Friday, November 2, 2012

உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ள பெருமையைப் பெற்றுள் ளபஞ்சாப் தம்பதி:திருமணமாகி 87 ஆண்டுகள் ஆகிறது.

                                         World S Longest Married Couple Is From Punjab


லண்டன்: இங்கிலாந்தில் வாழும் பஞ்சாபைச் சேர்ந்த கரம் சந்த், கத்தாரி தம்பதிக்கு திருமணமாகி 87 ஆண்டுகள் ஆகிறது. உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ளவர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர்.
கலாச்சாரத்திற்கு பெயர் போன இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விவாகரத்து என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. சின்ன சின்ன காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து பெறும் காலமாகிவிட்டது. இந்நிலையில் உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ள பெருமையை பஞ்சாபைச் சேர்ந்த கரம் சந்த், கத்தாரி தம்பதி பெற்றுள்ளனர்.
இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் வசிப்பவர் கரம் சந்த்(107). அவரது மனைவி கத்தாரி(100). கடந்த 87 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 8 குழந்தைகளும், 28 பேரக்குழந்தைகளும் உள்ளனர். உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ள பெருமையைப் பெற்றுள்ள அவர்கள் விரைவில் கின்னஸ் சாதனைபுத்தகத்தில் இடம் பெற உள்ளனர்.
இது குறித்து கரம் சந்த் கூறுகையில், கத்தாரியை சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பேன். அவரை ஜோக்ஸ் சொல்லி சிரிக்க வைப்பேன். இது தான் என்னுடைய ரொமான்ட்டிக் வழி என்றார். கத்தாரி கூறுகையில், நான் இளமையாக இருக்கையில் தினமும் இரவு அவருக்கு சுடச் சுட சமைத்துக் கொடுப்பேன். நாங்கள் சைவம் என்பதால் நிறைய காய்கறிகள் வாங்குவேன். அவருக்கு சத்தான உணவு கிடைக்கும்படி பார்த்துக் கொள்வேன் என்றார்.

No comments:

Post a Comment