Wednesday, January 16, 2013

உலகை ஆட்சி செய்வது அமெரிக்காவோ, ரஸ்யாவோ அல்ல யூதர்களின் மூளையே..

உலகை ஆட்சி செய்வது அமெரிக்காவோ, ரஸ்யாவோ அல்ல யூதர்களின் மூளையே..

ஐரோப்பாவில் பொருளியல் தெரிந்தவர்களை சந்தித்து பேசினீர்களானால் அவர்கள் இன்றைய பொருளாதார நெருக்கடி குறித்து அவ்வளவு அலட்டிக் கொள்ளவில்லை என்பது தெரியவரும். அமெரிக்க யூதர்கள் சீன மூடர்களை எப்படி ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதைத்தான் இங்கு பலர் கேலியாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் பொருளாதாரம் யூதர்களின் கைகளில்தான் இருக்கிறது. மிக நுட்பமாக எதிர்கால பொருளாதாரத்தை கணக்கிட்டு சீனா உட்பட பல ஆசிய ஆபிரிக்க, மத்திய கிழக்கு மூடர்களை அவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக உலகின் முதலாவது பொருளாதாரத்தை சீனாவும், இந்தியாவும் நெருங்கிக் கொண்டிருப்பதாக தலைப்பாகை கட்டிக் கொண்டிருந்தார்கள். அந்தத் தலைப்பாகை உள்நாட்டில் சீன கம்யூனிஸ்டுக்களுக்கு ஒரு மதிப்பைக் கொடுத்தது. சட்டைக் கொலரை நிமிர்த்திக் கொண்டார்கள்.

அவர்களின் முதுகைத் தடவி அமெரிக்க கடன்பத்திரங்களை மெல்ல மெல்ல வாங்கச் செய்தார்கள். AAA நிலையில் இருந்த பெறுமதி மிக்க ஆவணங்களை வேண்டினால் சீன பொருளாதாரம் மேன்மையடையும். அமெரிக்காவின் கடன் பத்திரங்களே நம் கையில் இருப்பதால் விரைவில் அமெரிக்காவையே முந்திவிடலாம் என்றும் சீனர்கள் மனப்பால் குடித்தார்கள்.

ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு என்பதுபோல சீனர்களின் பெரும் பணம் சிக்குப்படும்வரை காத்திருந்தார்கள் அமெரிக்க யூதர்கள். தமது பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஈராக், ஆப்கான் போர்களை நடாத்துவதாக போக்குக் காட்டி, மறுபுறம் சீனர்களுக்கும், இந்தியர்களுக்கும் தலைப்பாகை கட்டியபடியே பொறிக்கிடங்கிற்குள் இறக்கிக் கொண்டிருந்தார்கள் அமெரிக்க யூதர்கள்.

காலம் அப்படியே நகர…

சென்ற வாரம் யாரும் எதிர்பாராமல் தமது கடன் பத்திரங்களின் பெறுமதி நிலையை AA+ நிலைக்கு அமெரிக்கா வீழ்த்தியது. அந்த வீழ்ச்சி சீனாவிற்கு பில்லியன் கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. கடைசி அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியை சுமந்தது சீன மூடர்கள்தான் என்பது அடுத்தநாள்தான் தெரிய வந்தது. சீனா கடும் சீற்றமடைந்தாலும், சீனர்களின் பழைய கறள் கட்டிய கம்யூனிச மூளை திருடன் கையில் தேள் கொட்டியது போல அமைதி காத்தது.

மறுபுறம் சில மாதங்களுக்கு முன் பிரான்ஸ் தலைமையில் உலகின் அலையன்ஸ் மாறுவதாக அமெரிக்கா ஒரு நாடகத்தை ஆரம்பித்தது. வடக்கு ஆபிரிக்க நாடுகளில் ஜனநாயகப் போராட்டங்கள் ஆரம்பித்தன. கொஸ்னி முபாரக் பதவி இழந்தார், கடாபியின் சொத்துக்கள் உறைய வைக்கப்பட்டன, ரூனீசியா முடிந்தது, சிரியாவிற்குள் போராட்டம் புகுந்தது, ஏமன் வீழ்ந்தது.





ஏன் இந்த சர்வாதிகாரிகள் வீழ்த்தப்பட்டார்கள்..?

அத்தனை சர்வாதிகாரிகளுக்கும் பக்க பலமாக இருந்தது அமெரிக்க யூதர்களின் மூளைகள் மட்டுமே. சர்வாதிகாரிகளையும், குடும்ப ஆட்சிகளை நடாத்தும் தலைவர்களையும் உற்சாகப்படுத்தி சொந்த நாடுகளின் செல்வங்களை சூறையாடும்படி தூண்டி விட்டார்கள். நாட்டின் செல்வங்களை சுரண்டி மேலைநாடுகளில் பாதுகாப்பாக வைக்கும்படி ஆலோசனை கூறினார்கள்.

ஏல்லா சர்வாதிகார மூடர்களும் தமது நாடுகளையே மேலை நாட்டு வங்கிகளில் அடகு வைத்தார்கள். கொஸ்னி முபாரக் வைத்த பணம் கொஞ்ச நஞ்சமல்ல அத்தனை செல்வங்களும் உறைய வைக்கப்பட்டன. கடாபி முதலிட்ட பணம் எண்ண முடியாத தொகை, அத்தனையும் உறைய வைக்கப்பட்டன. சர்வாதிகாரிகளின் நாடுகளில் ஜனநாயக போராட்டத்தை தூண்டி விட்டது எதற்காக என்பது மெல்ல மெல்ல அம்பலமாகியது. பிரான்ஸ் தலைமையில் ஐரோப்பா இந்த சர்வாதிகாரிகளின் செல்வங்களை உறைய வைத்தது. கேணல் கடாபிக்கு ஓர் இன்ரசிற்றி ரயில் வண்டியையே பரிசாகக் கொடுத்த இத்தாலி அவருடைய செல்வங்களை ஏப்பம் விட்டது.

அதுபோல கருணாநிதி குடும்பம் உட்பட எண்ணற்ற இந்திய முட்டாள்கள் சுவிஸ் வங்கியில் சிக்குப்பட்டார்கள். மௌனமாக இருந்து, இரகசியம் காத்த சுவிஸ் வங்கி கண்களை திறந்துள்ளது. இப்போது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்த இந்தியர்களின் பெயர் பட்டியல் விக்கிலீக்ஸ் மூலம் அம்பலமாகிறது. விக்கிலீக்ஸ் என்பதே இந்த நாடகத்தின் ஓரங்கம் என்பதையும் ஆசிய ஆபிரிக்க மூடத் தலைவர்கள் அறிந்து துடிதுடிக்கிறார்கள்.


                     

இது மட்டுமா..

ஏற்கெனவே பயங்கரவாத பட்டியலிடப்பட்ட அத்தனை போராட்டக் குழுக்களின் பணங்களும் சூறையாடப்பட்டுவிட்டன. பின் சர்வாதிகாரிகளின் பணம் சூறையாடப்பட்டது. அடுத்த கட்டமாக சீன கம்யூனிச சர்வாதிகாரிகள் முட்டாள்களாகிவிட்டார்கள். இன்னும் பலர் முட்டாள்களான செய்திகளை இப்போதே சுட்டிக்காட்டினால் பலரால் தாங்க முடியாது.

கதை இத்துடன் முடியவில்லை..

அமெரிக்க யூதர்கள் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான திட்டங்களையும் தீட்டியிருப்பார்கள்…

அடிக்கடி ஒரு உப கதை சொல்வார்கள்…

அமெரிக்கர்கள் சந்திரனுக்கு அனுப்பிய ராக்கெட்டும், ரஸ்யர்கள் அனுப்பிய ராக்கட்டும் சந்திரனில் இருந்து யூத மொழியில் பேசிக்கொண்டது என்பார்கள்.

உலகை ஆட்சி செய்வது அமெரிக்காவோ, ரஸ்யாவோ அல்ல யூதர்களின் மூளையே..


  


மேலைநாடுகளின் பொற்காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துவிட்டாலும் மற்றய நாடுகளை கற்காலத்திற்குள் தள்ளிவிடுவதில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.

மேலை நாடுகள் தமது பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொண்டு உலகப் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது பொய்யல்ல உண்மையே..

இதுபோல மேலும் பல மூடர்களின் கதைகள் உள்ளன..




--------------------------------------------------------
அலைகள் மேலைத்தேய பார்வை 09.08.2011
நன்றி: http://www.alaikal.com/

No comments:

Post a Comment