Friday, December 28, 2012

வெறும் கால் நடை பழக்கம் கால் வலி மற்றும் பிற வலிகள் நீங்க நமக்கு உதவுகிறது ..

வெறும் கால் நடை பழக்கம் கால் வலி மற்றும் பிற வலிகள் நீங்க எவ்வாறு நமக்கு உதவுகிறது என்று பார்ப்போம்.


                                

உங்கள் பாதத்தின் அடியில் உங்கள் உடல் உறுப்புக்களின் உணர்ச்சி நரம்புகள் முடிகின்றன. நீங்கள் இந்த புள்ளிகளை மசாஜ் செய்தால் வலி நிவாரணம் கிடைக்கும். உதாரணமாக இதயத்தில் வலி இருந்தால் இடது காலில் மசாஜ் செய்ய வேண்டும். பொதுவாக இந்த புள்ளிகள் மற்றும் அதை இணைக்கும் உறுப்புகள் நம் பாதத்தில் உள்ளது. இது பற்றிய விவரங்கள் அக்குபஞ்சர் பற்றிய ஆய்வுகள் அல்லது உரைநூல்களில் காணக் கிடைக்கின்றன.



                                          

இறைவன் மிகவும் அற்புதமாக நம் உடலை வடிவமைத்துள்ளா
ன் . அவன் நாம் எப்போதும் இந்த புள்ளிகள் தரையில் படுமாறு நம்மை நடக்க செய்துள்ளான். இவ்வாறு நடக்கும் போது நம் உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்படைகின்றன.
அதிகாலையில் வெறும் காலில் நடப்பது நம் எலும்புகளுக்கும் உடம்பிற்கும் நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, வெறும் காலில் நடக்கும் போது கால்தசைகள் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
                                

வெயில் காலங்களில் அதிகாலையில் புல்வெளியில்அல்லது இலை தழைகளின் மேல் நடக்கும் போது உடல் குளிர்ச்சி அடைகிறது.
இயற்கை எழில் மிக்க பூங்காக்களில் நடக்கும் போது கால் வலி நீங்க துணைபுரிவதோடு மனமும் இலேசாகிறது.
எனவே தினமும் நடப்போம்!

--------------------------------------------------------------------------------------------------நன்றி:தமிழ்வளம்

No comments:

Post a Comment