Monday, September 24, 2012

புற்று நோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: வைட்டமின் "ஏ" குணப்படுத்துகிறது!






புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் "ஏ" சிறந்த முறையில் செயலாற்றுவதாக இங்கிலாந்தில் உள்ள யார்க் பல்கலை ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தக் கண்டுபிடிப்பை புற்றுநோய் சிகிச்சையில் "புதிய உதயம்" என்றே இவர்கள் வர்ணிக்கின்றனர்.

கேன்சர் உருவக்காக் கூறுகளுக்கும், வைட்டமின் ஏ பற்றாக்குறைக்கும் தொடர்பிருப்பதாக இவர்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் புற்றுநோய் நீக சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தலாம் என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தினமும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுப்பொருட்களில் வைட்டமின் ஏ நிரம்பிய சத்துக்களை சேர்க்குமாறு இவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

புரோஸ்டேட் கேன்சர் செல்கள் மீது நடத்திய ஆய்வில் இவர்கள் இந்த வைட்டமின் ஏ தொடர்பை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் யார்க் பல்கலை. பேராசிரியர், நார்மன் மெய்ட்லேன்ட் இதனை மற்ற கேன்சர்களுக்கும் பயன்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.

உடனே மெடிக்கல் ஷாப்பிற்குச் சென்று வைட்டமின் ஏ மாத்திரைகளை வாங்கிப் போட்டுக் கொள்ளவேன்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஏனெனில் மாத்திரை வடிவங்களில் ஓவர் டோஸ் ஆனால் அதுவே நச்சாகவும் கேன்சர் உருவாக்க காரணைகளாகவும் மாறிவிடும் என்று இவர் எச்சரித்துள்ளார்.

மாறாக தின்சரை உணவில் வைட்டமின் ஏ உள்ள எண்ணெய்ச் சத்துள்ள மீன், கேரட்கள், லிவர், சிகப்பு மிளகு, மற்றும் பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும் என்கிறார் இவர்.

புற்று நோய் உருவாகி விட்டாலும் சிகிச்சையில் வைட்டமின் ஏ-யை பயன்படுத்தினால் அது பரவுவதை திறம்பட தடுக்க முடியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஏற்கனவே கேன்சர் சிகிச்சையில் 'ரெடினாய்க் ஆசிட்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கேன்சர் நோய் வருவதால் ஏற்படும் இறப்பை 80% தடுக்க முடிகிறது என்று கூறியுள்ளது இந்த ஆய்வு.

பொதுவாக 'புரோஸ்டேட் கேன்சர்' காரணிகளை ஆராயும் போது ரத்தத்தில் வைட்டமின் ஏ அளவு குறைவாக இருப்பதை ரத்த மாதிரிகளில் கண்டிருக்கின்றனர். ஆனால் இதன் செயல்பாட்டை யாரும் தெரிவிக்கவில்லை. இப்போது உயிரியல் தொடர்பை இந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வின் முழு விவரம் 'நியூக்ளீக் ஆசிட்" என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. 

No comments:

Post a Comment