Friday, December 14, 2012

ஒரு கொடுங்கோலனின் மரணம்!

                                             

32 ஆண்டுகள் இந்தோனேசியாவின் சர்வாதிகாரியாக கொடுங்கோல் ஆட்சிப் புரிந்தவன் சுகார்த்தோ!
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையோடு சுமார் 15 லட்சம் கம்யூனிஸ்ட்டுகளையும் - கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர்களையும் அழித்தொழித்தவன்.
கடைசிக்காலத்தில் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களும் செயலிழந்து சிகிச்சை பலனளிக்காமல் தனது 86வது வயதில் ஞாயிறன்று ஜகார்த்தாவில் மரணமடைந்தான்.

                              
1920-களில் இந்தோனேசியாவில் உதயமான கம்யூனிஸ்ட் கட்சி படிப்படியாக வளர்ந்தது. உலகப்போர்கள் காலத்திலும், அதைத்தொடர்ந்து இந்தோனேசிய சுதந்திரப் போராட்டத்திலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தீரத்துடன் போராடிய இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, 1960 காலத்தில் உலகிலேயே அதிகாரத்தில் இல்லாத மிகப்பெரும் கம்யூனிஸ்ட் கட்சியாக உருவெடுத்தது. நாளுக்கு நாள் இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் செல்வாக்கு அதிகரித்தது.
இது, இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதியும், இடதுசாரிகள் - வலதுசாரிகள் - ஏகாதிபத்திய சக்திகள் - ராணுவ அதிகாரிகள் என அனைவருக்கும் ‘நல்லவராக’ செயல்பட முனைந்த சுகர்னோவுக்கும், இந்தோனேசிய வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கும், இந்தோனேசியாவை ஆசியாவில் தங்களது முக்கிய தளமாக கைப்பற்ற துடித்து வந்த அமெரிக்காவுக்கும் பெரும் சவாலாக இருந்தது.

                             
இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியை வளரவிட்டால், இந்தோனேசியா மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆசியாவும் கம்யூனிஸ்ட் பூமியாக மாறிவிடும் என்று அஞ்சிய அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது நாசகர உளவு அமைப்பான சிஐஏ-வை ஏவிவிட்டது.
அதிபர் சுகர்னோவுக்கு எதிராக சிஐஏ துணையுடன், ராணுவ கலகம் நடத்தப்பட்டது.
அப்போது இந்தோனேசிய ராணுவத்தில் மேஜர் ஜெனரல் பதவி வகித்த சுகார்த்தோ, ராணுவ மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையை பயன்படுத்தி ராணுவத் தளபதி பதவியை கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து பெரும் ராணுவக் கலகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.
1965 அக்டோபர் 18ந்தேதி ராணுவ வானொலிகள் அதிகாரத்தை கைப்பற்றியதாக அறிவித்தன. அதைத்தொடர்ந்து இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக தடைசெய்யப்படுகிறது என்று முதல் அறிவிப்பாக சுகார்த்தோ வெளியிட்ட பிரகடனம், இந்தோனேசிய அரசியல் வரலாற்றில் என்றும் அழியாத கருப்புப் புள்ளியாக பதிவானது.


                              
இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட உடன் கட்சியின் உறுப்பினர்கள், ஊழியர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கட்சியை ஆதரிப்பவர்கள் என கருதப்பட்ட சீன வம்சா வளியைச் சேர்ந்த இந்தோனேசியர்கள் என ஒருவர் விடாமல் அனைவரையும் கொன்று குவிக்கப்பட்டனர். அந்தக்காலத்தில் இந்ததேனேசிய கடல் எல்லையில் பிடிக்கப்பட்ட பல சுறா மீன்களின் வயிற்றில் எண்ணற்ற மனித மண்டை ஓடுகளும். தலைகளும் கிடைத்தன. அவைகள் அத்தனையும் கம்யூனிஸ்ட்டுகளின் தலைகள்! உலகிலேயே மிகக் குறுகிய காலத்தில் 15 லட்சம் கம்யூனிஸ்ட்டுகளை நரவேட்டையாடி இட்லருக்கும் மேல் நான் கொடூரமானவன் என்பதை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பணிந்து சேவகம் புரிந்த சொறிநாய்தான் இந்த சுகார்த்தோ!

                        
கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக இந்தோனேசிய கம்யூனிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களும் தேடித் தேடி அழிக்கப்பட்டனர்.
1965 லிருந்து 1968 வரை கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி இந்தோனேசியாவின் தீவுப்பகுதிகளான பாபுவா, ஏக் மற்றும் கிழக்கு தைமூர் (இது தற்போது தனி நாடாகிவிட்டது) ஆகிய பகுதிகளில் சுகார்த்தோவின் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், ராணுவத்தை ஏவி படுகொலை செய்யப்பட்டனர்.
சுகார்த்தோவை எதிர்த்தவர்கள் அனைவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
1965லிருந்து 1997 வரை 32 ஆண்டுகள் ராணுவ பலத்துடன் சர்வாதிகாரம் நடத்தி வந்த சுகார்த்தோவின் ஆட்சிதான் 20ம் நூற்றாண்டில் உலகிலேயே மிகக்கொடூரமான, மிக மிக ஊழல் மலிந்த ஆட்சியாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.
சுகார்த்தோவால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்ட இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் பல தலைவர்கள் இன்றைக்கும் தலைமறைவாக பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                             

1997ல், சுகார்த்தோவின் பலம் குன்றத்துவங்கிய காலகட்டத்தில், அவரை எதிர்த்து அரசியலுக்கு வந்த முதல் ஜனாதிபதி சுகர்னோவின் மகள் மேகவதி சுகர்னோபுத்ரிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கத் துவங்கியது. இதைத்தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இத்தகைய கொடூரமான - மனிதவிரோதி - ஊழல் பேர்வழி மிக அமைதியான முறையில் மரணமடைந்தது வருத்தமளிக்கிறது. இவனை நடுரோட்டில் நிற்க வைத்து சித்திரவதை செய்து கொன்றிருக்க வேண்டும். வரலாறு இதுபோன்ற சுகார்த்தோக்களுக்கு எதிர்காலத்தில் பாடம் கற்பிக்கும் என்று நம்புவோம்!


source:   http://santhipu.blogspot.com/2008/01/blog-post_28.html

No comments:

Post a Comment