Tuesday, November 20, 2012

திரும்பி வருவார் என இறந்த கணவனை 3 வருடங்களாக பாதுகாத்து வந்த ரஷ்யப் பெண்

திரும்பி வருவார் என இறந்த கணவனை 3 வருடங்களாக பாதுகாத்து வந்த ரஷ்யப் பெண்

ரஷ்யாவின் யாரோஸ்லோவுல் பகுதியில் உள்ள செமிப்ராடோவோ கிராமத்தில் பெந்தகோஷ் சபையில் பணியாற்றி இறந்துபோன தனது கணவனின் உடலை கடந்த 3 வருடங்களாக ஒரு பெண் பாதுகாத்து வந்திருக்கிறாள். கைகள், தலையில்லாமல் இருந்த அந்த உடலை பிளாஸ்டிக் பையில் வைத்து பாதுகாத்து வந்த அந்த மம்மி உடலை காவலர்கள் மீட்டுள்ளனர்.

பின்னர் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு அவள் மீது விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 5 குழந்தைகளுடன் தனித்து வாழ்ந்து வந்த அவள் கடந்த 2009-ம் ஆண்டு இறந்த தனது கணவனின் உடலை மறைத்து வைத்து பாதுகாத்த உண்மை தெரியவந்துள்ளது. வெளியே சொல்லாதவாறு பாதுகாத்து வந்த அவள், இறந்த தனது கணவரை குழந்தைகளை தினந்தோறும் பிராத்தனை செய்தும், உணவுபடைத்தும் வணங்கி வரசெய்திருக்கிறாள்.

ஆனால் அவள் அந்த அறைக்குள் நுழைந்து நேரில் பார்த்து தனது கணவனிடம் ஒருபோதும் பேசியது கிடையாதாம். யாருடனும் பழகாத அவர்கள் இறந்த உடலின் துர்நாற்றத்தை மறைக்க வாசனைப்பொருட்களை பயன்படுத்தி காற்றை சுத்தப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

தனது கணவர் ஒருநாள் அதிசயமாக திரும்ப வருவார் என்ற நம்பிக்கையில் அதை வைத்திருந்ததாக அவள் கூறியிருக்கிறாள்.


:::::::::: மாலைமலர்::::::::::::::::::

No comments:

Post a Comment