Tuesday, November 20, 2012

இங்கிலாந்தில் விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ரூ.160 கோடி நஷ்டஈடு

                                      இங்கிலாந்தில் விபத்தில் கால்களை இழந்த பெண்ணுக்கு ரூ.160 கோடி நஷ்டஈடு


இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஆக்னஸ் சொலியா (17). இவர் தனது 13-வது வயதில் பள்ளியில் படித்து கொண்டிருந்தார். அப்போது தனது தாயார் கரென் ஹுட்டுடன் ஒரு ஆடம்பர காரில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது அவர் பயணம் செய்த கார் மீது ஒரு லாரி பயங்கரமாக மோதியது. அதில் அவரது தாயார் கரென் ஹுட் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஆக்னஸ் தனது 2 கால்களையும் இழந்தார். அவரது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். பலத்த சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தார். தற்போது அவர் கல்லூரியில் படித்து வருகிறார். 

இந்த நிலையில் விபத்தில் தான் பாதிக்கப்பட்டது குறித்து லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட்டு 2 கால்களையும் இழந்த ஆக்னசுக்கு ரூ.160 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. 

விபத்து வழக்கில் இங்கிலாந்தில் வழங்கப்பட்ட அதிகபட்ச நஷ்டஈடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்சமாக ரூ.85 கோடி நஷ்டஈடு வழங்கப்பட்டு இருந்தது.

 ::::::::::::::::::::::::::மாலைமலர்:::::::::::::::::::::::::::::::

No comments:

Post a Comment