Tuesday, August 20, 2013

அண்ணன் என்னடா, தம்பி என்னடா..??

வேறு கிரகம் தேடி
அலைந்து கொண்டிருக்கும்
மனிதா..??
கிரகம் பிடித்தவன் போல்
கிறுக்கு கொண்டு அலையாமல்
இறுதி வரை உடன் வரும் உறவை 
கொஞ்சம் தேடிக்கொள்..!!

வயல் வரப்பு பிரச்சனையிலும் 
சொத்து தகராறிலும்
முதுகலை பட்டம் பெற்று
மீசை முறுக்கும் நீங்கள்,
உறவுகளை கொண்டாடுவதில்
ஆரம்ப நிலை தேற தவறி விட்டீர்கள்..!!!





அமாவசை காகம் தேடி
அருகில் அமர்ந்து
உணவளிக்கும் மாமனிதர்கள்
வீடு தேடி வரும் உறவை
வாயளவில் வரவேற்று
வரவேற்பறையில் கைகுலுக்கி
அனுப்பி விட்டு சிரிப்பது
என்ன கில்லாடி தனமோ புரியவில்லை..???

உறவுகளுக்குள் உரிமை
இருக்கிறதோ இல்லையோ,
பொய்களும்,புலம்பல்களும்
வக்கிரமும்,வயித்தெரிச்சல்களும்
நிரம்பி பொங்கி வழிகின்றது..!!
பாசம் பல நேரங்களில் பொய்த்து
வேஷம் கட்டவே துடிக்கிறது..!!

சொத்துக்களை கட்டி அழுபவன்
சொந்தபந்தத்தை அறுத்து எறிகிறான்,
தங்கத்திற்கு மதிப்பு கொடுப்பவன்
தங்கமான உறவுகளை மிதிக்கிறான்..!!
பங்கு வர்த்தகம் பேசும் இவனோ
பச்சை தண்ணீர் தர மறுக்கிறான்..!!

ரத்தபாசம் துறந்து வீணா போனவனுக்கு
அண்ணன் என்ன, தம்பி என்ன
எல்லாருமே ஒன்று போல் தெரியும் 
கண்ணாடி பேழை காட்சி பொருள் தான்..!!

கயிறு கட்டி உறவு கொண்டாடும்
சில நாட்களோடு மட்டும்
உறவுகள் நின்று விடாமல்,
உயிர் கூட்டி உணர்வு தந்து
இறுதி வரை வர வேண்டும்..!!


............................

(Mano Red)

No comments:

Post a Comment