Wednesday, November 7, 2012

உலக போலீஸ்காரர் போல செயல்பட்டால் அமெரிக்காவை தரை மட்டம் ஆக்குவோம்: தலிபான் எச்சரிக்கை



அமெரிக்கா அதிபராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் ஒபாமாவுக்கு ஆப்கானிஸ்தானில் செயல்படும் தலிபான் தீவிரவாதிகள் இணையதளம் மூலம் எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
 தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் மூலம் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில்,

 
’’மீண்டும் அதிபாராகி இருக்கும் ஒபாமாவுக்கு ஒன்றை நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். ஆப்கானிஸ்தான் மண்ணில் உங்கள் படைகள் தோல்வி அடைந்து உள்ளன. அதை நீங்கள் ஓப்புக்கொள்ள வேண்டும். எனவே அமெரிக்க படைகளை உடனடியாக இங்கிருந்து வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் அமெரிக்காவை நாங்கள் தரைமட்டம் ஆக்குவோம்.
 
ஆப்கானிஸ்தானில் என்ன நிலைமை நிலவுகிறது என்பதை ஒபாமா புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்ற கூடாது. எங்கள் புனித பூமியில் இனிமேலும் நீங்கள் இருக்க கூடாது. இனியாவது உலக போலீஸ்காரர் போல அமெரிக்கா செயல்படுவதை நிறுத்த வேண்டும். உங்கள் மக்கள் பிரச்சினைகளை மட்டும் நீங்கள் தீர்க்க பாருங்கள். உலக மக்களின் வெறுப்பை சம்பாதிக்க முயற்சிக்காதீர்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது.


நன்றி :::::::நக்கீரன்:::::::::

No comments:

Post a Comment