து உறவுகளுமே அட ங்கும். எனவே இத்தகைய அருமையான திருமண உறவிற்கு முறிவு என்னும் பெயரில் இருக்கும் விவாகரத்து ஏற்படாமல் இரு ப்பதற்கு ஒருசில டிப்ஸ்களை பட்டியலிட் டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரி ந்து கொள்ளுங்கள்…
-
*கணவன்-மனைவி இருவருக்குள்சண்டை வருவது சாதாரணம் தான். ஆனால் அந்த பிரச்சனை உடனே தீர் ந்துவிட வேண்டும். இல்லையெனில் அந்தபிரச்சனையே இருவ ருக்கும் இடையில் பெரும் பிரிவை ஏற் படுத்தும். அதற்கு முதலில் அந்த பிரச்சனையைப் பற்றி இருவ ரும் பொறுமையாக பேச வேண்டும். இந் நேரத்தில் ஈகோவை மனதில் கொண்டு நடந்தால், பின் இருவரும் வாழ்நாள் முழுவதும் பிரிய வேண் டி வரும்.
-
*சந்தோஷமான வாழ்க்கை அமை ய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. சண்டைகள் வந்தால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கான வழிமுறைகளை யும் யோசித்து, அவற்றை தீர்ப்பதற்கு முயல வேண்டும். இவ்வாறு தீர்வு கண் டால், நிச்சயம் விவாகரத்தை தவிர்க்க முடியும்.
-
* விவாகரத்து நிச்சயம் வேண்டும் என்று நினைக்கும் தருவாயில், அத னை தடுப்பதற்கு நடந்த சண்டையை மறந்து, இருவரும் சந்தோ ஷமாக இருந்த தருணங்களை நினைத்து பார்த்தால், கண்டிப்பாக விவாகரத்தை தவிர்க்க லாம்.
‘தவறுசெய்வதால்தான், சண்டைகள் வருகின்றன. இந்த உலகில் தவறு செய்யாதவர்களே இருக்க மாட்டார்கள். மேலும்தவறு செய் தவர்கள், தவறை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் அந்த உறவு மிகவும்அழகாக இருக்கும். எனவே தவறு யார் மீது இருந்தாலும், அப்போது ஈகோ பார் க்காமல், மன்னிப்பு கேட்க வேண்டும்.


 
-
*நடைமுறை மற்றும் பழக்க வழக்கங்க ளை சூழ் நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். அதை விட்டு எப்போதுமே ஒரே மாதிரி செயல்பட்டால், பின் இருவருக்கும்இடையில் எந்த நேரமும் சண்டைவந்து கொண்டே இருக்கும். ஆக வே ஒரு சில மாற்ற ங்கள் கூட விவாகரத்தை தடுக்கும்.
-
* திருமண வாழ்வில் சரியான புரிதல் மற்றும் நம்பிக்கை தான் மிகவு ம் முக்கியமானது. அந்த சரியான புரிதல் மட்டும் இல்லா விட்டால், அது இறுதியில் நம்பிக்கையின் மையை ஏற்படுத்திவிடும். பின் எந்நேரமும் சண்டை வருவதோடு,இறுதியில் விவா கரத்து வரை சென்று விடும். எனவே எதுவா னாலும் மனதில் கொண்டு செயல்படாமல், அதனைபேசி இருவ ரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள் வதன் மூலம், பிரித லை தடுக்கலாம். ஆனால் அது சற்று தாமத மாகி விட்டாலும், பின் விவாகரத்து தான் முடிவு.
-
இவை அனைத்தையும் மனதில் கொண்டு செயல் பட்டால், விவாகரத்து ஏற்படுவதைத் தடுத்து, சந்தோ ஷமான திருமண வாழ்வை மேற்கொள்ளலாம்.

----------------------------------------
விதை2விருட்சம்

No comments:

Post a Comment